Sunday, September 18, 2005

நிலா - பௌர்ணமி

அது என்ன அது... காஸிப்ல பேசப்படற ஹீரோயின்ஸ் எல்லாரும் ஒரு சூட்கேஸ் எடுத்துகிட்டு.. பூனா போற ரயில்ல ஜன்னலோர சீட்டா உக்கார்ந்து, பின் பக்கம் தலை சாய்ஞ்சு... வெத்து பார்வை பாப்பீங்க.. ஆபீஸ் ப்ரண்டோ.. லவ் பண்ணவனோ ஜன்னல் பக்கம் நின்னு, திராபையா “ உன் முடிவை மாத்திக்கவே மாட்டியா நிலான்னு“ டயலாக் பேசனுமா?

உன்னை அப்டி பேச சொன்னமா நாங்க? உனக்கு எப்டி தெரிஞ்சுது நான் பூனா போறேன்னு?

நந்தினியும் ஷிவாவும் போன் பண்ணாங்க

நந்து... என்னடி இது? ஷக்தி... தண்ணி வாங்கிட்டு வர்ரியா? தாகமா இருக்கு

ம்.. என்னை இங்கேர்ந்து போடாங்கற.. சரி.. வாங்கிட்டு வறேன் - அவன் கிளம்பி போனதும்

நந்து... என்னடி இது...? இவனுக்கு ஏன் சொன்ன?

நானும் ஷிவாவும் எவ்ளோ சொல்லியும் நீ நிக்கல, முன்னபின்ன தெரியாம பூனாக்கு நீ போயி.. ? நீ இல்லாம எங்களால இருக்க முடியாது நிலா.. ஐ திங்க் ஷக்தி லவ்ஸ் யு

போதும் .... நிறுத்ரியா....அவன் வர்ரான்?

இந்தா.. வாட்டர் பாட்டில்.. நந்து... நீ எதாவது மேகசின் வாங்கிட்டு வாயேன்.. பூனா வரைக்கும் மேடம் படிச்சுக்கிட்டே போகட்டும் - என்றான்

ம்.. இப்ப நீ.. என்னை இங்கர்ந்து போடீங்கற.. சரியா?

நீ நிலா மாதிரி இல்ல.. ஸ்மார்ட்... சட்னு புரிஞ்சுக்கற- நந்தினி கிளம்பி போனதும்

ம்.. இப்ப சொல்லுங்க மேடம்.. எதுக்கு இப்ப பூனா? ட்ரான்ஸ்பர் எல்லாம்?

ப்ச்..ஷக்தி .. லீவ் மீ அலோன்

இந்த பீட்டரெல்லாம் வேணாம்மா.. கொஞ்சம் தமிழ்லயே பேசலாமா..ட்ரெய்ன் இன்னும் சென்னைலதான் இருக்கு

என்ன தெரியனும் உனக்கு?
நீ ஏன் இன்னும் உன் லவ்வை என்கிட்ட சொல்லலைன்னு தெரியனும்?

யார் உன்னை லவ் பன்றது?
வேறயாரு...? நீங்கதான் மேடம்!

நாங்க சொன்னமா அப்டி?
அதான் இப்ப சொல்லுங்கன்னு சொல்றோம்

ப்ளீஸ் ஷக்தி.. நான் உன்னை லவ் பன்னல... லவ் பன்னவே இல்லை
ப்ராப்ளமே இல்ல.. நான் உன்னை லவ் பன்றேன்.. அது போதும் .. வா .. கிளம்பு.. ஸ்வாமிஜி முன்னடி நம்ம கல்யாணம் நடக்கட்டும்

நான் இப்ப கல்யாணம் செஞ்சுக்கற மூட்ல இல்ல.. பூனா போற மூட்ல இருக்கேன்.

இந்தா உனக்கு பிடிச்ச பாலகுமாரன் - என நாவல்களை கொடுத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள் நந்தினி.

நந்து இவனை கூட்டிண்டு நீ கிளம்பு... ஆட்டோல போய்டு....இப்ப பஸ் இருக்காது

அப்ப நீயும் வா நிலா.. ம்.. கிளம்பு.. பூனா தனியா போய் என்னடி பன்னுவ

அங்க நான் ஒன்னும் தனியா இருக்க மாட்டேன்.. நம்ம ஆபீஸ் ப்ராஞ்ச் இருக்கு.... நீலகண்டன் சாரும் அங்கதான் போயிருக்கார்.. அவாத்து மாமி எனக்கு நல்ல பழக்கம்.. அவங்களோட இருந்துப்பேன்.

அங்க மட்டும் இந்த காஸிப் வராதா...? நீ போறத்துக்கு முன்னாடி பூனாக்கு அது போயிருக்கும்.

இல்ல நந்தினி.. மேடம் ப்ளான் உனக்கு புரியல.. மேடம் அங்க போய் செட்டில் ஆகி ஒரு ரெண்டு மாசம் ஆனதும் வர்மாவோ, ஷர்மாவோ எவனாவது ஒரு மாங்கா மாட்டுவான்.. அவனை லவ் பன்னுவாங்க.. அவனுக்கு மேட்டார் தெரியாதுன்னு அவனை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுன்டு அப்படியே செட்டில் ஆயிடுவாங்க.. மனசில என்னை நினைச்சுக்கிட்டு அவனோட வாழ்வாங்க..!

ஷக்தி.. திஸ் ஈஸ் டூ மச்.. ஓவரா பேசற... நான் அடிச்சா தாங்க மாட்ட...!

இதோடா.. உண்மையை சொன்னா எரியுதோ?

என்ன உண்மை?

உன்னோட ஷிவா மேட்டர் என்கிற உண்மை

எழுந்து போடா..

நாந்தான் அதெல்லாம் மன்னிச்சு.. மறந்து .. பெருந்தன்மையா உனக்கு வாழ்க்கை தர தயாரா இருக்கேனே..! என்னையும் போடாங்கற!? - நந்தினியை பார்த்து ஓரக்கண் சிமிட்டினான், நந்தினி சிரிப்பை மறைக்க ஸ்டிக்கர் பொட்டினை நேர் செய்ய வேண்டி இருந்தது.

என்ன..? மன்னிச்சு....மறந்து.. பெருந்தன்மையா...? என்னமோ நான் ஸ்பாயில் ஆயிட்ட மாதிரி பேசற...? அடி படுவ.. ஆமா சொல்லிட்டேன்..

அப்ப வா.. வந்து என்னை லவ் பன்னு

போதும் ஷக்தி .. நிறுத்ரியா...? தாங்கல....

நிலா.. நீ ரொம்ப அலட்றியோன்னு தோணுது எனக்கு – என்றாள் நந்தினி

நீ சும்மா இரு நந்து.. இங்க பாரு ஷக்தி.. பூனா போற அவசரத்துல சில உண்மைகளை உன்கிட்ட சொல்லித் தொலைக்க வேண்டி இருக்கு.. நீ ஸ்மார்ட்டா இருக்கடா.. கொஞ்சம் அழகாவேற இருக்க.. உன் ஆபீஸ்லயே நாலைஞ்சு உன் பின்னாடி சுத்துதுன்னு கேள்விபட்டேன்.. அதுல ஏதாவது ஒன்னு ட்ரை பன்னேன்...

ரெண்டு ரெடி பன்னிட்டேன்... ஆனா ரெண்டும் சின்ன வீடாத்தான் வருவேன்னுருச்சுங்க...!!!

