Friday, August 05, 2005

நிலா - 4

அடுத்தடுத்த மாதங்களில் சுனாமி பயம் அதிகமாகத்தான் இருந்தது.

அந்த வீட்டை காலி பன்னிட்டு சிட்டிக்கு உள்ள வீடு பாருன்னா பாக்க மாட்டீங்களோ..?

இல்ல சார் நந்தினி.....

என்ன நந்தினி.. எவ்ளோ ரிஸ்க் அந்த வீடு... வெரி நியர் டு பீச்..

போகனும்னு இருந்தா போய்த்தானே ஆகனும் ..?

நூத்துக் கிழவி மாதிரி பேசு

நள்ளிரவில் மாண்புமிகு பாஸ் போன் பேசி நிலைமையை ஆற தீர விசாரிப்பதும், மேதகு மேடம் பயம் ஏதும் இல்லை என பதிலிறுப்பதும், போர்வையை விலக்கி பார்க்கும் நந்தினி தலையில் அடித்துக் கொண்டு திரும்பிப் படுப்பதும் – அன்றாட வாழ்க்கையின் அத்யாவசிய நிகழ்ச்சிகளாகிவிட்டன.

சுனாமி வருதோ இல்லையோ.. போன்கால் வருது - நந்தினி

மேடம் யாரு...!? பின்னாடி ஒரு காலத்துல நம்ம ஆபீஸ்க்கு நானே எம்.டி.. ஆகலாம்.. அதை புரிஞ்சு .. இப்பவே மரியாதையா நடந்துக்கறாரா இருக்கும் - நிலா

நினைப்புதான் பொழப்ப கெடுக்கும் எப்பவும்-– நந்தினி.

உண்மையிலேயே இரண்டாம் முறை காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு, இரவு எட்டு மணிக்கு மீன்டும் நந்தினியின் அத்தைவீட்டுக்கு பயணப்படும் வேளையில்.. ஷிவாவின் கால் வரும் என எதிபார்த்து.. எதிர்பார்த்து ஏமாந்தன நிலாவின் அழகிய காதுகள்.. என்னாச்சு..? என்ற அவளின் கேள்விக்கு விடை ... ஷிவா மீன்டும் ஒரு வாரம் லீவ் என்ற செய்தி.

அடுத்தவாரம்....

நந்தினி சுட்டிக் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நிலா.. அதிர்ந்து.. செயலிழந்து.. விக்கித்துப் போய் நின்றாள்....

" வழக்கமா கூட்டிண்டு வரமாட்டான்... எம்.டி. ரொம்ப கேட்டுண்டாரேன்னு அழைச்சுன்டு வந்தான்.. இப்போ ரொம்பவே டிஸ்டிங்விஷ்டா தெரியற்து..யார் செஞ்ச பாவமோ.. இவனுக்குன்னு இப்படி வாய்ச்சுடுத்து... நான் பார்த்து வளர்ந்தவன்.. கல்யாணம் பண்ணின்ட நாள்ளேற்ந்து பட்டுன்டு இருக்கான்..." - கண்களில் நீர் மின்ன கேஷியர் சேஷாசலம் சக ஊழியர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஆறு வயது மகளிடம் இருந்த ஒரு ஐஸ் க்ரீமுக்காக அவளது பின்னலைப் பிடித்து இழுத்து அந்தக் குழந்தை கதறக் கதற அவள் கையிலிருந்து அதைப் பிடுங்கி.. இடது கையில் ஐஸ்க்ரீமும்.. வலது கையில் ஸ்வீட்டுமாக நின்ற அந்தப் பெண்தான் தனது பாஸின் மனைவி என்பதை தாங்கிக் கொள்ளவே இயலவில்லை நிலாவால்.

சிலர் உதடு பிரியாமல் சிரிக்க, சிலர் ஏளனப் புன்னகை புரிய, சிலர் எதுவும் தோன்றாமல் பார்க்க.. சிலர் எப்படி உதவுவது என தெரியாமல் அருகில் செல்ல

-ஒரு நாடகம் நடப்பதைப் போல.. புது ஐஸ்க்ரீம் கிண்ணத்துடன் மனைவியை அணுகி.. அவளது கவனத்தை கவர்ந்து, அந்த ஐஸ்க்ரீமை அவளிடம் கொடுக்கும் போதே மகளை தன் பக்கம் அழைத்து காருக்கு அனுப்பி விட்டு.. மனைவியை அரவணைத்து நடந்துக் கொண்டே திரும்பிப் பார்த்து கண்களால் விடை பெரும் தனது பாஸைப் பார்க்கப் பார்க்க நெஞ்சம் வலிக்க அழுகை வந்தது நிலாவுக்கு.

