Saturday, July 23, 2005

நிலா

“ நாங்க எல்லாரும் கரெக்ட்டா 7 மணிக்கு லைட் அவுஸ் வாசல்ல நிப்போம்.. வேன் ரெடியா இருக்குமா..? என்னால எல்லாம் ரொம்ப நேரம் வெய்யில்ல நிக்க முடியாது.. யு சீ .. மை ஸ்கின்... ஏ சி வேன் தானே அரேஞ்ச் பன்றீங்க”” – என்றாள் வெண்ணிலா அலைஸ் நிலா.

ரொம்ப ஓவர்.. கொஞ்சம் அடக்கி வாசி – என்றான் சுரேஷ்.

சரி.. புது மேனேஜருக்கு சொன்னீங்களா? இல்லயா? டேபிளோட டேபிளா தவழ்ந்துட்டு இருந்தாரே இப்ப எப்படி இருக்கார் ? என்றாள் மீனா.

இப்பத்தான் தலயை நிமிர்த்தி வாட்ச் மேனை பார்த்து பேச பழக இருக்காரு – என்றாள் நந்தினி.

ஏய்... அத யாரு லிஸ்ட்ல சேர்த்தது? அதை டூர் கூட்டிட்டு போறோம்னு அதுகிட்ட சொல்டீங்களா..!? போச்சுடா... ஒரு நாளாவது நிம்மதியா இருக்கலாம்ப்பா... அது கருத்து கந்தசாமியாச்சே...!!.. நாளைக்கு டூர்.. டூர் தான்.. அறிஞ்சவ.. தெறிஞ்சவ..பெரியவளா ஒருத்தி இருக்கேனே.. என்கிட்ட கேக்கனும்னு தோனுச்சா உங்களுக்கு? அந்த சின்சியர் சிகாமனி வரலன்னாத்தான் எனக்கு நிம்மதி “ – என்றாள் நிலா.

Hello.. உன்னோட பாஸ் அவர்.. அது நினைவு இருக்கட்டும் - என்றாள் மது.

பாஸ்னா ஆபீஸ்ல மட்டும்தான்.. டூர்லெல்லாம் நிலா தான் பாஸ் .. ஓ கே. லவ் ஜோடீஸ் எல்லாரும் கவனமா கேளுங்க... ஓரம் கட்டி ஒதுங்கறதானா தனியா இன்னோரு நாள் போய்க்கோங்க.. நாளைக்கு எல்லாரும் வெறும் கலீக்ஸ் மட்டும்தான் .. நாட் லவ்வர்ஸ். நாட் ஜொள்ளர்ஸ்.. ஓ கே – என்றாள் நிலா.

"நீயும் லவ் பன்னிப்பாரு .. அப்ப தெரியும்... நாங்கள்ளாம் உன் கண்ணுக்கே தெரியமாட்டோம்"

கரெக்ட்.. நீங்க சொல்றது ரொம்ப சரி – என்றாள் நிலா.

நிலாவா...? நிலாவா இப்படி ..?மறு பேச்சு பேசாமல் ஆமோதிப்பது?
என்னச்சு நிலா உனக்கு.. உடம்பு சரியில்லயா..? எதிர்த்தே பேசல?- என்றான் ஜோஸ்.

எப்டி தெரிவீங்க..? காதலுக்குத்தான் கண்ணில்லயே ?- என்றாள். பின்பு அங்கிருந்த மாடிப்படிக்கட்டில் இரண்டு படிகள் ஏறி நின்று "அப்புறம்.. கேர்ள்ஸ்.. இங்க கவனிங்க எல்லாரும்.. நாளைக்கு நாம எல்லோரும் லைட் கலர் ப்ரின்டட் சில்க் சாரிலதான் வரோம்.. ஜிமிக்கி அன்ட் ஜாஸ்மின் மஸ்ட்."

"கடவுளே... கொடுமைடா... இதுங்க சாரி கட்டிகிட்டு வந்து.. தடுக்கி தடுக்கி விழுந்து.. நாம அத பார்த்து.. நிலா நாளைக்கு நாம போப்போறது இன்ப சுற்றுலா.. அதை துன்ப சிற்றுலாவாக்கிடாத – என்றான் சுரேஷ்.