தேவையா நிலா இது நமக்கு..? கொஞ்சம் சீரியஸா பேசலாமா? நிலா இங்க பாரு.. இப்ப இங்க இருந்து நான் நம்ம ரூமுக்கு போகனும்.. நைட் டைம் பயமா இருக்கு... யாராவது கூட வந்தா நல்லா இருக்கும்னு தோணுது.. இன்னைக்கு தேதிக்கு அப்படி துணையா வர யாரும் எனக்கு இல்ல.. நான் தனியாத்தான் போகனும்.. தனிமை மரணத்துக்கு சமம்.. ஷக்தி உன்னோட வாழ்க்கை முழுசும் கூட வரேங்கறான்.. அவன் மனசை புரிஞ்சுக்க.. பெட்டிய எடுத்துக்கிட்டு பெட்டிய விட்டு இறங்கு...

நந்து நீ சும்மா இரு.. ஷக்த்தி இங்க பாரு.. என்னை புரிஞ்சுக்க.. ஷிவாக்கு ஹெல்ப் பன்ன போய் .. என்னொட பேரு கெட்டுடுச்சு

பேரு தானே கெட்டுடுச்சு..? வேற பேரு வெச்சுக்க.. கண்ணாம்பா ந்னு வச்சுக்க.. உன் முட்ட முட்டை கண்ணுக்கு பொருத்தமா இருக்கும்.

சீரியசாவே ஆக மாட்டியா நீ?

நீ என்னை லவ் பன்றேன்னு சொல்லு.. அப்புறம் பாரு.. நான் எவ்ளோ சீரியஸ் ஆகறேன்னு?

ஷக்தி நான் எதுக்கு உனக்கு?

இது என்ன கேள்வி..? கல்யாணம் செஞ்சு குடித்தனம் நடத்தத்தான்..

அதுக்கு நான் தகுதி இல்லைன்னு எனக்கு தோணுது

மேட்டர் சீரியஸாவதை உணர்ந்து அவ்விடத்தி விட்டு அகல நந்தினி மெல்ல எழுந்தாள்.. பார்வையை விலக்காமலேயே, நிலாவும் ஷக்தியும் ஆளுக்கு ஒரு கையாக பிடித்து இழுத்து அவளை பழைய இடத்திலேயே உட்காரவைத்து விட்டு..

ம்.. சொல்லு

நான் வேண்டாம் ஷக்தி உனக்கு.. முழு அர்ப்பணமா என்னை நான் உனக்கு தர முடியாது

ஏன் முடியாது?

ஏன்.. ஏன்னா ஆபீஸ்ல என்னை பத்தி பல விதமா பேசிட்டாங்க.. என்னால நீ தலை குனியக் கூடாது ஷக்தி

அவங்க பேசறத்துக்கும்.. நான் உன்னை கல்யாணம் பன்றத்துக்கும் என்ன சம்பந்தம்.. உன்னை பத்தி எனக்குத் தெரியும் நிலா..

இப்ப லவ் வேகத்தில பேசற..பின்னாடி ஏதாவது ப்ரச்சனைன்னா சொல்லிகாட்டுவியோன்னு பயமா இருக்கு

கண்டிப்பா சொல்லிக் காட்டுவேன்.. கருணைக்கும் காதலுக்கும் வேறுபாடு காட்ட தெரியாத முண்டம்டீ நீ ந்னு சொல்லி காட்டுவேன்..

இல்ல ஷக்தி.. இது சரி வரும்னு தோணல.. நான் வேண்டான்டா உனக்கு.. நீங்க கிளம்புங்க.. இஞ்சின் மாட்றாங்க

நீ ஷிவாக்கு உதவி செஞ்சது தப்பே இல்லை.. ஆனா.. அதையே ஓவரா அலம்பாம.. சிலுப்பாம.. அமைதியா செஞ்சிருந்தா இந்த பேச்சு இல்லயே..? என்றாள் நந்தினி

உதவி செஞ்ச மாதிரியா பேசினாங்க...? இவங்களை மனுஷங்கன்னு நினைச்சு இவ்ளோ நாள் பழகி இருக்கேனே நான்...!? இந்த சமுதாயத்தோட வாழறதை விட கண் காணாம போலாம் நந்து..

நீ எங்க போனாலும் மனுஷங்க மனுஷங்கதான்.. பாதை முழுதும் முட்கள் இருக்கும், நாம் தான் முன்னெச்சரிக்கையா பார்த்து நடக்கணும்

அந்த முள் என் கண்ணை குத்தினாலும் பரவாயில்லை ஆனா உன்னோட மனசை குத்திட கூடாது ஷக்த்தி.. நீ நல்லாயிருடா.. உனக்கு நல்லவளா அமைவா.. நான் போறேன்

வா ஷக்தி.. இது தேறாது... நாம போலாம்.. ரொம்ப சிலுப்பிக்கறா.. ஏய் போய் சேர்ந்ததும் .. என் செல்லுக்கு ஒரு கால் பன்னு.. டேக் கேர்.. வாடா.. போலாம்.. கோபத்துடன் எழுந்தாள் நந்தினி.

நிலா...இன்னைக்கில்லைன்னாலும்.. நீ ரிடையர் ஆவறத்துக்குள்ள என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட லவ் சொல்லனும்னு நீ நினைச்சா.. என்னோட செல்லுக்கும் ஒரு கால் பன்னு நிலா.. உன்னோட அந்த காலுக்காக சிம் கார்ட் மாத்தாமயே என்னோட செல் எப்பவும் காத்திட்டிருக்கும்.

அந்த கம்பார்ட்மென்ட் விட்டு இறங்கி வேகமாய் நடந்து போனார்கள் நந்தினியும் ஷக்த்தியும்... அவர்கள் திரும்பி பார்ப்பார்கள் என எதிர்பார்த்தாள்.... அவர்களுக்கு டாடா சொல்ல ஜன்னல் வழி கையெல்லாம் நுழைத்து தயாராக இருந்தாள்.. ஆனால் அவர்கள் திரும்பி பார்க்கவே இல்லை.. ஏக்கமாய் இருந்தது. சட்டென அனாதை ஆனதை உணர்ந்தாள்.. நந்தினி சொன்னது உண்மைதான்.. தனிமை மரனம் தான்.

இந்தக் கம்பார்ட்மென்டில் தன்னுடன் பயணிக்கப் போகிறவர்கள் யார் யார் என பார்த்தாள்...அழகாய் முக்காடு இட்ட, எலுமிச்சை நிறத்தில் ஒரு பெண்மனி, பக்கத்தில் அவளது கணவன்... அவளது இரண்டு குழந்தைகள்.. இரண்டு மூன்று பெரியவர்கள், ஒரு இளம் பெண்.

சோகமும் பயமும் இதயத்துள் கனக்க.. சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.. வண்டி கிளம்பியது.. என் சென்னை.. என் ஷக்திவேல்.. என் நந்து.. எல்லோரையும் விட்டு விட்டு போகிறேன்.. நாட்கள் செல்லச் செல்ல என்னை மறந்து விடுவார்கள்.. மறக்கட்டும்.. அதுதான் தேவை.

