Saturday, September 10, 2005

நிலா - 6

மலையே மகேசன் ஆகி நிற்க.. வலம் வந்து மக்கள் வணங்கும் திருவண்ணாமலை.. கோயிலை கடந்து, நகர எல்லை கடந்து.. கிராமத்தினை நோக்கி செல்லும் நிழல் கவிழ்ந்த சாலயில் அந்த ஆஸ்ரமம்.

நீங்க கார்லயே இருங்க.. நான் ஸ்வாமிஜீ இருக்காரான்னு பார்த்துட்டு வரேன் -

ஆஸ்ரமத்துக்குள் சென்றாள் நிலா. மருதாணிச்செடியின் வாசம் தென்றலோடு கலந்து வந்தது.. மரங்கள் சூழ, நடுவில் அந்த பெரிய குடில்.. வலதுபக்கம் பளிங்கினால் ஆன நவக்ரக சன்னிதானம்..இடது பக்கம் செழுமையான துளசிவனம். இரு பக்கமும் அரண்போல் அடர்த்தியாய் வளர்க்கப்பட்ட வேங்கை மற்றும் ஊஞ்சை மரங்கள். பெரிய கிணறு.. சொட்டு நீர் பாசனமாய் அனைத்து மரம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ந்துக் கொண்டிருந்தது. குளுமையும், தூய்மையும் தெய்வீகமும் ஒருங்கே இணைந்த அவ்விடத்தில் வளர்ந்த பசுக்களும் அவற்றின் சின்னஞ் சிறு கன்றுகளும் நிலா அருகில் சென்றதும் “ வா..வா..வா.. என்னை கொஞ்சம் கொஞ்சிட்டு போ..” என்பதைப் போல அவளை சூழ்ந்துக் கொன்டன

நிச்சயம் எழுபது வயதாவது இருக்கும் அவருக்கு.. அந்தக் கண்கள்.. அவை என்ன அழகு.. என்ன ஒரு கருணை.. அவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஷிவாவிற்கே ஓடிப்போய் அவரது விரல்களை கோர்த்துக் கொண்டு “ நானும் உங்களோடயே இருக்கட்டா “ என கேட்க வேன்டும் போல இருந்தது. மிகுந்த ப்ரயாசை பட்டு அடக்கிக் கொண்டான். அவனையும் அறியாமல் அவரை நோக்கி நடந்தான். ஷிவாவை பார்த்து கைகளை உயர்த்தி வாழ்த்தி அவனது தோள்களை தட்டிக் கொடுத்தார் ஸ்வாமிஜி. காருக்குள் எட்டிப்பார்த்தார். செடெடிவ்ஸ் கொடுக்கப்பட்டு அயர்ந்து தூங்கும் சுமதியை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்

“தூங்கறவங்களை தொந்தரவு செய்யவே கூடாது.. மகா பாபம்.. நிலா இவங்களை ஐந்தாவது குடில்ல தங்கவை.. தூங்கி எழுந்ததும் நம்ம கிணத்து தண்ணியில குளிக்க வச்சு, சுத்தமான ஆடைகளை போட்டு என்கிட்ட அழச்சுட்டு வா.. என்ன ஏதுன்னு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு துளசிவனம் நோக்கி நடந்தார்.

குடில் என்பது உண்மையாகவே நவீனங்கள் ஏதுமில்லாத பழையகால நிஜமான குடில்தான். மூங்கில் மற்றும் மரப்பலகைகள் சுவர்களாகவும் களிமன் தரை சமன் படுத்தப்பட்டு, பசுஞ்சாணமிட்டு மெழுகி இருந்தார்கள்.. மஞ்சள் வேப்பிலை கலந்து அரைத்த தண்ணீர் குடிலுக்குள்ளும், குடிலை சுற்றியும் அடர்த்தியாய் தெளிக்கப் பட்டிருந்தது. மாயிலையும் வேப்பிலையும் மாறி மாறி தொடுக்கப்பட்ட சரம் வாசல் மற்றும் ஜன்னல்களில் தொங்கவிடப்பட்டிருந்தது. சாம்பிராணி, மருதாணி விதைகள், நாயுறுவிச்செடியின் வேர் ஆகிய மூன்றும் கலந்து தணலில் இடப்பட்டு அதன் புகை குடிலுக்குள் பரவியப்படி இருந்தது. சமையல் மேடையில் மண் பாத்திரங்களும், விறகு, வரட்டி மற்றும் நிலக்கரி குமுட்டி அடுப்புகள் மெழுகி கோலமிடப்பட்டு தயாராய் இருந்தன.

