Tuesday, July 05, 2005

நினைவுப் பெட்டகம் - 2


என்ன பண்ற? – அண்ணலும் தொடர்ந்தான்

சமையல் - அவளும் தொடர்ந்தாள்

என்ன மெனு?

தங்கபஸ்பம் சாம்பார், முத்து மணி பொரியல்

இதோடா ... எங்க வீட்லயும் அதேதான், கொஞ்சம் மெச்சூர்டா பேசுவோமா?

பேசுவோமே

ஜோக் அனுப்பட்டா?

இது கரெக்ட்.. அனுப்பு

A ஜோக்தான் எனக்கு தெரியும்

உன் சங்காத்தமே வேணாம். Bye... டா

தெரிஞ்சத தெரியும்னுதானே சொல்லனும் .. உனக்கு வேண்டாம்னா நான் சொல்லல

இங்க பார் சுஜீ.. இதை நினைவு வச்சுக்க.. என்னோட செல் எங்க வீட்டு கூடத்துல நடு டேபிள்ல இருக்கும்.. ஆகாஷ் எடுப்பான், அம்மா, அப்பா எல்லாரும் அட்டென்ட் பண்ணுவாங்க... உன் பேரு சுஜிதா.. ஓ கே.. இதை நியாபகம் வச்சுகிட்டு மெசேஜ் அனுப்றதானா மேற்கொண்டு பேசலாம்... இல்லன்னா வேண்டாம்.... ஐ ஆம் சீரியஸ் அபவ்ட் திஸ்.. ஓ கே?

சரி பவி.. நீ சொன்னா சரி பவி- என்றான்

ஒரு தார்மீக நியதிக்கு உட்பட்டு குறுந்தகவல்கள் பறிமாறப்பட்டன. அத்தனையும் வெத்து . வேஸ்ட் மெசேஜ்கள். ஆனாலும் அதனை எதிர்பார்த்தும். பதில் பறிமாரியும் இரு இதயங்கள் காத்திருந்தன.. ஒரு அரை மணி நேரத்திற்கு மெசேஜ் வரவில்லை என்றால்.. நகம் கடித்து, முகம் வியர்க்கும் அவஸ்தையை அனு அனுவாய் அனுபவித்தாள் பவித்ரா.

ஏண்டா இன்னைக்கு வேக் அப் மெசேஜ் அனுப்பல?

(வேக் அப் மெசேஜ் என்பது.. அழகான காதல் கவிதை அல்லது கமா, புள்ளி, கோலன், பிரகெட் இவைகளால் வரையப்பட்ட நாய் குட்டி, பூனை குட்டி ஓவியமோடு இணைந்த குட்மார்னிங் ஆகும். பல நாட்கள் ... எப்டி டா இப்டி கவித எழுதற? கடவுள் தான் எனக்கு இப்டி ஒரு எஸ்.எம். எஸ் ப்ரண்ட் கொடுதிருக்கார்.. கிரேட் டா நீ – என அனுப்பி இருக்கிறாள். அது.. அது.. அதுதான் சுஜீத் – என்று பதில் வரும். அவ்வாறான மெசேஜ்கள் அவளது செல்லின் டெம்ப்ளேட் நினைவகத்தில் சேமிக்கப்பட்டு .. அவ்வப்போது எடுத்து பார்த்துக் கொள்ளப்படும்.

ஏண்டா இன்னைக்கு வேக் அப் மெசேஜ் அனுப்ல? – மீண்டும் அனுப்பினாள்.

அதான் பவி.. நானும் காலைல இருந்து காத்திட்டு இருக்கேன்.. என் ப்ரண்ட் இன்னும் அனுப்ல.. அதான் – என்று பதில் அனுப்பினான்

அடப்பாவீ ... ஓசி வாங்கி அனுப்னியா?

ஆமா

பாராட்டும் போது .. அது .. அது.. அதுதான் சுஜீத்னு சொன்ன ?

மடையன் தான் உக்காந்து கவிதை எல்லாம் எழுதிட்டிருப்பான்.. ரெடிமேடா கிடைக்குது... அதை வாங்கி அனுப்பிட்டிருந்தேன்... என்ன .. இன்னைக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு - என பதில் வந்தது

என்னோட பேசாத

நான் எங்க பேசினேன்.. எஸ். எம். எஸ். தான அனுப்பினேன்

ஆமா ... இப்ப ப்ரீ.. அதனால அனுப்பற.. வர்ற ஒன்னாந்தேதிலேர்ந்து ஒரு மெசேஜ்க்கு ஒரு ரூபா.. அப்ப அனுப்புவியா?

ஏன்.. நீ அனுப்பமாட்டியா?

மாட்டவே மாட்டேன்... தண்ட செலவு யாராவது பண்ணுவாங்களா?

ஆனால்.. தண்ட செலவு செய்தார்கள். வழக்கமாய் ஆகும் கட்டணத்தை விட இருமடங்கு ஆகியது.