ஆனாலும் நினைக்க நினைக்க நெஞ்சம் வலிக்க.. கண்கள் கனக்க அழுகை வந்தது.. யாரும் பார்க்கும் முன் துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு தன் பெட்டியைத் திறந்து டைரியை எடுத்தாள் அதில் பொதிந்து வைத்திருந்த இரண்டு போட்டோக்களை எடுத்தாள் அவற்றுள் ஒன்று அவளுக்கும் ஷக்திவேலுக்கும் நடுவில்.. இருவர் தோள்களிலும் ஆதரவாய் கை வைத்தபடி சிரித்துக் கொண்டே ஸ்வாமிஜி நிற்கும் போட்டோ, இரண்டாவது ஷக்தி –ஹைய் ஜம்பில் முதல் பரிசு வாங்கிய கோப்பையுடன். வெகு நேரம் அவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்... கண்ணீரை கட்டுப் படுத்தவோ.. துடைக்கவோ நினைவில்லை அவளுக்கு.

நிலாவயே பார்த்துக் கொண்டிருந்த அந்த வடக்கத்தி பெண்மனி கொஞ்சம் அதிர்ந்து விட்டாள்.. ஒரு தட்டில் இரண்டு பூரியும், சப்ஜியும் வைத்துக் கொண்டு.. தன் கணவனிடம் கண்களாலேயே அனுமதி பெற்று, இவளருகில் அமர்ந்து.. இவளது தோளை மெல்லத் தொட்டாள்.. இதை சாப்பிடு என்பதாய் பார்த்தாள். பெட்டியில் ஏறியதிலிருந்து.. நிலா, ஷக்தி, நந்தினிக்கு இடயே நடந்த உரையாடலை கவனித்து ஓரளவு தான் பார்த்திருந்த சீரியல்களில் வந்த கதைகளுடன் தொடர்புபடுத்தி நிலாவின் இன்றைய நிலையை கணித்து வைத்திருந்தாள்.. அதற்காகவே சப்ஜியை கொஞ்சம் அதிகம் வைத்துத் தந்தாள். தலை நிமிர்ந்து பார்த்த நிலா நெகிழ்ந்து போனாள்.. ஆனால் தற்போதைய நிலைமையில் சப்ஜி தொட்டு தொட்டு பூரியை கடித்து கடித்து சாப்பிடும் மன நிலையில் அவள் இல்லை.. எனவே

மாப் கரோ ஜீ.. முஜே நஹி சாஹியே - என்றாள்

அதற்கு அந்தப் பெண் “ ஏன் வேணாம்னு சொல்றீங்க? அப்றமா வேணா தரட்டா? என்றாள். சரி என தலையாட்டிவிட்டு இடையில் நிறுத்தியிருந்த அழுகையை தொடர வசதியாக முழங்காலில் முகம் புதைத்துக் கொண்டாள்..

இழந்துவிட்டேன்.. என் வாழ்க்கையையே இழந்து விட்டேன்.. ஷக்தி ஐ லவ் யூ டா.. நான் எந்த தப்புமே பன்னலடா.. சுமதியை பார்த்ததும் என் அம்மா நினைவு வந்துச்சு.. பைத்தியமான என் எம்மாவை வச்சுக்கிட்டு என் அப்பா எவ்ளோ கஷ்ட்டப்பட்டாருன்னு உனக்கே தெரியும்..கடைசீ நாட்கள்ள நல்ல ட்ரீட்மென்ட் கிடைச்சும்.. கொஞ்சம் டெவெலப்மென்ட் தெரிஞ்சும்.. மோசமான ஹெல்த் கன்டிஷனால என் அம்மா எனக்கு இல்லை.. இப்படி உதவி செஞ்சா என்னோட பேர் கெட்டுப் போகும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. நீ எங்க இருந்தாலும் நல்லா இரு ஷக்தி. நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பன்னிக்க.. எனக்கு கல்யாணப் பத்திரிக்கை மட்டும் அனுப்பிடாத.. அதை பிரிச்சு படிக்கும் போதே நான் செத்துருவேன்.. நந்து.. என்னை மறந்துடாத நந்து.. ஷக்த்திக்கு கல்யாணம் முடிஞ்சதும் நான் சென்னை திரும்பி வருவேன்.. அப்போ நான் தலை சாய்ச்சு அழ எனக்கு உன் மடி வேணும் நந்து.. கோவிச்சுக்கிட்டு திரும்பி பாக்காமகூட போன இல்ல நீ.. போ.. போ.. நான் வேணாம்தானே உனக்கு - பொங்கி பொங்கி அழுதாள்.. துப்பட்டா நனைந்து.. சூரியும் நனைந்து.. ஆனால் அழுகை அடங்கவில்லை. மீண்டும் அவளின் தோள்கள் மெல்ல தொடப்பட்டன..

எனக்கு வேணாங்க.. பசிக்கல - என சொல்ல நினைத்து தலை நிமிர்ந்தவள்.. அதிர்ச்சியில் உறைந்தாள்

ஏய் ஷக்தி.. நீ போகல? நந்து.. நீயும் போகல !?
எப்டி போவோம்.. ஹீரோயின் அழுதுட்டு இருக்கீங்களே?

வண்டி சென்னயை தாண்டியாச்சு.. என்ன விளையாடறீங்களா...?
பூனாக்கு டிக்கெட் எடுத்துருக்கோம்

என்னது.! பூனாக்கா? அடப்பாவிங்களா...!!
சரி .. கொஞ்சம் தள்ளிக்கறயா நாங்க உக்காரணும்.உட்கார்ந்தார்கள்

மீண்டும் தொடரலாமா...மேடம் ஏன் அழறீங்க? அட என் போட்டோ...! லவ்வு......!? என் மேல? சொல்லித் தொலையேன்.. ஷக்த்தி உன்னை லவ் பண்றேன்டான்னு சொல்லித்தொலையேன் முண்டம்.

ஆயிரம் இருந்தாலும்.. நான் எந்த தப்பும் பன்னலன்னு உனக்கு எப்டி நான் ப்ரூவ் பன்னுவேன்?

உன்னை நிரூபிக்க சொன்னனா நான் இப்ப? எனக்கு எல்லாம் தெரியும் நிலா. நீ மூனுமாசம் லீவ் போட்டுட்டு சுமதியை பார்த்துகிட்டது எல்லாம் நான் அங்க வந்தப்ப நேர்ல பார்த்தேன்.. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு உன் கிட்ட பேசல.. நந்தினி அங்க இருந்தப்ப தான் நான் அங்க வந்தேன்.. பேசறவங்க என்ன வேணா பேசுவாங்க... அதை பெருசா மதிச்சு பூனாக்கெல்லம் டிரான்ஸ்பர் வாங்கிகிட்டு ரயில் மூழ்கற மாதிரி அழுதுகிட்டே கிளம்பற கேணச்சிய நான் பார்த்ததே இல்ல நிலா.

எந்த வித நெருடலும் இல்லாம சர்ப்பணமா என்னை நான் உனக்கு தந்திருக்கனும் ஷக்தி

அதைத்தான் எப்பவோ தந்துட்டியே

என்ன சொல்ற...!?

படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சு நம்ம ஆஸ்ரமத்திலேர்ந்து கிளம்பர அன்னைக்கு இதே மாதிரி பிழிய பிழிய அழுதியே .. அன்னைக்கு உன் கண்கள் சொல்லுச்சு “ ஷக்தி ஐ லவ் யூ டா.. நீ இல்லாம நான் இல்ல.. உன்னை விட்டுட்டு போக முடியலடா ந்னு” சொல்லுச்சு. உனக்காகத்தான் ஸ்வாமிஜிய விட்டுட்டு.. விவசாயத்தை விட்டுட்டு.. உன் கிட்டயே இருக்கனும்... தினமும் உன்னை பார்க்கனும்னு சென்னை வந்து ஏதோ ஒரு வேலைல சேர்ந்தேன்.. நீயும் சொல்லுவ சொல்லுவன்னு பார்த்தா.. மேடம் சமூக சேவகி ஆகி.. பட்டப் பேர் வாங்கிகிட்டு.. சென்னையை திட்டிட்டு பூனா கிளம்பரீங்க.. சரி இது ஆவறதில்லைன்னுதான் நானும் நந்தினியும் பூனாக்கு டிக்கெட் எடுத்தோம்.

ஆனந்த கண்ணீர் புறப்பட்டது நிலாவின் கண்களில் இருந்து.. மெல்ல சிரித்தாள்.. நந்தினியும் சிரித்தாள்.. ஷக்த்தியும் மெல்லிய புன்னகை புரிந்தான்.. மூவரின் கண்களிலும் நீர் திரை இட்டது.. நிம்மதியும் அழுகயைத்தான் தருகிறது.. என் நந்தினியும்.. என் ஷக்தியும் பக்கத்திலிருப்பது எவ்வளவு நிம்மதி.. அவளையும் அறியாமல் நந்தினியின் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்தது நிலாவின் கைகள்..

ஒரு நல்ல, திடீர் திருப்பங்கள் நிறைந்த எட்டரை மணி டி.வி சீரியலை பார்த்த த்ருப்த்தியில் முதுகு சாய்த்து ரிலாக்ஸாகினர் அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள்

சரி.. சிரிச்சது போதும்.. பூரீ சாப்ட்றீங்களா?

ஏது பூரி..? ஒரே நேரத்தில் கேட்டனர் நந்தினியும் ஷக்தியும்

நிலாவின் கண்கள் வடக்கத்தி பெண்மனியின் கண்களை இறைஞ்சின.. “ பூரி இல்லைன்னு சொல்லி ப்ரண்ட்ஸ் எதிர்க்க மானத்தை வாங்கிடாதீங்க” என்பதைப்போல பார்த்தாள்.

இவர்களது உரையாடலை மனம் ஒன்றி கண்களில் நீர் வழிய.. ஒண்ணு மண்ணா கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து சீட் பெண்மனி இன்னும் நான்கு பூரிகளை சேர்த்து வைத்து மொத்த சப்ஜியையும் கவிழ்த்து கொட்டி ஆனந்த கண்ணீருடன் தந்தாள்.. டி.வி. சீரியல்களை திட்டக் கூடாது.. அவைகள் தான் மனிதர்களை எவ்வளவு மென்மையாக்குகின்றன?

வெள்ளியை வார்த்து ஊற்றிய பௌர்ணமி நிலவொளியில் மர இலைகள் பளபளக்க.. புன்சிரிப்புடன் வேகமெடுத்தது பூனா நோக்கி செல்லும் அந்த ரயில்.. தென்றல் அவர்களின் கண்ணீரை காயச் செய்தது.

ஷக்தி நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அந்தப் பார்வை ஆயிரம் காவியங்களைச் சொன்னது...எப்பொழுது சொல்லப் போகிறாய் நிலா...? அந்தக் கவிதைத் தருணம் எப்போது? என கேள்விகளையும் கேட்டது.

வடக்கத்திப் பெண், அவளது குடும்பம், மற்ற பயணிகள்..அவர்களது சுற்றமும் நட்பும் சூழ.. தொடர்ந்து கவனிக்க.. நந்தினியும் ஷக்தியும் எதிர் பார்க்காத அந்தத் தருணத்தில், மெல்லிய வெட்கப் புன்னகை இதழ்களில் தவழ.. கால் விரல்கள் தரையில் கோலமிட, கண்களை மெல்ல உயர்த்தி ஷக்தியை பார்த்து .. நிலா அந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னாள்... அவை... ஷக்தி பூரி சாப்டு.

அடிக்க வராதீங்க.. கொஞ்சம் ஓவர் பில்ட் அப் தான்.. காதலெல்லாம்.. பூரி தட்டை கைல வச்சுக்கிட்டு ..ஓட்ற ட்ரெயின்ல.. பத்து பதினஞ்சு பேர் வச்ச கண் வாங்காம பார்த்துட்டிருக்கும் போது.. ஐ லவ் யூ டான்னு சிம்பிளா சொல்ற விஷயமில்லீங்க.

மழையடித்து காய்ந்த.. மலைக்கோயில் கற்படியில், கைப்பிடி சுவர் சாய்ந்து.. அருகருகே நிற்கையில்.. தூரத்து வயல்களை தழுவிவந்த தென்றல் முன் நெற்றி குழல் கலைக்க.. மௌனமாய் கண்கள் கலக்க.. மெல்லிய முல்லை வாசத்தோடு “ ஷக்த்தி ஐ லவ் யூ.. ஐ லவ் யூடா செல்லம் “ என மென்மையாய் சொல்ல வேண்டிய அற்புதமான விஷயம்.

நம் நிலாவும் அவளது ஷக்தியிடம் தன் காதலை சொல்லுவாள்.. இப்போது இல்லை...

மலைக்கோயில் வாசலில்.. கார்த்திகை தீபம் மின்ன.. நேவி ப்ளூ டீ ஷர்ட் போட்ட அழகான ஷக்தியைப் பார்த்து, கண்களில் காதல் மின்ன.. ப்ளாக் சூரியில் துப்பட்டா படபடக்க.. ஓர் இனிய பௌர்ணமி நிலவொளியில் சொல்லுவாள்.

அந்த இனிய தருணத்திற்காக .. கண்களில் கனவுகள் மிதக்க.. இப்பொழுதே ஏங்கத் துவங்கினர் இருவரும்.. ஆனால் இது புரியாமல், இன்னும் பூனா நோக்கியே தள தளவென போய் கொண்டிருந்தது அந்த மக்கு ரயில்.
----------------------------------------------------------------------


ஆகவே பெண்களே.. இச் சிறுகதை வழி நான் சொல்ல வந்தது என்ன வெனில்.. போனால் போகிறது... ஆண்களுக்காக இரக்கப் படுங்கள், உதவுங்கள்.. அல்லது வெறுமனே நட்புடன் பழகுங்கள்.. யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அனைத்திற்கும் ஒரு எல்லைக் கோடுகளை உங்களுக்குள் வரைந்துக் கொள்ளுங்கள்.. அந்தக் கோட்டினை கடக்காமல், சமூகத்தின் பார்வையில் கேள்விக் குறிகளை எழுப்பாத வகையில் நீங்கள் செய்ய நினைத்ததை செய்யுங்கள்.. உங்களது மன நிம்மதியையும், கம்பீரத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.. சரிதானே?

எல்லா நிலாக்களுக்கும் இதுபோல, பூனா வரைக்கும் டிக்கட் எடுத்து பின்னாடியே துரத்தி துரத்தி லவ் பன்னும் ஷக்திவேல்கள் அமைவது கடினம் அல்லவா?

நிலாவின் நிறைவு பௌர்ணமி தானே?