ஒரு பெரிய ஆல மரத்தின் அடியில் அமைக்கப்பட்ட களிமன் மேடையில் அவர் அமர்ந்திருந்தார்.. குளித்து தூய்மையான ஆடைகள் அணிவிக்கப்பட்டு நிலாவால் கைத்தாங்கலாய் பிடித்துக் கொள்ளப்பட்ட சுமதி எதிரில் அமர்ந்திருந்தாள். அவளது கண்களையே உற்று நோக்கினார். சுமதியின் பார்வை சலனமற்று இருந்தது.அவளது வலது முன்னந்தலையில் முடிக்கற்றைகளை ஒதுக்கி எதையோ தேடி.. இறுதியாக அந்த வெட்டுத் தழும்பை கண்டு பிடித்தார்


இது எப்படி ஏற்பட்டுச்சுன்னு தெரியுமா?

அவர் அவ்வாறு சரியாக அதை கண்டு பிடித்து கேட்டது.. ஷிவாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவளோட சிறு வயசில , ஓடிட்டு இருந்த பம்ப்செட் மோட்டார்ல நீளமான அவ தலை முடி சிக்கி, பெரிய வெட்டு காயமும் கரண்ட் ஷாக்கும் அடிச்சு தூக்கி போட்டுடுச்சுன்னு அவளோட அப்பா சொன்னார்.

ஒரு ஏழு வயசில இருக்குமா?

ஆமா.. சரியா ஏழு வயசுன்னுதான் சொன்னார்

நடவடிக்கைகள் எப்டி இருந்தது?

அமைதியா நிச்சலனமா உட்கார்ந்துகிட்டே இருப்பா.. அதிகமா பேசவே மாட்டா.. கல்யாணம் முடியறவரைக்கும் எனக்கு தெரியாது.. அவளோட அப்பா அம்மா மறைச்சுட்டாங்க.

உங்க மகள் பிறந்ததுக்கு அப்புறம் நடவடிக்கைகள்ள மாறுதல் ஏற்பட்டுச்சா?

அதுக்கப்புறம் தான் நிறைய மாறுதல்கள்.. அப்பப்போ வீட்டை விட்டு போயிடுவா.. ஒருசமயம் நான் ஆபீஸ் கிளம்பிட்ட பிறகு நகை பணம் எல்லாம் எடுத்துகிட்டு கோயில் உள்ள போய் உட்கார்ந்து துணி விரிச்சு பரப்பி எண்ணிக்கிட்டு இருந்ததை பார்த்து தெரிஞ்சவங்க போன் பண்ணாங்க, நாலு பேரா சேர்ந்து போய் எல்லாத்தையும் மூட்டை கட்டி எடுத்துக்கிட்டு, கார்ல ஏத்தி அழைச்சிட்டு வற்றத்துக்குள்ள அமர்க்களமா ஆயிடுச்சு.. அதுக்கு பிறகு தான் கன்ட்ரோலே செய்ய முடியாம ரூமுக்குள்ளயே அடைச்சு வச்சிருந்தோம். நாள் ஆக ஆக தன்னோட மகளையே அடையாளம் தெரியல கையில இருக்கறத தூக்கி அடிக்கறா.