"சுரேஷ்... ப்ளீஸ்.. தென்... பாய்ஸ் நீங்கல்லாம் ஜீன்ஸ் அன்ட் ப்ரீக் டீ ஷர்ட்தான் போட்டுட்டு வரனும்.. முக்யமா .. வருஷத்துல ஒரு நாளாவது குளிங்க.. அந்த பொன்னாள் நாளைக்கா இருக்கட்டும்.. ஏன்னா 3 கோயிலுக்குப் போகப் போறோம் - என்றாள் நிலா.

போதும் நிலா... Head மாஸ்டர் போல நடந்துக்காதே – என்றான் ஜோஸ்.

"அப்ப... கருத்து கந்தசாமி...? என்றாள் நந்தினி.

அது மஞ்சள் அன்ட் மஞ்சள் சபாரில வரும் பாரு... நிச்சயதார்த்ததுக்கு போறா மாதிரி – என்றாள் நிலா.

"போதும் நிலா.. இதெல்லாம் அப்டியே உன் பாஸ் காதுக்கு போகப் போவுது"

மொத்தம் இருபது பேர்.. பன்னிரண்டு ஆண்கள், எட்டுப் பெண்கள்.. இளம் காலையில் குளிர் காற்று முகத்தில் பட வேகமான பயணம்... வழியில் இருக்கும் மூன்று கோயில்களையும் .. இறுதியாக மகாபலிபுரத்தை பௌர்ணமி உதயத்தில் பார்த்துவிட்டு திரும்புவதாக திட்டம்.

எட்டு மணிக்கெல்லாம் முதல் கோவில். என்ன ஆச்சர்யம்... முதல் படிக்கட்டு வரை தளும்ப தளும்ப தண்ணீர். சிலுசிலுவென காற்றில் சிணுங்கும் சிற்றலைகள் காற்றோடு செல்லம் கொஞ்சின. "இவ்ளோ தண்ணீர் தளும்பும் குளம் தமிழ் நாட்டில் இருக்குதா ?"என்ற கேள்வியோடு சில்லென்று கால்களை நனைத்து, கைகளால் அளாவி விளையாடி அந்தக் குளக்கரையிலேயே நின்றுக் கொண்டிருந்தனர் நிலா குழுவினர். காணாததை கண்டதுப்போல குளத்தை இவர்கள் வேடிக்கைப் பார்க்க இவர்களை உள்ளூர்க்காரர்கள் வேடிக்கைப் பார்த்தனர்.

ஆனால் ஒரே ஒருவர் மட்டும்... கோவில் குளத்து நீரில் கால்களை நனைக்காமல், கைகளால் அள்ளி தலையில் தெளித்துக் கொள்வதும், எதோ முணுமுணுத்துக் கொண்டே கால்களை நனைத்துக் கழுவுவதுமாய் இருந்தார். அவர் வேறு யாரும் அல்ல நிலாவின் பாஸ்தான்.

“ நிலா உன் பாஸை பாரேன்... ஸ்லோகம்லாம் சொல்றாரு...தீர்த்த யாத்ரைக்கு வந்த எபெக்ட் தராரு...!?

"அவங்க அம்மாவோ மிஸஸோ சொல்லி தந்திருப்பாங்க.. அதை பாலோ பன்றாரா இருக்கும்.. எங்க பாட்டி கூட சொல்லுவாங்க.. கோயில் குளத்தில இறங்கும் போது கோயில் தீர்த்தத்தை அவ மரியாதை பன்ற மாதிரி காலை முதல்ல நனைக்க கூடாது, கையால தண்ணியை எடுத்து தெளிச்சிக்கிட்டு அப்புறம் இறங்கி குளிக்கனுன்ம்னு..."

என்ன... பாஸ் மேல திடீர் கரிசனம்.. விட்டு தரவே மாட்டேங்கற...?

Hello... நல்ல விஷயம் எங்க இருந்தாலும் பாராட்டனும் புரிஞ்சுதா ? அதை விடு.. இந்த இடம்.. இந்த கோவில்.. கல் படிக்கட்டு.. சில்லுன்னு குளம்.. இதெல்லாம் எவ்ளோ அழகா இருக்கு.. அமைதியா.. நிம்மதியா இந்த குளக்கரைல உக்கார்ந்திருந்தாலே போதும்..எவ்ளோ இருந்தாலும் நகரம் நரகம் தான் –என்றாள் நிலா

ரெண்டு நாள் தான் ... அப்புறம் போரடிச்சுடும் நிலா என்றார் அவளது பாஸ்.