Saturday, September 10, 2005

நிலா - 6

மலையே மகேசன் ஆகி நிற்க.. வலம் வந்து மக்கள் வணங்கும் திருவண்ணாமலை.. கோயிலை கடந்து, நகர எல்லை கடந்து.. கிராமத்தினை நோக்கி செல்லும் நிழல் கவிழ்ந்த சாலயில் அந்த ஆஸ்ரமம்.

நீங்க கார்லயே இருங்க.. நான் ஸ்வாமிஜீ இருக்காரான்னு பார்த்துட்டு வரேன் -

ஆஸ்ரமத்துக்குள் சென்றாள் நிலா. மருதாணிச்செடியின் வாசம் தென்றலோடு கலந்து வந்தது.. மரங்கள் சூழ, நடுவில் அந்த பெரிய குடில்.. வலதுபக்கம் பளிங்கினால் ஆன நவக்ரக சன்னிதானம்..இடது பக்கம் செழுமையான துளசிவனம். இரு பக்கமும் அரண்போல் அடர்த்தியாய் வளர்க்கப்பட்ட வேங்கை மற்றும் ஊஞ்சை மரங்கள். பெரிய கிணறு.. சொட்டு நீர் பாசனமாய் அனைத்து மரம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ந்துக் கொண்டிருந்தது. குளுமையும், தூய்மையும் தெய்வீகமும் ஒருங்கே இணைந்த அவ்விடத்தில் வளர்ந்த பசுக்களும் அவற்றின் சின்னஞ் சிறு கன்றுகளும் நிலா அருகில் சென்றதும் “ வா..வா..வா.. என்னை கொஞ்சம் கொஞ்சிட்டு போ..” என்பதைப் போல அவளை சூழ்ந்துக் கொன்டன

நிச்சயம் எழுபது வயதாவது இருக்கும் அவருக்கு.. அந்தக் கண்கள்.. அவை என்ன அழகு.. என்ன ஒரு கருணை.. அவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஷிவாவிற்கே ஓடிப்போய் அவரது விரல்களை கோர்த்துக் கொண்டு “ நானும் உங்களோடயே இருக்கட்டா “ என கேட்க வேன்டும் போல இருந்தது. மிகுந்த ப்ரயாசை பட்டு அடக்கிக் கொண்டான். அவனையும் அறியாமல் அவரை நோக்கி நடந்தான். ஷிவாவை பார்த்து கைகளை உயர்த்தி வாழ்த்தி அவனது தோள்களை தட்டிக் கொடுத்தார் ஸ்வாமிஜி. காருக்குள் எட்டிப்பார்த்தார். செடெடிவ்ஸ் கொடுக்கப்பட்டு அயர்ந்து தூங்கும் சுமதியை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்

“தூங்கறவங்களை தொந்தரவு செய்யவே கூடாது.. மகா பாபம்.. நிலா இவங்களை ஐந்தாவது குடில்ல தங்கவை.. தூங்கி எழுந்ததும் நம்ம கிணத்து தண்ணியில குளிக்க வச்சு, சுத்தமான ஆடைகளை போட்டு என்கிட்ட அழச்சுட்டு வா.. என்ன ஏதுன்னு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு துளசிவனம் நோக்கி நடந்தார்.

குடில் என்பது உண்மையாகவே நவீனங்கள் ஏதுமில்லாத பழையகால நிஜமான குடில்தான். மூங்கில் மற்றும் மரப்பலகைகள் சுவர்களாகவும் களிமன் தரை சமன் படுத்தப்பட்டு, பசுஞ்சாணமிட்டு மெழுகி இருந்தார்கள்.. மஞ்சள் வேப்பிலை கலந்து அரைத்த தண்ணீர் குடிலுக்குள்ளும், குடிலை சுற்றியும் அடர்த்தியாய் தெளிக்கப் பட்டிருந்தது. மாயிலையும் வேப்பிலையும் மாறி மாறி தொடுக்கப்பட்ட சரம் வாசல் மற்றும் ஜன்னல்களில் தொங்கவிடப்பட்டிருந்தது. சாம்பிராணி, மருதாணி விதைகள், நாயுறுவிச்செடியின் வேர் ஆகிய மூன்றும் கலந்து தணலில் இடப்பட்டு அதன் புகை குடிலுக்குள் பரவியப்படி இருந்தது. சமையல் மேடையில் மண் பாத்திரங்களும், விறகு, வரட்டி மற்றும் நிலக்கரி குமுட்டி அடுப்புகள் மெழுகி கோலமிடப்பட்டு தயாராய் இருந்தன.

ஒரு பெரிய ஆல மரத்தின் அடியில் அமைக்கப்பட்ட களிமன் மேடையில் அவர் அமர்ந்திருந்தார்.. குளித்து தூய்மையான ஆடைகள் அணிவிக்கப்பட்டு நிலாவால் கைத்தாங்கலாய் பிடித்துக் கொள்ளப்பட்ட சுமதி எதிரில் அமர்ந்திருந்தாள். அவளது கண்களையே உற்று நோக்கினார். சுமதியின் பார்வை சலனமற்று இருந்தது.அவளது வலது முன்னந்தலையில் முடிக்கற்றைகளை ஒதுக்கி எதையோ தேடி.. இறுதியாக அந்த வெட்டுத் தழும்பை கண்டு பிடித்தார்


இது எப்படி ஏற்பட்டுச்சுன்னு தெரியுமா?

அவர் அவ்வாறு சரியாக அதை கண்டு பிடித்து கேட்டது.. ஷிவாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவளோட சிறு வயசில , ஓடிட்டு இருந்த பம்ப்செட் மோட்டார்ல நீளமான அவ தலை முடி சிக்கி, பெரிய வெட்டு காயமும் கரண்ட் ஷாக்கும் அடிச்சு தூக்கி போட்டுடுச்சுன்னு அவளோட அப்பா சொன்னார்.

ஒரு ஏழு வயசில இருக்குமா?

ஆமா.. சரியா ஏழு வயசுன்னுதான் சொன்னார்

நடவடிக்கைகள் எப்டி இருந்தது?

அமைதியா நிச்சலனமா உட்கார்ந்துகிட்டே இருப்பா.. அதிகமா பேசவே மாட்டா.. கல்யாணம் முடியறவரைக்கும் எனக்கு தெரியாது.. அவளோட அப்பா அம்மா மறைச்சுட்டாங்க.

உங்க மகள் பிறந்ததுக்கு அப்புறம் நடவடிக்கைகள்ள மாறுதல் ஏற்பட்டுச்சா?

அதுக்கப்புறம் தான் நிறைய மாறுதல்கள்.. அப்பப்போ வீட்டை விட்டு போயிடுவா.. ஒருசமயம் நான் ஆபீஸ் கிளம்பிட்ட பிறகு நகை பணம் எல்லாம் எடுத்துகிட்டு கோயில் உள்ள போய் உட்கார்ந்து துணி விரிச்சு பரப்பி எண்ணிக்கிட்டு இருந்ததை பார்த்து தெரிஞ்சவங்க போன் பண்ணாங்க, நாலு பேரா சேர்ந்து போய் எல்லாத்தையும் மூட்டை கட்டி எடுத்துக்கிட்டு, கார்ல ஏத்தி அழைச்சிட்டு வற்றத்துக்குள்ள அமர்க்களமா ஆயிடுச்சு.. அதுக்கு பிறகு தான் கன்ட்ரோலே செய்ய முடியாம ரூமுக்குள்ளயே அடைச்சு வச்சிருந்தோம். நாள் ஆக ஆக தன்னோட மகளையே அடையாளம் தெரியல கையில இருக்கறத தூக்கி அடிக்கறா.