நீண்ட நேரம் கண்மூடி தியானித்து முடித்து.. கண்களை திறந்தார்.. அதில் பொங்கி வந்த கருணையும் கனிவும் அந்த இடத்தியே சாந்தமாக்கின.. ஷிவாவை நோக்கி மென்மையாக பேச ஆரம்பித்தார்.
“இவங்க இங்கயே ஒரு மண்டலம் தங்கி இருக்கனும்.. சில சிகிச்சைகள் செய்து பாக்கறேன்.. அண்ணாமலையான் க்ருபை அவங்களை குணப்படுத்தும்.. இதுவரை சாப்டுட்டு இருந்த மருந்து மாத்திரைகளோட வீரியத்தை முதல்ல இரத்ததில இருந்து நீக்கனும். அதன் பிறகு தான் நான் தரும் மூலிகை மருந்தும் எண்ணைகளும் வேலை செய்யும்.. அதனால கிட்டத்தட்ட மூனு மாசம் இவங்க இங்க தங்க வேண்டி வரும்.. அப்படியும் அவனின் கருணைதான் முக்யம். அது இருந்தாத்தான் குணமாகுவாங்க. எனச் சொல்லி நிறுத்தினார்.

நிலாவும் ஷிவாவும் ஏதும் பேசவில்லை.. நம்பிக்கை இழந்த இருளில் அவரது பேச்சு சூரியனின் புத்தொளியைப் போல் இருந்தது

இவங்க இங்க தங்கி இருக்கற காலம் முழுதும்.. இவங்களோடவே இருக்க ஒரு பெண் தேவை.. மூலிகைகளை அரைச்சு தடவி குளிப்பாட்டி விடனும், உடைகள் மாத்தி விடனும், உடல் முழுக்க எண்ணை தடவி விடனும், நான் தரும் மருந்துகளை நேரம் தவறாமல் தரணும், நான் சொல்லும் பக்குவங்களை சமைச்சு தரனும்.. இது எல்லாத்தையும் விட தினமும் காலையும் மாலையும் அவங்களுக்காக நவக்ரக பூஜை செய்து நவக்ரக சன்னிதானத்தை நாற்பத்திஎட்டு முறை சுத்த வைக்கனும்.. இவங்களோட அம்மா இருந்தா அழைச்சிட்டு வாங்க

இவங்க அம்மா இறந்து அஞ்சு வருஷம் ஆகுது

அப்போ உங்க அம்மாவை அழைச்சுட்டு வாங்க

அவங்களும் இல்லை.. இங்க யாராவது வேலைக்கு ஆள் கிடைச்சா.. எவ்ளோ வேணா கொடுத்துடலாம்.. இல்லைன்ன வீட்ல வேலை செய்ர பெரியம்மா இருக்காங்க.. இப்பவே போன் செஞ்சு வரவழைக்கறேன்.

இல்லை.. அது சரிவராது.. இவங்களோட தங்கறவங்க.. இவங்க பூரணமா குணமாகனும்னு நிஜமாவே மனசுக்குள்ள நினைக்கறவங்களா இருக்கனும்.. ஏன்னா இந்த மூனு மாசமும் அவங்க வைப்ரேஷனும், நல்லெண்ணமும் சேர்ந்துதான் சுமதியை குணமாக்க உதவும்.. அதனால ஒன்னு நெருங்கின சொந்தமா இருக்கனும், இல்லை நல்ல ஆத்மார்த்தமான நட்பா இருக்கனும்.. முக்யமா அவங்க நல்லவங்களா இருக்கனும்.. நல்ல எண்ண அலைகளை வைப்ரேஷன்ல கொடுக்கறவங்களா இருக்கனும்

ஷிவா ஏதும் பேசவில்லை.. என்ன செய்வது – என்பதைப் போல் யோசித்துக் கொண்டிருந்தான்

அப்பா.. நான் தங்கி உதவி செய்யட்டா? எனக் கேட்டாள் நிலா

செய்யலாம்... ஆனா உனக்கு லீவு..? ஆபீஸ்ல ப்ரச்சனை வந்தா என்ன பண்ணுவ?