" கல்யாணத்துக்கு முன்னாடியே மென்ட்டல் தான்.. பையன் நல்லாருக்கானேன்னு அவளோட அப்பா.. அம்மா மறச்சுட்டா.. நிறய சொத்து இருக்கேன்னு இவனோட அப்பா அம்மா தெகச்சுட்டா.. இவன் மாட்டிண்டான்.. ஆனா ஒன்னு.. தங்கமா பார்த்துப்பான்.. இவ்ளோ பன்றாளே.. ஒரு முகம் சுழிக்கறது.. திட்றது .. எதுவும் இல்ல.. கண்ணுல வச்சு தாங்கறான் ....ம்.. புருஷன் அமையறதும் இறைவன் கொடுத்த வரம்தான்... ஒரே புள்ளைக்கு.. இப்டி ஆயிடுத்தேன்னு.. கவல பட்டு கவல பட்டே அப்பா அம்மா ரெண்டு பேரும் போய் சேர்ந்துட்டா. சாகற வரைக்கும் .. “ டைவர்ஸ் பண்ணிடு.. ரொம்ப ஈஸியா டைவர்ஸ் கிடைச்சுடும்.. இல்ல.. வேண்டான்னா.. இவ பாட்டுக்கு இவ இருந்துட்டுப் போகட்டும்.. வேற நல்ல பொண்ணா பார்த்து பண்ணிக்கோடான்னு” தலபாட அடிச்சுக்கிட்டாங்க.. “ அவ என்ன தப்பு பண்ணா? அவளை டைவர்ஸ் பண்ண.. தப்பு பண்ணினது நாம மூணு பேர்.. அதனால நாமதான் தண்டனை அனுபவிக்கனும்னு சொல்லிட்டு ஒரே நிலையா நின்னுட்டன்... நானும் சொல்லிப் பார்த்தேன்.. எனக்கு தெரிஞ்சவாளோட பொண்ணை முடிச்சுடலாம்னு பேசி முடிச்சுட்டேன்.. "வாண்டாம் மாமா.. என்ன பாவம் செஞ்சேனோ.. இப்படி விழுந்துட்டேன் இன்னோரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்க வெண்டாம்" னு சொல்லிட்டான்.."

- கேஷியர் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்கக் கேட்க.... சூழ் நிலை மறந்து அழுதுவிடுவோமோ என பயந்தாள்... சாப்பிடப் பிடிக்காமல் கையிலிருந்த பீங்கான் தட்டையும்.. ஸ்பூனயும் மேசைமேல் வைத்தாள்... நந்தினி பார்த்து விடப் போகிறாளே என சர்வ ஜாக்ரதையாக திரும்பி கண்களை துடைத்துக் கொண்டு.. நந்தினியைப் பார்த்து “ போலாமா “ என்றாள்... இந்த ஒரு வார்த்தை பேசுவதற்க்குள் தொண்டயும் நெஞ்சமும் வலித்தது நிலாவுக்கு.

முழு ப்ளேட்டையும் முழுங்கிவிட்டு.. ஐஸ்க்ரீம், ஸ்வீட் இரண்டயும் இரண்டு முறை வாங்கி சாப்பிட்டு விட்டு.. பீடா.. ஸ்வீட் சோம்பு, ப்ரூட் சாலட்.. இன்னும்.. மற்றும்.. பிற அனைத்து வகையான, பறிமாறப்பட்ட அத்தனை பொருட்களையும் வாங்கி ஆற அமர நிறுத்தி நிதானமாக சாப்பிட்டுவிட்டு.. மினரல் வாட்டரை போதுமான அளவுக்கு குடித்துவிட்டு.. பின்பு நிலா நிற்குமிடம் வந்து “ போலாம்” என்றாள் நந்தினி.

என்னால வண்டி ஓட்ட முடியாது நந்து.. நீ ஓட்டு

சரீ.. வெறும் வயத்தோட வற்றியே.. எதாச்சும் வேண்டுதலா..

