Wednesday, August 03, 2005

நிலா - 3

வழக்கமான அலட்டலோடு ஸ்டைலாக நடக்கலாம் என்று நினைத்தாலும் கால்கள் விந்தி விந்தித்தான் நடக்க முடிந்தது

குட் மார்னிங் சர்

வெரி குட் மார்னிங்... இப்ப எப்டி இருக்கு

நத்திங்.... ஆனா வண்டி ஓட்ட முடியாம கஷ்ட்டமா இருக்கு

அடுத்தவாரம் ஓட்டிக்கலாம்... போய் சீட்ல உட்காரு... அப்பாடா .. இனிமே சீட் சீட்டா நின்னு வம்படிக்காம, உக்காந்து ஒழுங்கா வேலை செய்வ

(உன் கண்ணே பட்டிருக்கும் கருத்து.. உன் கண்ணே பட்டிருக்கும்.. உன்னை என்ன பண்ணா தகும்) - என்று நினைத்தாள்.. பின்பு சத்தமாக

நீங்களும் என்னையே வாட்ச் பண்ணாம ஒழுங்கா வேலை செய்வீங்க - என்றாள்

முறைத்தது கந்தசாமி.

அவளும் முறைத்தாள், எனக்கென்ன பயமா என்பதைப் போல ( ஆனாலும் உள்ளூர பயம் தான்.. வாபஸ் வாங்கின மெமோவை திருப்பி குடுத்துறுமோ? கொஞ்சம் அடக்கி வாசியேன் நிலா.. உனக்கு வாய் ஜாஸ்தி தான்)

தாகமாய் இருந்தது.. சீனு என்ன ஆனான்.. டிஸ்பென்சர் நோக்கி நடந்தாள்

என்ன... எங்க போற?

வந்து... தண்ணீ வேணும்

சீனு எங்க.. சரி நீ போ.

தண்ணி குடிக்க கூட போகக் கூடாதுன்னா.. உனக்கு கொத்தடிமையா நாங்க..? மவனே வா.. தப்பு தப்பா பில் பாஸ் பண்ணி உன்னை மாட்டவைக்கறேன்.. நினைத்துக் கொண்டே நான்கு நாள் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

ஐ.. இங்கயே கூலர் வந்து நிக்குது.. எப்ப வச்சாங்க..? என்றாள் நந்தினி

அட.. ஆமா.. எப்ப? எனக்கு தெரியாதே..!

மேடம்க்கு கால்ல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.. அவங்க நார்மலா துள்ளி குதிக்க ஒரு மாசம் ஆகும்.. அவங்க கஷ்ட்டப்படக் கூடாது இல்லயா..? அதுக்குத்தான்..

லூசா நீயி... இதெல்லாம் மேனேஜ்மென்ட் டாக்டிஸ்.. உனக்கு வேணுங்கற வசதிய சீட்லயே தறேன்.. சீட்டோட சீட்டா தேஞ்சு ஒழைச்சு ஓடாப் போயிடுங்கறது தான் அதோட கான்சப்ட்.. இது புரியாம... பேசாம சாப்டு நந்து..

மறு நாள்..அப்பாடா கருத்து கந்தசாமி ஒருவாரம் லீவ்.. அந்த ஒரு வாரம் அம்சமாகப் போனது

ஆனால் அடுத்தவாரம்.. சோக வாரம்..கருத்துவின் முகம் சோகமாய் இருந்தது போலப் பட்டது..” என்னாச்சு..!?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்
--------------------------------------------
அழகிருக்குமிடம் ஆபத்தும் இருக்குமல்லவா?

“இந்த பால்கனியில நின்னுன்டு பார்த்தா சூர்யோதயமும் சந்ரோதயமும் சூப்பரா தெரியும்.. சிலு சிலுன்னு காத்து, உங்களுக்கு முன்னாடி இருந்தவோ இந்த பால்கனியில உக்காந்து படிச்சு இப்போ ஸ்டேட்ஸ்ல இருக்கா”- பேயிங் கெஸ்ட் ஆஸ்ட்டல் நடத்தும் மாமி செய்த விளம்பரம்..துளியும் தப்பில்லை, இடது பக்கம் நித்யமல்லி படர்ந்து மலர, வலது பக்கம் தென்னக்கீற்றின் இடைவெளியில் தெரியும் சந்திரன் அழகுதான்... முக்யமாக.. இயற்கையை ரசிக்கும் இவர்களை ரசிக்க எதிர்த்தாப்ல மாடி வீட்டு மாமாவோ, ரோட் சைட் ரோமியோவோ, மெயின் ரோட் மெக்கானிக்கோ இல்லாதது இன்னும் அம்சம்..