எனக்கு மெடிக்கல் லீவ் நிறைய இருக்கு.. இங்க நம்ம டாக்டர் அங்கிள் கிட்டயே சர்டிபிகேட் வாங்கி அனுப்பிடறேன்.. ஷாங்ஷன் பண்ணப் போறது இவர்தான்.. நானும் நவக்ரகம் சுத்தி வந்து கொஞ்சம் புண்ணியம் தேடிக்கறேனே.. ப்ளீஸ் .. சரின்னு சொல்லுங்கப்பா

சரி.. விளையாட்டுத்தனமா இல்லாம நிஜமான அக்கறையோட பக்தியோட இருக்கனும் புரியுதா..
ம்.. சரிப்பா

ஷிவாவை தீர்மானிக்கவே விடாமல் நிலாவும் ஸ்வாமிஜியும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

நீங்க கிளம்புங்க.. நாங்க பாத்துக்கறோம்

தயங்கி நின்றான் ஷிவா.. அதை புரிந்துக் கொண்ட நிலா.. உங்களுக்கு என்ன விருப்பமோ அதை தக்ஷணையா வச்சுட்டு போங்க.. ஒரு ரூபாயா இருந்தாலும் வைங்க.. நாங்க பார்த்துக்கறோம் என்றாள்

பத்தாயிரம் . இருபதாயிரம் கேட்டு முன்பணமாகவே வாங்கிக் கொண்ட வைத்தியசாலைகளைத்தான் இதுவரை பார்த்திருக்கிறான் ஷிவா.. அந்த ஆஸ்ரமத்தின் ப்ரம்மான்டத்தையும் அதை நிர்வகிக்க எவ்வளவு சிரமங்கள் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு.. தனது மனைவி குணமாக வேண்டிக்கொண்டு..ஐம்பதாயிரத்திற்கான காசோலையை ஆஸ்ரம அலுவலகத்தில் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
----------------------------------------------

தவம் செய்வதைப் போல தனது கடமைகளைச் செய்தாள் நிலா... தீபாவளி.. பொங்கல் தவிர மற்ற நாட்களில் சூர்யோதயத்தையே பார்க்காதவள்.. இப்போது விடியற் காலை மூன்று மணிக்கு எழுந்து, குளித்து முடித்து, நித்தமும் புது வேப்பிலை மருதாணி பறித்து அரைத்து , அதை சுமதியின் தலை முதல் பாதம் வரை தடவி ஊறவைத்து, மூலிகைகள் கொண்டு காய்ச்சப்பட்ட வென்னீரால் குளிப்பாட்டி, முலிகை கரைசலில் ஊறவைத்து காயவைக்கப்பட்ட தூமையான கதர் ஆடைகளை உடுத்தி செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகன் குடியிருக்கும் வேங்கை மரத்தின் சென்னிற பாலினை திலகமாக இட்டு.. நவக்ரகங்களுக்கான பூஜைகளை முடித்து நாற்பத்தி எட்டு வலம் முடிந்த பின் ஸ்வாமிஜியின் முன் சிகிச்சைக்காக சுமதியை அமரவைத்துவிட்டு.. தங்கள் குடிலை பசுஞ்சாணமிட்டு மெழுகி இருவருக்கான சமையலை ஆரம்பிப்பாள்.. இம்மாதிரியான நித்ய கடமைகளால் குண்டு குண்டு... குண்டுப் பெண்ணே .. என்று இருந்தவள்.. இருக்குமிடம் தெரியாத ஒல்லி நாயகி ஆகிவிட்டாள்.. ஆனாலும் மன நிறைவும், த்யானமும் அவள் முகத்தை பொலிவாக்கின.

நந்து.. ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வாயேன் - செல்லில் கூப்பிட்டாள்

எதுக்கு..?

ப்ளீஸ்.. இன்னும் ரெண்டு நாள்ள எனக்கு மந்த்லி .சுமதியை நீ வந்து பார்த்துக்கனும்

சரி .. இன்னைக்கு ஈவ்னிக்கே வரேன்.. லீவ் கிடைக்கனும்னு வேண்டிக்கோ..!
---------------------------------------------

நிலா, நந்தினி ரெண்டு பேர்ல யாரையாவது பார்க்கணும்

உங்க பேரு.. எங்க இருந்து வரீங்கன்னு கேப்பாங்க

ஷக்திவேல்னு சொல்லுங்க

கொஞ்சம் உக்காருங்க – என சொல்லிவிட்டு ப்யூன் சீனு உள்ளே சென்று விட்டான்.. நந்தினி பர்மிஷனில் சென்றது அவனுக்கு தெரியாது