ப்ச்.. பேசாம ஓட்டு

ஏன் அழற?

யார் அழறா?

நீதான்... இப்ப எதுக்கு அழறன்னு எனக்கு தெரிஞ்சாகனும்.. ?

நான் ஒன்னும் அழல..

முண்டம்.. அது அவரோட தலை எழுத்து.. அதுக்கு நீ சாப்பிடாம அழுதா அவங்க வைஃப் .. நார்மலாகி.. ஜீனியஸ் ஆயிடுவாங்களா..? நீ இப்டி அழறதும் அப் நார்மல் தான் நிலா.

நான் அழல..

உன் முகம், கண்ணு, குரல் எல்லாமே அழுது... ஐஞ்சு வருஷமா உன்னொடயே இருக்கேன் .. என்கிட்டயே..அழலன்னு சாதிக்கற..?

ரூமிற்கு வந்ததும்..கதா நாயகி படுக்கையில் விழுந்து தலயணையில் முகம் புதைத்துக் கொள்ள.. நந்தினி பால் சுட வைத்து காம்ப்ளான் கலந்தாள்..பிஸ்கெட்டையும் எடுத்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து

“ எழுந்திரி.. இந்த பிஸ்கெட் சாப்டு நிலா.. நடு ராத்ரில.. பசிக்குதுன்னு சொல்லத்தெரியாம வயத்த வலிக்குதுன்னு தூங்க மாட்ட”

வேண்டாம் நந்து

ஏய் .. ச்சீ..... சாப்டு

அவள் மடியில் முகம் புதைத்து.. கேவிக் கேவி அழுதாள்.. நிறுத்த நினைத்தாலும் நிறுத்த இயலவில்லை நிலாவால்...

எதுக்கு அழற இப்போ..?

தெரியல

நீ அழறதால எந்த யுஸும் இல்ல

தெரியும்

அப்புறம் ஏன் அழ்ற?

அழுக வருது அழறேன்

அப்ப அழு

நந்து.. போகாதே.. உன் மடி வேணும் எனக்கு

என்னடி நீ.. உன் உடம்புதான் பாழாப் போகும்

நந்து.. நந்து.. நான் போன் பண்ணி பேசட்டா?

யாரோட?

ஷிவாவோட

எந்த ஷிவா?

ப்ச்.. என்னோட பாஸோட

இது எங்கப் போயி முடியப் போகுதோ...? ம்.. எதோ செய்.

முதன் முறையாக நள்ளிரவில்.. நிலாவின் செல்லிலிருந்து ஷிவாவின் செல்லுக்கு சென்றது ஓர் உயிர்ப்பு

என்ன நிலா..?

ஒன்னும் இல்ல

இதை சொல்லத்தான் போன் பண்ணியா? குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு..? கோல்டா..?

இல்லல்ல...

தென்.. எதுக்கு போன் பன்ன?

ஆர் யூ சேஃப்

தலையிலடித்துக் கொண்டாள் நந்தினி..."பைத்தியம்... அபத்தமா உளற்ற.. "என்று சொல்லிக்கொண்டே செல்லை வாங்கி “ சார் .. தப்பா எடுத்துக்காதீங்க.. ஈவ்னிங் பார்ட்டில.. நீங்க திடீர்னு கிளம்பி போனதை விசாரிக்கறாளாம்.. ஓ.கே பய்.” என்று சொல்லி காலை கட் செய்தாள் நந்தினி....

ஆரம்பிச்சிட்டாங்கையா... ஆரம்பிசிட்டாய்ங்க...தொடராம ...இருப்பாய்ங்களா..?

தொடரும்

5 comments:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

படிப்பதற்கு சுவராசியமாய் இருக்கிறது. ஆனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என ஊகித்து விடுவோம் என நினைக்கிறேன்.

Karthik Kumar said...

kalakuringa.

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

பதமா,
அடுத்த நிலா எப்பொழுது உதிக்கும்?

பத்ம ப்ரியா said...

I think... now it is Amavasai.. my Nila will be available after 2 or 3 days latter.(due to heavy work load i am unable to write...now i am writting the next portion.. as soon as possible Nila 5 will be published)

Then..kangs, karthic.. my heartiest thanks for your comments.. your comments are encouraging me.

வீ. எம் said...

waiting for pournami :)

btw, read my story in
http://arataiarangam.blogspot.com