வானத்தைப் பார்த்தாள், பின்பக்கம் திரும்பி பார்த்தாள், நந்தினியை விலக்கி அவளின் பின்னால் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தாள்... குரல் வந்த திசையை மட்டும் சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் நிலா.

என்ன தேடற நிலா?

இல்ல.. என்னோட பாஸ் ஒருத்தர் எங்க கூட வந்தார் அவரைக் காணோம்.. ஆனா அவர் குரல் மாதிரித்தான் இருந்தது இப்ப..

Hello.. நாந்தான் பேசினேன் இப்ப என்றார்

நெவெர் ... அவர் பேச ஆரம்பிச்சா ஒரே ஒரு ஸென்டென்ஸோட நிறுத்தி பழக்கமே இல்ல.. அதுவும் எண்ணி ஐஞ்சு வார்தைகள் போட்டு ஒரே ஒரு சென்டென்ஸ் பேசி நிறுத்தறது கண்டிப்பா அவர் இல்ல..எங்க தொலைஞ்சாரோ.. அவரோட காவிய கருத்துக்களை கேக்காம இந்த சுற்றுலா வெற்றுலாவா ஆய்டும் - என்றாள்.

உனக்கு வாய் அதிகம்னு நான் ஜாய்ன் பண்ணும் போதே சொன்னாங்க.. ஆனா இவ்ளோ வாயாடியா இருப்பன்னு நான் கற்பனை கூட பண்ணல என்றார்.

ஆங்.. இப்ப.. இப்ப பேசினது எங்க பாஸ்தான்.. திரும்ப கிடைச்சிட்டீங்க - என்றாள்

எல்லோரும் கோவிலுக்குள் நுழைந்து எதோ போனால் போகட்டுமென கடவுளை வணங்கி வரும் போது, அவர்களது பாஸ் எனப்பட்டவர் கோவிலின் முதல் படிக்கட்டில் துவங்கி, ஒவ்வொரு சன்னிதியிலும் நின்று தொட்டு தியானித்து, சேவித்து, கண்மூடி, விழுந்து, எழுந்து, ஸ்லோகம் சொல்லி வணங்கி வருவதற்குள் வெறுத்துத்தான் போய் விட்டனர் மற்ற அனைவரும் .

“ இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் இதை கழட்டி விட்டுடலாம்னு... நீங்க தான் கேக்கல... என்னொட பாஸ் அது.. முழுசா ஒரு மாசம் அது கிட்ட வேலை செஞ்சிருக்கேன்.. அது எந்த அளவுக்கு ராவல் பார்ட்டின்னு எனக்குத்தான் தெரியும்.. சரியான கருத்து கண்ணாயிரம்பா அது.. இப்ப பாரு... இங்கயே உக்காந்து அபிராமி அந்தாதி பாடப் போகுது.. கடவுளே அதுக்கு ஸ்லோகம்லாம் மறந்துடனும், உன் கிட்ட சொல்றத்துக்கு ஒரு ஸ்லோகம் கூட நியாபகமே வரவே கூடாது “” – என்று சத்தமாக வேண்டிக் கொண்டாள் நிலா.

மேற்படி கலாய்ச்சலுக்கு ஆளான அந்த பாஸ் ஐம்பது வயதை கடந்த, தலை நரைத்த, கண்ணாடிப் போட்ட வள் வள் வள்ளல் என நீங்கள் நினைத்திருந்தால் .. சாரீ நீங்கள் இந்தக் கதையை படிப்பதை இத்துடன் நிறுத்திக் கொண்டு.... இதற்கு பதிலாக கம்ப இராமாயணமோ, பதிற்றுப் பத்தோ, குற்றால குறவஞ்சியோ படிக்கலாம்...தப்பில்லை.