அபார்ஷந்தான்.. நிச்சயமா அபார்ஷன் தான்..அதான் மூனுமாசம் லீவ் அப்ளை பண்ணியிருக்கா

நிஜமாத்தான் சொல்றியா

வளர்ந்த ஆஸ்ரமத்திலேயே போய் ரெஸ்ட் எடுக்கறாளாம்

ஜன்னல் மூடப்பட்டிருக்கிறது என நினைத்துக் கொண்டு இருவர் பேசிக் கொண்டிருந்தது ஷக்தியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

இங்க.. நம்ம கீழ்பாக்கம் பக்கம் கலைக்க பாத்துருக்காங்க.. முடியாதுன்னு கை விரிச்சிடவே, இதுக்கு மேல தாங்காதுன்னு ஊர் பக்கம் போயிட்டா

ஆஸ்ரமங்கள்ள இதெல்லாம் சகஜமப்பா

போயும் போயும் கல்யாணம் ஆனவன் கிட்ட ஏமாந்துருக்கா பாரு

பணம்.. பணம்தான் எல்லாத்துக்கும் காரணம்

நாமளும் திருவண்ணாமலை கிரிவலம் வந்தோம்னு சொல்லிட்டு.. என்னா ஏதுன்னு தெளிவா பார்த்துட்டு வரலாமா? நிலா பிகரை பாக்காம கண்ணெல்லாம் இருளோன்னு இருக்குடா

திடுக்கிட்டான் ஷக்தி - இது என்ன நிலா, ஆஸ்ரமம், திருவண்ணாமலை ..! என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் .? கூர்ந்து கவனித்தான்.

இதுக்கு மேல அவன் கல்யாணம் செஞ்சுப்பானா?

மடக்கி அனுபவிச்சுட்டான்.. இதுக்கு மேல கல்யாணமாவது...? அவ்ளோதான்.. அப்டியே மறைச்சு வேற எவனயாவது ஏமாத்துவா..

யாருகிட்டயும் சொல்லாத.. நேத்து சீனு அந்த ஆஸ்ரமத்துக்கு அவளோட கையெழுத்து வாங்கனும்னு போயிருக்கான்..இவனை வராண்டாலயே உக்கார வச்சுட்டாங்களாம்.. ஜன்னல் வழியா பார்த்தானாம்.. இளைச்சு துரும்பா இருக்காளாம்

ஐயையோ இளைச்சுட்டாளா? அவ அழகே அவளோட கொழுக் மொழுக் தானேடா.. போச்சு.. எல்லாம் போச்சு

நீ என்னமோ கட்டிக்க போறவன் போல பீல் பண்ற..!?

தாங்க முடியாமல் வேகமாய், கோபமாய் எழுந்து திருவண்ணாமலைக்கு கிளம்பி சென்றான் ஷக்தி.
இரவு பதினோரு மணிக்கு.. ஸ்வாமிஜி வாக்கிங் முடிக்கும் சமயத்தில் அவரைப் பார்த்தான். அவரிடம் என்னவென கேட்பது.. அவரைப் பார்த்ததும் அவனுக்கு அழுகைதான் வந்தது.

"வாடா.. உன்னைத்தான் நினைச்சிட்டே இருந்தேன்.. ஏன் முகம் வாட்டமா இருக்கு..? இங்கயே ராஜா வீட்டு கன்னு குட்டியா ஆஸ்ரம விவசாயத்தோட.. ரிலீஸ் ஆவர புது படம் ஒன்னு விடாம பார்த்துகிட்டு இருந்த.. அவ கவர்ன்மெண்ட் உத்யோகம் கிடைச்சு சென்னை போனா.. அவ பின்னாடியே வேலையத்த வேலயை தேடிகிட்டு நீயும் போயிட்ட.. என்னால முடியலடா.. அவளை டிரான்ஸ்பர் கேக்க சொல்ல போறேன்.. வர்ர தை மாசம் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுடப் போறேன். அப்புறம் எங்கயும் போகாம என் பக்கத்தில இருந்துருங்க ரெண்டு பேரும்.. எந்த பற்றுமே இருக்க கூடாதுன்னு நினைக்கறேன்.. உங்க ரெண்டு பேரையும் வளர்த்த பற்று மட்டும் போக மாட்டேங்குது.."