நீண்ட நேரம் கண்மூடி தியானித்து முடித்து.. கண்களை திறந்தார்.. அதில் பொங்கி வந்த கருணையும் கனிவும் அந்த இடத்தியே சாந்தமாக்கின.. ஷிவாவை நோக்கி மென்மையாக பேச ஆரம்பித்தார்.
“இவங்க இங்கயே ஒரு மண்டலம் தங்கி இருக்கனும்.. சில சிகிச்சைகள் செய்து பாக்கறேன்.. அண்ணாமலையான் க்ருபை அவங்களை குணப்படுத்தும்.. இதுவரை சாப்டுட்டு இருந்த மருந்து மாத்திரைகளோட வீரியத்தை முதல்ல இரத்ததில இருந்து நீக்கனும். அதன் பிறகு தான் நான் தரும் மூலிகை மருந்தும் எண்ணைகளும் வேலை செய்யும்.. அதனால கிட்டத்தட்ட மூனு மாசம் இவங்க இங்க தங்க வேண்டி வரும்.. அப்படியும் அவனின் கருணைதான் முக்யம். அது இருந்தாத்தான் குணமாகுவாங்க. எனச் சொல்லி நிறுத்தினார்.

நிலாவும் ஷிவாவும் ஏதும் பேசவில்லை.. நம்பிக்கை இழந்த இருளில் அவரது பேச்சு சூரியனின் புத்தொளியைப் போல் இருந்தது

இவங்க இங்க தங்கி இருக்கற காலம் முழுதும்.. இவங்களோடவே இருக்க ஒரு பெண் தேவை.. மூலிகைகளை அரைச்சு தடவி குளிப்பாட்டி விடனும், உடைகள் மாத்தி விடனும், உடல் முழுக்க எண்ணை தடவி விடனும், நான் தரும் மருந்துகளை நேரம் தவறாமல் தரணும், நான் சொல்லும் பக்குவங்களை சமைச்சு தரனும்.. இது எல்லாத்தையும் விட தினமும் காலையும் மாலையும் அவங்களுக்காக நவக்ரக பூஜை செய்து நவக்ரக சன்னிதானத்தை நாற்பத்திஎட்டு முறை சுத்த வைக்கனும்.. இவங்களோட அம்மா இருந்தா அழைச்சிட்டு வாங்க

இவங்க அம்மா இறந்து அஞ்சு வருஷம் ஆகுது

அப்போ உங்க அம்மாவை அழைச்சுட்டு வாங்க

அவங்களும் இல்லை.. இங்க யாராவது வேலைக்கு ஆள் கிடைச்சா.. எவ்ளோ வேணா கொடுத்துடலாம்.. இல்லைன்ன வீட்ல வேலை செய்ர பெரியம்மா இருக்காங்க.. இப்பவே போன் செஞ்சு வரவழைக்கறேன்.

இல்லை.. அது சரிவராது.. இவங்களோட தங்கறவங்க.. இவங்க பூரணமா குணமாகனும்னு நிஜமாவே மனசுக்குள்ள நினைக்கறவங்களா இருக்கனும்.. ஏன்னா இந்த மூனு மாசமும் அவங்க வைப்ரேஷனும், நல்லெண்ணமும் சேர்ந்துதான் சுமதியை குணமாக்க உதவும்.. அதனால ஒன்னு நெருங்கின சொந்தமா இருக்கனும், இல்லை நல்ல ஆத்மார்த்தமான நட்பா இருக்கனும்.. முக்யமா அவங்க நல்லவங்களா இருக்கனும்.. நல்ல எண்ண அலைகளை வைப்ரேஷன்ல கொடுக்கறவங்களா இருக்கனும்

ஷிவா ஏதும் பேசவில்லை.. என்ன செய்வது – என்பதைப் போல் யோசித்துக் கொண்டிருந்தான்

அப்பா.. நான் தங்கி உதவி செய்யட்டா? எனக் கேட்டாள் நிலா

செய்யலாம்... ஆனா உனக்கு லீவு..? ஆபீஸ்ல ப்ரச்சனை வந்தா என்ன பண்ணுவ?

எனக்கு மெடிக்கல் லீவ் நிறைய இருக்கு.. இங்க நம்ம டாக்டர் அங்கிள் கிட்டயே சர்டிபிகேட் வாங்கி அனுப்பிடறேன்.. ஷாங்ஷன் பண்ணப் போறது இவர்தான்.. நானும் நவக்ரகம் சுத்தி வந்து கொஞ்சம் புண்ணியம் தேடிக்கறேனே.. ப்ளீஸ் .. சரின்னு சொல்லுங்கப்பா

சரி.. விளையாட்டுத்தனமா இல்லாம நிஜமான அக்கறையோட பக்தியோட இருக்கனும் புரியுதா..
ம்.. சரிப்பா

ஷிவாவை தீர்மானிக்கவே விடாமல் நிலாவும் ஸ்வாமிஜியும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

நீங்க கிளம்புங்க.. நாங்க பாத்துக்கறோம்

தயங்கி நின்றான் ஷிவா.. அதை புரிந்துக் கொண்ட நிலா.. உங்களுக்கு என்ன விருப்பமோ அதை தக்ஷணையா வச்சுட்டு போங்க.. ஒரு ரூபாயா இருந்தாலும் வைங்க.. நாங்க பார்த்துக்கறோம் என்றாள்

பத்தாயிரம் . இருபதாயிரம் கேட்டு முன்பணமாகவே வாங்கிக் கொண்ட வைத்தியசாலைகளைத்தான் இதுவரை பார்த்திருக்கிறான் ஷிவா.. அந்த ஆஸ்ரமத்தின் ப்ரம்மான்டத்தையும் அதை நிர்வகிக்க எவ்வளவு சிரமங்கள் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு.. தனது மனைவி குணமாக வேண்டிக்கொண்டு..ஐம்பதாயிரத்திற்கான காசோலையை ஆஸ்ரம அலுவலகத்தில் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
----------------------------------------------

தவம் செய்வதைப் போல தனது கடமைகளைச் செய்தாள் நிலா... தீபாவளி.. பொங்கல் தவிர மற்ற நாட்களில் சூர்யோதயத்தையே பார்க்காதவள்.. இப்போது விடியற் காலை மூன்று மணிக்கு எழுந்து, குளித்து முடித்து, நித்தமும் புது வேப்பிலை மருதாணி பறித்து அரைத்து , அதை சுமதியின் தலை முதல் பாதம் வரை தடவி ஊறவைத்து, மூலிகைகள் கொண்டு காய்ச்சப்பட்ட வென்னீரால் குளிப்பாட்டி, முலிகை கரைசலில் ஊறவைத்து காயவைக்கப்பட்ட தூமையான கதர் ஆடைகளை உடுத்தி செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகன் குடியிருக்கும் வேங்கை மரத்தின் சென்னிற பாலினை திலகமாக இட்டு.. நவக்ரகங்களுக்கான பூஜைகளை முடித்து நாற்பத்தி எட்டு வலம் முடிந்த பின் ஸ்வாமிஜியின் முன் சிகிச்சைக்காக சுமதியை அமரவைத்துவிட்டு.. தங்கள் குடிலை பசுஞ்சாணமிட்டு மெழுகி இருவருக்கான சமையலை ஆரம்பிப்பாள்.. இம்மாதிரியான நித்ய கடமைகளால் குண்டு குண்டு... குண்டுப் பெண்ணே .. என்று இருந்தவள்.. இருக்குமிடம் தெரியாத ஒல்லி நாயகி ஆகிவிட்டாள்.. ஆனாலும் மன நிறைவும், த்யானமும் அவள் முகத்தை பொலிவாக்கின.