இருபத்தி மூன்று வயதான நிலாவின் புதூ பாஸாக வந்த அவருக்கு மிஞ்சிப் போனால் ஒரு முப்பது.. அல்லது முப்பத்தி இரண்டு இருக்கும். திருச்சியிலிருந்து மனைவி, மகளுடன் போன மாதம்தான் சென்னை வந்து செட்டில் ஆனார்.வந்த புதிதில் குனிந்த தலை நிமிரா குணக்குன்றாக இருந்தவர்.. இப்போதுதான் ப்யூன் சீனுவை தலை நிமிர்ந்து பார்த்து பேசி பழக ஆரம்பித்திருக்கிறார்.. மற்றவர்களுடன் சகஜமாகப் பழக இன்னும் ஒரு மாமாங்கம் ஆகும். அதுக்கும் அடுத்தாப்ல..முக்யமா பொண்ணுங்க.. சைட் அது இதுன்னு ஆரம்பிக்க அடுத்த ஜென்மம் ஆகலாம்.. இல்ல அதையும் தாண்டி போகலாம்.

விழுந்து புரண்டு வேண்டிக் கொண்டு வந்தவரை நிறுத்தி

"சார்.. நீங்க ஆன்மீக பற்றோடு இருங்க.. வேண்டாங்கல... அதுக்காக அங்கப் ப்ரதட்சனமெல்லாம் இப்டி ஆபீஸ் டூர் வரும் போதே முடிச்சுக்கறது .. அவ்ளோ நல்லால்ல ஸார்" – சொல்லியே விட்டாள் நிலா.

ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

அடுத்த கோவில்களிலும் அவரது நடவடிக்கைகளை கவனித்த போதுதான் வெளி தெரியாத சோகம் அவரது கண்களில் நிலைப்பதை கவனித்தாள் நிலா.

என்ன சோகமோ? என்ன குறையோ...? நாம வேற ரொம்ப காலாய்க்கறோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

மாமல்லபுரத்தை நோக்கி வேன் பறந்தது...

சார் நீங்க ஒரு பாட்டு பாடுங்க - என்றான் ஜோஸ்

வேன்டாம்பா... எனக்கு அவ்ளோ பாட வராது - என்றார் பாஸ்.

பாஸ்... பாஸ்னா அவ்வளவு அன்யோன்யமா இல்லை.. ஸோ .. இனி அவரோட பேராலயே அவர் அழைக்கப்படுவார்.. அதாவது சிவக்குமார் அலைஸ் ஷிவா.

"கச்சேரியா கேக்கறோம்.. சும்மா எதாவது சினி சாங் பாடுங்க சார்.

" ஸார்.. நீங்க..பாடுங்க.. வேண்டாங்கல.. ஆனா.. தயவு செஞ்சு.... ஆதிபராசக்தி.. அகிலாண்டனாயகி அம்மன் பாட்டெல்லாம் பாடிடாதீங்க சார் - என்றாள் நிலா.

சிறிது மௌனத்திற்குப் பின்அவரது hummingலேயே கண்டு பிடித்துவிட்டார்கள்.. அது மௌனராகம் – நிலாவே வா என்று. அருமையாகப் பாடினார். ரேவதியும் மோகனும் நினைவில் நிழலாடினார்கள்.பாட்டு முடிந்த பின்னும் நீண்ட மௌனம். அந்த மௌனத்தை கலைக்க யாரும் விரும்பவில்லை. வேகமாய் ஓடிய வேனின் ஓசை மட்டுமே எஞ்சியது.

"என்னாச்சு... ?உயிரோடத்தான் இருக்கீங்களா எல்லாரும்.. ?இதுக்குத்தான் நான் பாடமாட்டேன்னு சொன்னேன்... – என்றார் சிவா.

எக்சலன்ட் சார்.. சூப்பர்ப்- ஜோஸ் தான் மௌனத்தை உடைத்தான். நிலாவுக்குப் பேசுவதற்கு எதுமில்லை ...அவளே ஒரு பாடல் நாயகி...M.D யே ரவுன்ட்ஸ் வந்தாலும்.. முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தமாட்டாள்..அவளுக்கு வந்திருக்கும் புது பாஸ் இவ்வளவு அருமையாக பாடுபவர் என்றால்..!?.. அவள் ஆனந்த அதிர்சியில் நிற்காமல் என்ன செய்வாள்?.