இல்ல... நிலா .. இங்க வந்து

அவ இங்க வந்ததும் .. நீயும் வந்துருவேன்னு தெரியும்.. இங்கதான் ஐஞ்சாவது குடில்ல இருக்கா

குடில்லயா ...!! ஏன்?

அவளோட ஆபிஸரோட மனைவியை மன நிலை சரியில்லாம கொண்டு வந்தா.. நான் தான் அண்ணாமலயான் கிருபை வேண்டி எனக்கு தெரிஞ்ச சிகிச்சையை செஞ்சுன்டு இருக்கேன்.. மொத்த உதவியும் அவதான்.. அந்த பொண்ணுக்கு தாயா, மாமியாரா இருந்து பார்த்துக்கரா.. நான் வளர்த்தவ.. இவ்ளோ பொறுப்பா பூஜையெல்லாம் சமர்த்தா பண்றாளேன்னு சந்தோஷமா இருக்கு.. சரி போய் சமையல் கட்டுல மணி இருப்பான்.. பாலையாவது வாங்கி குடிச்சுட்டு என் ரூமுக்கு வந்து படு.. காலைல நிலாவ பாத்துக்கலாம் என்றார்

அப்பாடா ..என்றிருந்தது ஷக்திக்கு.. அன்றைய இரவு முழுதும் தூங்கவே இல்லை அவன்.. குடிலில் தங்கி சிகிச்சைக்கு உதவுபவர் எவ்வளவு உளத்தூய்மையும், உடல் தூய்மையும் கொண்டவரக இருக்க வேண்டும் என்பது அங்கேயே வளர்ந்த அவனுக்கு மிக நன்கு தெரியும். அவ்வளவு கடினமான கடமையை மிகப் பொறுப்பாகச் செய்கிறாள் என ஸ்வாமிஜீயே சொல்லக் கேட்டு பெருமையும் மன நிறைவும் அடைந்தான் அவன். மூன்று மணிக்கு ஐந்தாம் நம்பர் குடிலில் விளக்கெரிவதை ஜன்னல் வழி பார்த்தான்.

நிலா வெளியில் வந்து வாசல் தெளித்து கோலமிடுவதைப் பார்த்தான்..இளைச்சுதான் போயிருக்கா என நினைத்துக் கொண்டான்.. அட நந்தினி.. இவ எங்க இங்க?

நந்தினியை அழைத்து எதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள் நிலா.. இலைகளை பறித்து அம்மியில் வைத்து அறைத்தாள்.. மூன்றாவதாக ஒரு பெண்ணை உள்ளே இருந்து அழைத்து வந்தனர் இருவரும்.. ஓஹோ.. இதுதான் அவளுடைய பாஸின் மனைவியோ..? இவளுக்கு என்ன அவ்வளவு அக்கறை? முண்டம்.. உன்னைப்பத்தி உன் ஆபீஸ்ல என்ன பேசறாங்கனுன்னு தெரியுமா? தெரிஞ்சா வீச்சரிவாளை எடுத்துகிட்டு வெட்டப் போயிடுவியேடி என நினைத்துக் கொண்டான். விடிந்ததும் .. நந்தினி மட்டும் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள்.. நிலா கண்களில் தட்டுப் படவே இல்லை.. எங்க போனா இவ?

ஹாய் நந்தினி

ஏய் .. ஷக்தி நீ என்ன இந்தப் பக்கம்?

ஸ்வாமிஜிய பார்க்கலாம்னு

ஸ்வாமிஜியையா.. இல்லை அம்பாளையா?

எங்க அவ?

மிஸ் பன்னிட்டியேடா... ரெஸ்ட் பில்டிங் போய்ட்டா.. ஒன் ஹவர் முன்னடிதான் போனா.. இதோட ஐஞ்சு நாள் கழிச்சுதான் தலய காட்டுவா.. அது உனக்கே தெரியும்.. அவ பாஸோட வைப் பைத்தியத்தை குணமாக்கனும்னு மேடம் வெரி சின்சியர்.. அந்த புண்ணியத்தில எனக்கும் பங்கு கொடுக்கறா.. நானும் ஒரு வாரம் லீவ் போட்டுட்டு நேத்துதான் வந்தேன்.. நீ எப்ப வந்த?