நந்து.. ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வாயேன் - செல்லில் கூப்பிட்டாள்

எதுக்கு..?

ப்ளீஸ்.. இன்னும் ரெண்டு நாள்ள எனக்கு மந்த்லி .சுமதியை நீ வந்து பார்த்துக்கனும்

சரி .. இன்னைக்கு ஈவ்னிக்கே வரேன்.. லீவ் கிடைக்கனும்னு வேண்டிக்கோ..!
---------------------------------------------

நிலா, நந்தினி ரெண்டு பேர்ல யாரையாவது பார்க்கணும்

உங்க பேரு.. எங்க இருந்து வரீங்கன்னு கேப்பாங்க

ஷக்திவேல்னு சொல்லுங்க

கொஞ்சம் உக்காருங்க – என சொல்லிவிட்டு ப்யூன் சீனு உள்ளே சென்று விட்டான்.. நந்தினி பர்மிஷனில் சென்றது அவனுக்கு தெரியாது

அபார்ஷந்தான்.. நிச்சயமா அபார்ஷன் தான்..அதான் மூனுமாசம் லீவ் அப்ளை பண்ணியிருக்கா

நிஜமாத்தான் சொல்றியா

வளர்ந்த ஆஸ்ரமத்திலேயே போய் ரெஸ்ட் எடுக்கறாளாம்

ஜன்னல் மூடப்பட்டிருக்கிறது என நினைத்துக் கொண்டு இருவர் பேசிக் கொண்டிருந்தது ஷக்தியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

இங்க.. நம்ம கீழ்பாக்கம் பக்கம் கலைக்க பாத்துருக்காங்க.. முடியாதுன்னு கை விரிச்சிடவே, இதுக்கு மேல தாங்காதுன்னு ஊர் பக்கம் போயிட்டா

ஆஸ்ரமங்கள்ள இதெல்லாம் சகஜமப்பா

போயும் போயும் கல்யாணம் ஆனவன் கிட்ட ஏமாந்துருக்கா பாரு

பணம்.. பணம்தான் எல்லாத்துக்கும் காரணம்

நாமளும் திருவண்ணாமலை கிரிவலம் வந்தோம்னு சொல்லிட்டு.. என்னா ஏதுன்னு தெளிவா பார்த்துட்டு வரலாமா? நிலா பிகரை பாக்காம கண்ணெல்லாம் இருளோன்னு இருக்குடா

திடுக்கிட்டான் ஷக்தி - இது என்ன நிலா, ஆஸ்ரமம், திருவண்ணாமலை ..! என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் .? கூர்ந்து கவனித்தான்.

இதுக்கு மேல அவன் கல்யாணம் செஞ்சுப்பானா?

மடக்கி அனுபவிச்சுட்டான்.. இதுக்கு மேல கல்யாணமாவது...? அவ்ளோதான்.. அப்டியே மறைச்சு வேற எவனயாவது ஏமாத்துவா..

யாருகிட்டயும் சொல்லாத.. நேத்து சீனு அந்த ஆஸ்ரமத்துக்கு அவளோட கையெழுத்து வாங்கனும்னு போயிருக்கான்..இவனை வராண்டாலயே உக்கார வச்சுட்டாங்களாம்.. ஜன்னல் வழியா பார்த்தானாம்.. இளைச்சு துரும்பா இருக்காளாம்

ஐயையோ இளைச்சுட்டாளா? அவ அழகே அவளோட கொழுக் மொழுக் தானேடா.. போச்சு.. எல்லாம் போச்சு

நீ என்னமோ கட்டிக்க போறவன் போல பீல் பண்ற..!?

தாங்க முடியாமல் வேகமாய், கோபமாய் எழுந்து திருவண்ணாமலைக்கு கிளம்பி சென்றான் ஷக்தி.
இரவு பதினோரு மணிக்கு.. ஸ்வாமிஜி வாக்கிங் முடிக்கும் சமயத்தில் அவரைப் பார்த்தான். அவரிடம் என்னவென கேட்பது.. அவரைப் பார்த்ததும் அவனுக்கு அழுகைதான் வந்தது.

"வாடா.. உன்னைத்தான் நினைச்சிட்டே இருந்தேன்.. ஏன் முகம் வாட்டமா இருக்கு..? இங்கயே ராஜா வீட்டு கன்னு குட்டியா ஆஸ்ரம விவசாயத்தோட.. ரிலீஸ் ஆவர புது படம் ஒன்னு விடாம பார்த்துகிட்டு இருந்த.. அவ கவர்ன்மெண்ட் உத்யோகம் கிடைச்சு சென்னை போனா.. அவ பின்னாடியே வேலையத்த வேலயை தேடிகிட்டு நீயும் போயிட்ட.. என்னால முடியலடா.. அவளை டிரான்ஸ்பர் கேக்க சொல்ல போறேன்.. வர்ர தை மாசம் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுடப் போறேன். அப்புறம் எங்கயும் போகாம என் பக்கத்தில இருந்துருங்க ரெண்டு பேரும்.. எந்த பற்றுமே இருக்க கூடாதுன்னு நினைக்கறேன்.. உங்க ரெண்டு பேரையும் வளர்த்த பற்று மட்டும் போக மாட்டேங்குது.."

இல்ல... நிலா .. இங்க வந்து

அவ இங்க வந்ததும் .. நீயும் வந்துருவேன்னு தெரியும்.. இங்கதான் ஐஞ்சாவது குடில்ல இருக்கா

குடில்லயா ...!! ஏன்?

அவளோட ஆபிஸரோட மனைவியை மன நிலை சரியில்லாம கொண்டு வந்தா.. நான் தான் அண்ணாமலயான் கிருபை வேண்டி எனக்கு தெரிஞ்ச சிகிச்சையை செஞ்சுன்டு இருக்கேன்.. மொத்த உதவியும் அவதான்.. அந்த பொண்ணுக்கு தாயா, மாமியாரா இருந்து பார்த்துக்கரா.. நான் வளர்த்தவ.. இவ்ளோ பொறுப்பா பூஜையெல்லாம் சமர்த்தா பண்றாளேன்னு சந்தோஷமா இருக்கு.. சரி போய் சமையல் கட்டுல மணி இருப்பான்.. பாலையாவது வாங்கி குடிச்சுட்டு என் ரூமுக்கு வந்து படு.. காலைல நிலாவ பாத்துக்கலாம் என்றார்

அப்பாடா ..என்றிருந்தது ஷக்திக்கு.. அன்றைய இரவு முழுதும் தூங்கவே இல்லை அவன்.. குடிலில் தங்கி சிகிச்சைக்கு உதவுபவர் எவ்வளவு உளத்தூய்மையும், உடல் தூய்மையும் கொண்டவரக இருக்க வேண்டும் என்பது அங்கேயே வளர்ந்த அவனுக்கு மிக நன்கு தெரியும். அவ்வளவு கடினமான கடமையை மிகப் பொறுப்பாகச் செய்கிறாள் என ஸ்வாமிஜீயே சொல்லக் கேட்டு பெருமையும் மன நிறைவும் அடைந்தான் அவன். மூன்று மணிக்கு ஐந்தாம் நம்பர் குடிலில் விளக்கெரிவதை ஜன்னல் வழி பார்த்தான்.