ஆனால் அந்த அம்சமெல்லாம் டிசம்பர் 26 சுனாமியில் அடித்துக் கொண்டு போனது..

காலை... பால்கனியில் நந்தினியோடு காபி சாப்பிட்டபடி வேடிக்கை பார்க்கையில்தண்ணி வருது.. தண்ணி வருது – என அழுதபடியே குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி மெயின் ரோட்டை நோக்கி நடந்த கும்பல் .. “ஏதோ விபரீதம் “ என்பதை மட்டும் புரியவைத்தது.

நந்தினி டிவி ஆன் செய்ய.. அழைக்கும் தனது செல்லை எடுத்தாள் நிலா

" நிலா முக்யமான சர்டிபிகேட்ஸ், கிரெடிட் கார்ட், ஜுவல்ஸ், கொஞ்சம் டிரஸ்ஸஸ் எடுத்துக்கிட்டு உடனே கிளம்பு.. நேரா இங்க சி.ஐ.டி நகர் வந்துரு.. இல்லன்னா வெஸ்ட் சைட் யாராவது ரிலேட்டிவ்ஸ் இருந்தா அங்க போய்டு... கடல் தண்ணி உள்ள வந்துட்டு இருக்கு "– இதை சொன்னது யாராக இருக்கும்.. ?வேற யாரு..? நம்ம கதையின் நாயகர் சிவக்குமார் தான்.

நந்தினியிடம் விஷயம் சொல்லி முடிப்பதற்க்குள் அவள் இவளுக்கும் சேர்த்து அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டாள்...
“உங்க பாஸ் வீட்டுக்கெல்லாம் போகவேண்டாம், என்னோட அத்தை வீடு அண்ணா நகர்ல இருக்கு... அங்க போயிடலாம்” என அவளே தீர்மானித்து, அவளே ஆட்டோ பேசி, அவளே இவளை அழைத்தும் சென்று விட்டாள்... " சி.ஐ.டி நகர் போய்த்தான் பார்த்தா என்ன..? அண்ணா நகரை விட இது கிட்டத்தானே..” – என்று நினைத்துக்கொண்டாள் நிலா...

" கிளம்பிட்டியா... எங்க இருக்க..? நான் வேணா கார் எடுத்துண்டு வரட்டா? ஆர் யூ சேஃப்..? கேஷ் இருக்கா கையில..? – அரை மணிக்கொருமுறை ஷிவாவிடம் இருந்து வந்த கால்கள் அவளை என்னவோ செய்தது.. சந்தோஷமாக இருந்தது..சிரித்துக்கொண்டே இருந்தாள்.. இந்த வகையான அக்கறை புதியது.... நந்தினி இதைவிட அக்கறை காட்டுகிறாள்... அவளுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்வதில்லை இவள்.. ஆனால் இதற்கு..? உடனே ஓடிப்போய் “ நீங்க எப்டி இருக்கீங்க..? நந்தினிதான் அண்ணா நகர் அழைச்சிட்டு போய்ட்டா” என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது நிலாவுக்கு.

மறு நாள்.. விடிந்ததும் வேகமாய் அலுவலகம் வந்து “ தேங்க்ஸ் சர்.. தேங்க்ஸ் பார் யுவர் கர்டஸி “ என சொல்ல நினைத்த நிலாவுக்கு.. அவளது பாஸ் மீண்டும் ஒரு வாரம் விடுமுறை என்ற செய்தி மிதமான அதிர்ச்சி மற்றும் லேசான ஏமாற்றம் ....மட்டும் அளித்திருந்தால்.. இந்தக் கதை கந்தலாகியிருக்கும்..

ஆனால் அவ்வாறில்லாமல்..

கொஞ்சம் அழுகை.. கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் கோபம் ஆகியவற்றை வரவழைத்ததால்.. இந்தக் கதை காவியமாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் தென்படுகின்றன.. எனவே டோன்ட் மிஸ் இட்.. ஓகே..

தொடரவேண்டியவைகள்......தொடரும்........

3 comments:

பரணீ said...

நன்றாக கொண்டு செல்கிறீர்கள்.
தொடருங்கள்.

Kangs(கங்கா) said...

mmm.. supera இருக்கு கதை.. அடுத்ததை சிக்கிரம் பிரசுரிங்க

Villapuram Jeyabalan said...

Priya,
It's nice to note that you are improving.
You have learnt to compress the words, still express the feelings of the characters fully.

Eppo "Aadi" mudiyum ? Eppo makkalukku viduthai kidaikkum (from your blololologgggggggg)?