Saturday, July 30, 2005

நிலா - 2

"சார்.. நான் நிலா பேசறேன்"

"சொல்லுங்க"

"வந்து... வண்டில வரும் போது .. சின்ன ஆக்சிடென்ட்.. ஆட்டோகாரன் மேல இடிச்சுட்டேன்...கால்ல பிராக்ச்சரா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு..!"

"யாருக்கு... ஆட்டோகாரருக்கா?"

"இல்ல.. எனக்கு"

"ஸோ.. லீவு வேணும்.. அதானே..?"

"அதேதான்"

" நோ ஓ ஓ ஓ....

"என் லீவ் சார் அது.. அதை நான் தான் எடுக்கனும்"

"பட்... அதை நான் தான் சாங்ஷன் பண்ணணும்"

"சார்... ப்ளீஸ்"

"லீவ் சொல்ற நேரமா இது...? மதியம் மணி ரெண்டாகுது..திஸ் ஈஸ் நாட் பேர் நிலா"

"சார்...ப்ளீஸ்.. இந்த ஒரு முறை சாங்ஷன் பண்ணிடுங்க..சந்த்ரமுகியும்...மும்பையும் பார்த்துடுவேன்"

"திஸ் ஈஸ் டூ மச்.. நாளைக்கு காலைல ஆபீஸ் வர.. வந்து வேலை செய்ற.."

"அப்புறம் உங்க இஷ்ட்டம்.. "- என்று சொல்லி போனை வைத்தாள் நிலா

ஆனால் மறுனாள்.. அவள் அலுவலகம் போகவில்லை. கால்கள் வீங்கி, காய்ச்சலோடு நினைவிழக்கும் நிலையில் இருந்தவளை.. நந்தினிதான் க்ளினிக் அழைத்துச் சென்று அனைத்து பரிசோதனைகளயும் முடித்து.. மருந்துமாத்திரைகளை வாங்கி.. அறைக்கு அழைத்து வந்து ..படுக்க வைத்துவிட்டு..சுடுதண்ணி.. அரிசி கஞ்சி எல்லாம் செய்துக் கொண்டிருந்தாள்

"வெளுத்து கட்ற..!? என்ன மெனு..? சுடுதண்ணி, அரிசி கஞ்சி, ஆவின் பாலா? -படுக்கையில் சாய்ந்தபடி கேட்டுக் கொன்டிருந்தாள் நிலா

அவளை கண்டு கொள்ளாமல்....

" நிஜமாத்தான்... நீ வந்து பாரு சீனு.. காய்ச்சல் 102 இருக்கு... ஆனா தூங்காம, என்னை நக்கலடிசிட்டு இருக்கா" -– என்று பேசி போனை வைத்தாள் நந்தினி.

சைக்கிளில் வந்து இறங்கிய சீனு.. பயந்துதான் போனான்.

"அட இன்னாமா இது..!? இந்த மாறி கால் ஒடிஞ்சிடிச்சின்னு லீவு கேக்றத உட்டுட்டு.. சந்த்ரமுகி பாக்கணும்.. மும்பை எக்ஸ்ப்ரஸ் பாக்கணும்னு லீவு கேட்டா எந்த மேனேஜருக்குத்தான் கோவம் வராது.. மெமோ ரெடி பண்ணிட்ட்டாரு.. !!! நாந்தான் மனசு கேக்காம ஒரு போன் பண்ணி வெவரம் சொல்லலாம்னு எதேச்சையா பண்ணா.. இங்க இப்டி இருக்கு.. சரி நான் எதானும் உதவி பண்ணனுமா?" - என்றான்.

"புது படம் சீ டீ மட்டும் வாங்கித்தா சீனு.. போர் அடிக்குது " - என்றாள் நிலா.

வேகமாய் சைக்கிளில் போனான் சீனு.. அடுத்த அரை மணி நேரத்தில்.. வாசலில் ஸ்ப்ளென்டெர் சப்தம்.

" ஏய் .. நந்து.. எங்க பாஸ் ஸ்ப்ளென்டெர் மாதிரி இருக்கு..!? போய் பாரு ..- என்றாள் நிலா

அதற்குள் அறைக்குள் வந்து விட்டனர் திருவாளர் பாஸ் ம் அவரது ப்யூன் சீனுவும்.