சரி நந்தினி.. நான் வரேன்... நான் வந்தேன்னு அவ கிட்ட சொல்லாதே?

சரி.. கிளம்பு
-----------------------------------------------

நிலாவின் தளராத தவத்திற்கு இணங்கி அண்ணமலையார் கண் திறந்தார்.. சுமதியின் உடலிலும் நடவடிக்கைகளிலும் முழு முன்னேற்றம் தெரிந்தது..அவளே முன்வந்து நவக்ரக பூஜைகளையும், சமையல் பக்குவங்களையும் தெரிந்து செய்துக் கொண்டாள். தயங்கி தயங்கி.. நிலா என் கொழந்தை நிவேதாவை பார்க்கணும்.. அவர் ஏன் வரவே இல்ல ..? என்றாள்

ஸ்வாமிஜிக்கு மிகவும் த்ருப்தி.. நிலா.. நான் வளர்த்த பொண்ணு நீ.. விளயாட்டுத்தனமா இருக்கியேன்னு நினைச்சேன்.. உன் முயற்சியாலதான் இவங்க தெளிஞ்சுட்டாங்க... என்னை சந்தோஷப்பட வச்சுட்ட... சரி.. அவசரப் பட வேண்டாம்.. இன்னும் நாலு நாள்.. முழு மண்டலமும் முடியட்டும்.. பிறகு உன் ஆபீஸரை கூப்பிட்டு அவரோட இவங்களை அனுப்பி வைக்கலாம்.. என்றார்.

களிம்பு பிடித்து எண்ணெய் பிசுக்கோடு மூலையில் கிடந்த குத்துவிளக்கை தேய்த்து கழுவி பொன்விளக்காக்கி, மஞ்சள் குங்குமமிட்டு, நல்மலர் சூட்டி, நெய்யிட்டு, வாழைத்திரியிட்டு, முத்து போல் அடக்கமாய் தீபமேற்றி அம்பாள் சன்னதியில் நிறுத்தியதை போல சுமதியை நிறுத்தி இருந்தாள் நிலா.. இவ்ளோ அழகா இந்தப் பெண்? என நினைக்கும் படி ஒரு அம்சமும், பதவிசும் சுமதியின் நடவடிக்கைகளில் வந்திருந்தது.

அந்த நாளும் வந்தது...

சென்னையிலிருந்து ஷிவா தன் மகளை அழைத்துக் கொண்டு வந்து இறங்கினான்.. அம்மாவை மன நிலை சரியில்லாத நிலையில் பார்த்திருந்த நிவேதா தயங்கினாள்.. நிலாதான் அவளை அழைத்துவந்து சுமதியிடம் சேர்த்தாள்.. சுமதியை பார்த்து ப்ரம்மித்து நின்றான் ஷிவா.. யாருக்கு நன்றி சொல்வது..? எப்படி நன்றி சொல்வது? என்ன கைம்மாறு செய்வது? என்னோட குடும்பம் நல்லபடியா ஆயிடுச்சு.. அந்த அண்ணாமலையார் தான் உங்க ரெண்டுபேர் ரூபத்தில வந்து காப்பாற்றினார் என சொல்லிக் கொண்டே ஸ்வாமிஜியின் கால்களில் விழுந்தான். புன்னகையுடன் ஷிவாவை தூக்கி நிறுத்தி தோள்களில் தட்டிக் கொடுத்தார் அவர்.

கிளம்பு நிலா.. சென்னைக்கு என்னோடயே கார்ல வந்துரு

இல்ல.. நான் அப்பா கூட ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்..இன்னும் ஒருவாரம் லீவ் பாக்கி இருக்கு

சரி.. கோயிலுக்கு போயிட்டு நான் சென்னை போறேன்.. சீக்கிரம் வரப்பாரு

நிலா..சென்னை வந்ததும் என்னை வந்து பார்ப்பியா.. – என்றாள் சுமதி

நிச்சயமா.. சந்தோஷமா கிளம்புங்க சுமதி.. - என வழி அனுப்பி வைத்தாள் நிலா.