நிலா வெளியில் வந்து வாசல் தெளித்து கோலமிடுவதைப் பார்த்தான்..இளைச்சுதான் போயிருக்கா என நினைத்துக் கொண்டான்.. அட நந்தினி.. இவ எங்க இங்க?

நந்தினியை அழைத்து எதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள் நிலா.. இலைகளை பறித்து அம்மியில் வைத்து அறைத்தாள்.. மூன்றாவதாக ஒரு பெண்ணை உள்ளே இருந்து அழைத்து வந்தனர் இருவரும்.. ஓஹோ.. இதுதான் அவளுடைய பாஸின் மனைவியோ..? இவளுக்கு என்ன அவ்வளவு அக்கறை? முண்டம்.. உன்னைப்பத்தி உன் ஆபீஸ்ல என்ன பேசறாங்கனுன்னு தெரியுமா? தெரிஞ்சா வீச்சரிவாளை எடுத்துகிட்டு வெட்டப் போயிடுவியேடி என நினைத்துக் கொண்டான். விடிந்ததும் .. நந்தினி மட்டும் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள்.. நிலா கண்களில் தட்டுப் படவே இல்லை.. எங்க போனா இவ?

ஹாய் நந்தினி

ஏய் .. ஷக்தி நீ என்ன இந்தப் பக்கம்?

ஸ்வாமிஜிய பார்க்கலாம்னு

ஸ்வாமிஜியையா.. இல்லை அம்பாளையா?

எங்க அவ?

மிஸ் பன்னிட்டியேடா... ரெஸ்ட் பில்டிங் போய்ட்டா.. ஒன் ஹவர் முன்னடிதான் போனா.. இதோட ஐஞ்சு நாள் கழிச்சுதான் தலய காட்டுவா.. அது உனக்கே தெரியும்.. அவ பாஸோட வைப் பைத்தியத்தை குணமாக்கனும்னு மேடம் வெரி சின்சியர்.. அந்த புண்ணியத்தில எனக்கும் பங்கு கொடுக்கறா.. நானும் ஒரு வாரம் லீவ் போட்டுட்டு நேத்துதான் வந்தேன்.. நீ எப்ப வந்த?

சரி நந்தினி.. நான் வரேன்... நான் வந்தேன்னு அவ கிட்ட சொல்லாதே?

சரி.. கிளம்பு
-----------------------------------------------

நிலாவின் தளராத தவத்திற்கு இணங்கி அண்ணமலையார் கண் திறந்தார்.. சுமதியின் உடலிலும் நடவடிக்கைகளிலும் முழு முன்னேற்றம் தெரிந்தது..அவளே முன்வந்து நவக்ரக பூஜைகளையும், சமையல் பக்குவங்களையும் தெரிந்து செய்துக் கொண்டாள். தயங்கி தயங்கி.. நிலா என் கொழந்தை நிவேதாவை பார்க்கணும்.. அவர் ஏன் வரவே இல்ல ..? என்றாள்

ஸ்வாமிஜிக்கு மிகவும் த்ருப்தி.. நிலா.. நான் வளர்த்த பொண்ணு நீ.. விளயாட்டுத்தனமா இருக்கியேன்னு நினைச்சேன்.. உன் முயற்சியாலதான் இவங்க தெளிஞ்சுட்டாங்க... என்னை சந்தோஷப்பட வச்சுட்ட... சரி.. அவசரப் பட வேண்டாம்.. இன்னும் நாலு நாள்.. முழு மண்டலமும் முடியட்டும்.. பிறகு உன் ஆபீஸரை கூப்பிட்டு அவரோட இவங்களை அனுப்பி வைக்கலாம்.. என்றார்.

களிம்பு பிடித்து எண்ணெய் பிசுக்கோடு மூலையில் கிடந்த குத்துவிளக்கை தேய்த்து கழுவி பொன்விளக்காக்கி, மஞ்சள் குங்குமமிட்டு, நல்மலர் சூட்டி, நெய்யிட்டு, வாழைத்திரியிட்டு, முத்து போல் அடக்கமாய் தீபமேற்றி அம்பாள் சன்னதியில் நிறுத்தியதை போல சுமதியை நிறுத்தி இருந்தாள் நிலா.. இவ்ளோ அழகா இந்தப் பெண்? என நினைக்கும் படி ஒரு அம்சமும், பதவிசும் சுமதியின் நடவடிக்கைகளில் வந்திருந்தது.

அந்த நாளும் வந்தது...

சென்னையிலிருந்து ஷிவா தன் மகளை அழைத்துக் கொண்டு வந்து இறங்கினான்.. அம்மாவை மன நிலை சரியில்லாத நிலையில் பார்த்திருந்த நிவேதா தயங்கினாள்.. நிலாதான் அவளை அழைத்துவந்து சுமதியிடம் சேர்த்தாள்.. சுமதியை பார்த்து ப்ரம்மித்து நின்றான் ஷிவா.. யாருக்கு நன்றி சொல்வது..? எப்படி நன்றி சொல்வது? என்ன கைம்மாறு செய்வது? என்னோட குடும்பம் நல்லபடியா ஆயிடுச்சு.. அந்த அண்ணாமலையார் தான் உங்க ரெண்டுபேர் ரூபத்தில வந்து காப்பாற்றினார் என சொல்லிக் கொண்டே ஸ்வாமிஜியின் கால்களில் விழுந்தான். புன்னகையுடன் ஷிவாவை தூக்கி நிறுத்தி தோள்களில் தட்டிக் கொடுத்தார் அவர்.

கிளம்பு நிலா.. சென்னைக்கு என்னோடயே கார்ல வந்துரு

இல்ல.. நான் அப்பா கூட ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்..இன்னும் ஒருவாரம் லீவ் பாக்கி இருக்கு

சரி.. கோயிலுக்கு போயிட்டு நான் சென்னை போறேன்.. சீக்கிரம் வரப்பாரு

நிலா..சென்னை வந்ததும் என்னை வந்து பார்ப்பியா.. – என்றாள் சுமதி

நிச்சயமா.. சந்தோஷமா கிளம்புங்க சுமதி.. - என வழி அனுப்பி வைத்தாள் நிலா.

யார் இவள்.. என் தாயா? இல்லை போன ஜென்மத்தில் எனக்கு மகளாக பிறந்து அந்த நன்றிக்கடன் தீர்த்தாளா? இவளுக்கு எப்படி நான் கைம்மாறு செய்யப் போகிறேன்? இவளுக்கு நல்ல கணவன்.. அன்பான கணவன் அமையட்டும்.. நமக்கு தெரிஞ்சவங்கள்ள யாரு இவளுக்கு பொருத்தமா இருப்பான்? சுந்தரை கேட்டுப் பாக்கலாமா? மதி கூட நல்லவந்தான்? ஹரி கூட பொருத்தமா இருப்பான்.. சரி சென்னை வரட்டும்.. நானே நல்லவனா பார்த்து முடிச்சு வைக்கறேன் – என்று எண்ணியபடி காரை ஓட்டினான் ஷிவா..

தொடரும்..