"எதுக்குமே சீரியஸ் ஆகமாட்டியா நிலா நீ? "- கொஞ்சம் சத்தம் அதிகமாகத்தான் வந்தது ஷிவாவிடம் இருந்து

சார்.. முதல்ல உக்காருங்க... சூடா சுடு தண்ணி சாப்ட்றீங்களா ..?- என்றாள்

" நேத்தே என்கிட்ட ஏன் சொல்லல..?

" போன்ல சொன்னேனே சார்..!

"ஏதோ...காமெடி மாதிரி சொல்லிட்டிருந்த"..?

"ரெண்டு தடவை ப்ளீஸ்.. ப்ளீஸ்னு கெஞ்சினேனே சார்..! அந்த சென்டிமென்ட் போதாதா...?

"சரீ.. சரீ.. டாக்டர் என்ன சொன்னார்..? ப்ராக்சராமா?"

"ஒன்னும் இல்ல...மஸ்ஸில்ஸ் இஞ்சுரிதான்..ரெண்டு நாள் முழு ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லி இருக்கார்"- என்றாள் நந்தினி.

"சார்... நீங்க செகன்ட் மெமோ ரெடி பண்ணிடுங்க -" என்றாள் நிலா.

"ஏன்..? எதுக்கு...?

" நீங்க என் பாஸ்... நீங்க நிக்கும் போது நான் பெட்ல ஸ்டைலா சாஞ்சுகிட்டே லீவ் கேக்கறேன்... ஒரு மட்டு மரியாதை வேண்டாமா? திஸ் இஸ் நாட் பேர்.. நீங்க ரெடி பண்ணிடுங்க.. நான் லீவு முடிஞ்சி வந்து வாங்கிக்கறேன்" - என்றாள் நிலா.

" மரியாதை மனசில இருந்தா போதும்.. சீனு வா என் கூட "- என்றபடி வெளியில் நடந்தார் ஷிவா.

அடுத்த அரை மணியில் ஒரு காம்ப்ளான், கொஞ்சம் பழங்கள், ரெண்டு பாலகுமாரன் நாவல்கள், இரண்டு புது பட சீ.டீ க்கள் ஆகியவற்றை வாங்கி சீனுவிடம் கொடுத்தனுப்பிவிட்டு அலுவலகம் சென்றதாக கேள்வி.

"என்னடி இது..! இவ்ளோ கைண்டா உங்க பாஸ்? அன்னிக்கு...அப்டி திட்டுன..? என்றாள் நந்தினி.

நிலாவுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.. என்ன இது... நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோமா..? இல்ல நேத்து போன்ல கத்தினது மனசை உறுத்தி செய்ற ப்ராயசித்தமா..? - அவளை மேலே சிந்திக்க விடாமல்..” என்னை எடுத்துப் படியேன் நிலா’’ என்று பாலகுமாரன் நாவல்கள் அவளது கருத்தைக் கவர்ந்தன.

ஆமா எனக்கு பாலகுமாரன் நாவல்ஸ் பிடிக்கும்னு எப்டி தெரியும் உங்களுக்கு..? வியந்தாள்... இவ்ளோ சென்ட்டியா நீங்க..? என்றும் கேட்டுக் கொண்டாள்.

உங்கள் அழகிய கருவிழி கதா நாயகி ஒரு துள்ளளோடு, நெஞ்சம் நெகிழ, நினைவுகள் தித்திக்க.. இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க..

"இது சரியில்லயே ...ஷிவா கொஞ்சம் ஓவரோ..! ரூட் மாறுதோ.." - என்று நினைத்தனர் நந்தினியும்.. சீனுவும்...

தொடர்ந்தால்தானே தொடர்கதை எனவே அனைத்தும் ...

- தொடரும்

2 comments:

Jayaprakash Sampath said...

ஆஹா... கதை எந்தப் பக்கம் திரும்பபோகுதுன்னு புரிஞ்சி போச்...:-)

குழலி / Kuzhali said...

எனக்கும் புரிந்து விட்டது... கதையை வைத்து அல்ல, எழுத்தாளரின் முந்தையை படைப்புகளை வைத்து...

நடை மேம்பட்டுள்ளது நன்றாக உள்ளது