யார் இவள்.. என் தாயா? இல்லை போன ஜென்மத்தில் எனக்கு மகளாக பிறந்து அந்த நன்றிக்கடன் தீர்த்தாளா? இவளுக்கு எப்படி நான் கைம்மாறு செய்யப் போகிறேன்? இவளுக்கு நல்ல கணவன்.. அன்பான கணவன் அமையட்டும்.. நமக்கு தெரிஞ்சவங்கள்ள யாரு இவளுக்கு பொருத்தமா இருப்பான்? சுந்தரை கேட்டுப் பாக்கலாமா? மதி கூட நல்லவந்தான்? ஹரி கூட பொருத்தமா இருப்பான்.. சரி சென்னை வரட்டும்.. நானே நல்லவனா பார்த்து முடிச்சு வைக்கறேன் – என்று எண்ணியபடி காரை ஓட்டினான் ஷிவா..

தொடரும்..

6 comments:

அருள் குமார் said...

இந்த அத்தியாயம் தாங்க இந்த கதையைய் "டாப் கியர்" பொட்டு தூக்கியிருக்கு. போன அத்தியாயம் வரை ரொம்ப நார்மலான கதையாதான் இருந்தது. இப்போதான் எதிர்பார்ப்பு ரொம்ப கூடியிருக்கு. சீக்கிரம் தொடருங்கள்.

பத்ம ப்ரியா said...

ஹாய் அருள்..
எனக்கு பயமா இருக்கு.. நான் எப்படித்தான் இந்தக் கதையை முடிக்கப் போறேனோ.. கடவுளை வேண்டிகிட்டு எழுதிகிட்டு இருக்கேன்.. நல்லபடியா வரணும்னு நீங்களும் வேண்டிக்கோங்க.. ஏன்னா படிக்க போறது நீங்கதான்.. கடவுள் உங்களை காப்பாற்றுவாராக.

மற்றபடி உங்கள் கருத்துபதிவு என்னை ஊக்கப்படுத்துகிறது அருள்.. நன்றி -இப்படிக்கு

சி.செ. சி.ப

வீ. எம் said...

சி.செ. சி.ப


அப்படினா என்னங்க???

அருள் குமார் said...

"சிறுகதைச் செல்வி சிறகுகள் பத்மப்ரியா" -
என்னங்க வீ. எம். பட்டம் கொடுத்த நீங்களே மறந்தா எப்படி?

பத்ம ப்ரியா said...

பட்டம் கொடுத்த பெருந்தகையீர் அதை மறக்கலாம், அப்டீன்னா என்னங்க ??? என மூன்று கேள்வி குறிகளிட்டு கேள்வியும் கேட்கலாம்.. பட்டம் பெற்ற இந்த செல்வி அதை மறக்க முடியுமா அல்லது அந்தப் பட்டத்தை பயன் படுத்தாமல் இருக்க முடியுமா..? ( கிடைச்சதே ஒரே ஒரு பட்டம்.. அதையும் பெருமையா போட்டுக்கலன்ன பட்டம் கொடுத்தவங்களையும், அந்த பட்டத்தையும், பட்டம் பெற்ற இந்த பட்டதாரியையும் ஒருங்கே அவமதிச்ச மாதிரி ஆயிடும்னு அந்த பட்டத்தை பயன் படுத்துமாறு என் பட்டறிவு பகர்ந்ததால் அவ்வாறு சி.செ. சி.ப என பதிந்திருந்தேன்)
ippadikku
Sirukathai Selvi Siragugal Padmapriya.

ச .பிரசன்னா said...

hello ..
Padamapriya ...
i just happened to see your blog incidentally .
the story is somewhat good and finely crafted .
i am regular writer in kumudam and dinamalar and kungumam .
your choice of authors are intresting and intriguing .
keep it up your good work .
if you have the time and mind
visit my blog ...at
http://prasannaparvaikal.blogspot.com/

S.Prasanna .