ஸோ.. நிலாவை பேசாம செய்யனும்னா ஒரு பாட்டு பாடினா போதும்.. Am I right? – என்றார் சிவா.

மகாபலிபுரம்.... எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத மகாபலிபுரம்.. பௌர்ணமி நிலவொளியில் குளித்த கல் கோபுரங்கள்.. வெண்பட்டுப் போன்ற கடல் அலைகள்...காற்றின் குளுமையில் மெய்மறந்து நிற்கையில்

"ம்...ம்.. நேரமாச்சு.. கிளம்புங்க.. நிலா நீ ரொம்ப நேரமா தண்ணில நிக்ற... போதும் வா" - என்றார் சிவா.

"இங்கேயும் தாந்தான் பாஸ்ங்றதை நிரூபிக்கிறார்" - என்றாள் நந்தினி.

சென்னை திரும்பும் போதும் அழகிய பாடல்களால் அந்தப் பயணம் உயிரூட்டப்பட்டது. "நாளைக்கு ஒழுங்கா ஆபீஸ் வந்து சேரு.."என்ற சிவாவின் அதட்டலோடு நிலாவை அவளது அறை வாசலில் இறக்கிவிட்டு சென்றது அந்த வேன்.

தன்னுடய அறையில்.. குளிக்கும் போதும்.. உறக்கம் வரும் வரையும் அந்தப் பாடல்களையே நினைத்துக் கொண்டிருந்தாள் நிலா..

நினைவுகளுக்கு எதேனும் எல்லை உண்டா என்ன..? பாடல்களோடு சேர்த்து.. அப்பாடல்களை பாடிய சிவாவையும்... அவரது அழகிய முகமும்...அந்த முகத்தில் மின்னும் அழகிய கண்களும்.. நேவி ப்ளூ டீ ஷர்ட்டும்.. அதை அணிந்திருந்த அகன்ற தோள்களும்... நினைவுக்கு வந்தன நிலாவுக்கு.

நினைவுகளை நிறுத்தும் வழி தெரியாமல் வியந்தாள்.. வேறு விஷயங்களில் சிந்தனையை செலுத்தினாலும் மீண்டு வராத மனதை என்னதான் செய்வது?

மகாப் பெரிய முனிவர்களும், ஞானிகளும் மேரு மலையில் டென்ட் போட்டு உக்காந்து ட்ரை.. ட்ரை.. ட்ரை செய்த சிந்தனை அற்ற மோன நிலையை ...இருபத்தி மூன்று வயதில், ஆடி.. பாடி டூர் போய்விட்டு வந்த பௌர்ணமி முன்னிரவில் அடைய வேண்டும் என உங்கள் திராபை கதா நாயகி நிலா நினைத்தால்..." இது ஆவறதில்ல.." என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது...?
-------------------------------------------------
தொடரும்

7 comments:

குழலி / Kuzhali said...

தனி மடல் அனுப்பியுள்ளேன்

நன்றி

பரணீ said...

ஆஹா....
ரொம்ப நல்லா எழுதறீங்க....

ஹி ஹி
அடுத்த பாகம் எப்ப.

பரணீ said...

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை/மறுமொழி சேவையினை ஏற்படுத்திக் கொள்ளுங்க.

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=blogger_rating_guidelines

( இந்த http://priyaraghu.blogspot.com/2005/07/4.html பதிவுலேயே இதை பற்றி சொல்லி இருந்தேன் . நீங்க கவனிக்கவில்லை போல இருக்கு)

பத்ம ப்ரியா said...

Hi kuzhali, Priya sivaramakrishnan & Barani..

Thanks.. thanks a lot for your esteemed comments. I am happy to read your comments.

Then.. kuzhali.. i had replied your mail which is self explanatory.

Then priya.. i cant access your blogspot.. i tried twice and i failured.

Then barani.. again thanks for your
advice and u had adviced in my earlier post.. but i forgot to do that.. to day i will do.

then.. once again thanks.. ok
M. padmapriya

Agnibarathi said...

Interestingly written...looking forward to the next part.

அருள் குமார் said...

expecting the next part soon....

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

mmm.. interestinga irukku kathai..