அப்பா கிட்ட செல்லம் கொஞ்சி கொஞ்சம் பணம், தம்பியிடம் கைமாத்தா மூனு வட்டிக்கு கொஞ்சம் பணம்.. அம்மா தரும் பாக்கெட் மணியில் சேமித்தது என ஈடுகட்டினாள்.

காலையில் மெசேஜ் வர லேட் ஆனால் “ என்ன உங்களுக்குள்ள சண்டையா? மெசேஜே காணோம் “ என நக்கலடித்தான் தம்பி.

சமயத்தில் இவள் இல்லாத போது – அவனது கேள்விகளுக்கு – ஆமா, இல்ல, தெரியுமே, ஓகோ.. அப்டியா? – என்ற ஆயத்த விடைகளை அனுப்பி இவள் இல்லாத குறையே தெரியாதவாறு பார்த்துக் கொண்டான் தம்பி.

ஆனால் இரண்டு நாட்களுக்குள்ளாகவே... இந்த மெசேஜ்லருந்துதான் நீ பதில் அனுப்பற.. போன மெசேஜ்க்கு உன் தம்பி அனுப்பினான் பதில்... இதெல்லாம் நியாய தர்மம் இல்ல பவி.. ஆமா.. சொல்லிட்டேன் – என மெசேஜ் வந்தது.

தூக்கி வாரிப் போட்டது இவளுக்கு. எப்டிடா கண்டு பிடிச்ச?

உன் விரல்களின் இனிய வாசம் சுமந்த வார்த்தைகளை
என் விழிகள் பகுத்தறியும் பவி – என்றான்.

நல்லா இருக்கு.. யார் எழுதி கொடுத்தாங்க ? - என்றாள்

யாரும் இல்ல.. தி கிரேட் பொயட் சுஜீத் அவர்களே எழுதியது – என்றான்

இதுபோன்ற மதிப்பிடற்கரிய தகவல்களை அனுப்பி, அனுப்பி, அனுப்பி..... அவளது கட்டை விரல், குட்டை விரல் ஆனது. கண்ணை மூடிக்கொண்டு மெசேஜ் அனுப்பும் அளவுக்குப் பாண்டித்யம் பெற்று திகழ்ந்தாள். பாண்டிய மன்னன் இருந்தால் “ யாரங்கே..?” ந்னு கைதட்டி.. ஒரு சூப்பர் பிகரை கூப்பிட்டு.. கொஞ்சம் ஜொள்ளோடு அவளைப் பார்த்து “ இந்தப் பொற்கிழியை அந்தப் பவித்ராவுக்குக் கொடு “ என்று ஆணையிட்டிருப்பார். ஓவர் மேக்கப்புடன் வரும் அந்தப் பணிப்பெண்னும் பித்தாளை தாம்பாளத்தில் வைத்து அதை கொடுத்திருப்பாள்.

ஒரு சமையல் பன்றியா? ஒரு கோலம் போட்றியா, இல்ல .. பொண்ணா லட்சணமா உக்காந்து ஒரு டீ. வீ. சீரியலாவது பார்த்து அழறியா... எதுவும் கிடயாது.. எப்ப பாரு மெசேஜ்.. மெசேஜ்.. மெசேஜ்.. உஙப்பாவை சொல்லனும்.. செல்லு வாங்கி கொடுத்து.. தண்ட செலவுக்கு பணமும் தராரே அவரை சொல்லனும்...- புலம்புவாள் அம்மா. ஆனாள் சமயத்தில் பின் பக்க தோட்டத்தில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது... “ இந்தா.. உனக்கு மெசேஜ் வந்திருக்கு “ – என செல்லை கொண்டுவந்து கிணற்று மேடையிலும் வைப்பாள் அம்மா.
அய்யோ அம்மா... என் செல்லம்..
--------------------------------------------------
பயப்படாதீங்க... அம்மா வந்தாலும்....தொடரத்தான் செய்யும்..
எனவே தொடரும்...,

5 comments:

Pavals said...

இது எங்க போயி முடியப்போகுதோ :-)

Jayaprakash Sampath said...

மொத்தத்தையும் இப்பத்தான் சேத்து வெச்சுப் படிச்சேன். இயல்பான நகைச்சுவை. ரொம்ப நல்லா எழுதறீங்க..

posted by: prakash

வீ. எம் said...

பத்மபிரியா,
பாகம் 2 - நல்லா இருக்கு
ஒரு சின்ன் சந்தேகம் - இது கதையா இல்லை சுயசரிதையா ?? :)

வீ எம்

ப்ரியன் said...

ஐய்யோ அடுத்த பதிவு எப்ப பத்மா?????

பத்ம ப்ரியா said...

Hi
Raasa, prakash, V.M, Priyan & jayabalan... thanks for your esteemed comments.

Rasaa - ithu Mutrum, subam enbathil pooi mudiyum.

VM - it is not my autobiography , may be it is my friend's..in which i observed a lot.

Priyan - I am writting the 3rd part and i will blog it at the earliest.

Jayabalan - My next story may be the 18 attempts made by a chennai citizan