Saturday, July 09, 2005

நினைவுப் பெட்டகம் - 3

நான் 5.11, நீ எவ்ளோ உயரம்? – s.m.s வந்தது

நார்மல் இன்டியன் கேர்ள் உயரம்

3.2 வா ?

இல்ல 2.3

சொல்லு பவி... எவ்ளோ உயரம் நீ ?

நான் எவ்ளோ உயரம் இருந்தா உனக்கென்ன?

சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான் ..ப்ளீஸ்..

5.2

அய்யோ.. குள்ள கத்திரிக்கா

போடா...

சரி.. சரீ .. அழாதே.. நீ பார்க்க எப்டி இருப்ப பவி..? உன்னை பார்க்கணும் போல இருக்கே..

இப்டில்லாம் பண்ணா நான் மெசேஜே அனுப்பமாட்டேன்... நீ என்ன சொன்ன? ஐ வாண்ட் டு பீ யுவர் ப்ரண்ட்.. ஜஸ்ட் ப்ரண்ட்ஷிப் தான்னு சொன்ன?

ப்ரண்ட்ஷிப்ல பார்த்துக்கலாம் பவி.. தப்பில்ல

நோ....

சரி விடு... நீ பார்க்க எப்டி இருப்ப அதை சொல்லு

ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப.. அழகா இருப்பேன் சுஜீத்

ஆகா ஆரம்பிச்சிட்டாய்யா... ஆரம்பிச்சிட்டா

உண்மயை உடனடியா இந்த உலகம் ஏத்துக்காதே

போதும் சொல்லு... நீ எப்டி இருப்ப.. நான் உன்னை ஜோதிகா மாதிரி இமாஜின் பன்னியிருக்கேன்

போதும்.. இதுக்கெல்லாம் விழுந்துறமாட்டா இந்த வீச்சரிவா வீரலட்சுமி

அப்ப வேற எதுக்கெல்லாம் விழுவா?

நான் போறேன்

சரி.. சரீ.. நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல

கொஞ்சம் ரயில் ராதிகா.. கொஞ்சம் இதயம் நல்லெண்ணை சித்ரா கலந்த கலவை நான்

ஐயோ அவங்க ரெண்டு பேருமே நல்ல அழகு.. எனக்கு ரொம்ப பிடிக்குமே.. அவங்க fan நான்

பொய்தானே சொல்ற...?

எப்டி கண்டு பிடிச்ச? ஸ்மார்ட் பவி நீ...

போடா...

சமைக்கும் போதும், சாப்பிடும் போதும், ஸ்டாப்பிங்கில் நிற்கும் போதும், பஸ் விட்டு இறங்கி நடக்கும் போதும், அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், வேலை செய்யாத போதும், டீவீ பார்க்கும் போதும், பார்க்காத போதும்.... என எல்லா நேரமும் மெசேஜ், மெசேஜ், மெசேஜ் தான்.. மெசேஜ் அனுப்பிக் கொண்டே ஸ்டாப்பிங் தான்டியும் நடந்து போயிருக்கிறாள்.. மீண்டும் மெசேஜ் அனுப்பிய படியே திரும்பி வந்திருக்கிறாள்.

நடந்துக் கொண்டே இவள் மெசேஜ் அனுப்புவதைப் பார்த்த அவளது தெருக்காரர்கள் இருவரின் டயலாக்

""அந்தக் காலத்துல... நடந்துண்டே படிப்பா.. நான் பாத்துருக்கேன்.. எதுத்தாப்ல வர லாரி கூட கண்ணுக்கு தெரியாது.. லாரிகாராளா பார்த்து ஆயுசு கொடுத்தா உண்டு... அப்பவே கலி முத்திட்த்துன்னா.. இதப் பார்த்தா என்ன சொல்வாளோ?"" - மாமா நம்பர் - 1

"" தானுன்டு.. தன் செல்லுன்டுன்னு போறா.. சைட்.. கியிட் அடிக்றதெல்லாம் அவாய்ட் ஆறதோன்ன்னோ.. அதப் பாருங்கோ""- மாமா நம்பர் - 2

""போற போக்குல நம்மள ஒரு பார்வையாவது பார்த்துண்டு போவா கொழந்த.. இப்ப அதுவும் இல்ல.. குனிஞ்ச தலை நிமிர்ரதில்ல.. என்னமோ போங்கோ ""- மாமா நம்பர் - 1.


அவள் உலகம் தனி என்றானது.. உப்பு பெறாத விஷயங்கள் கூட உன்னதமாயின. உதாரணமாக...

இன்னைக்கு புதூ டிரஸ் வாங்கினேனே..! – s.m.s அனுப்பினாள்

என்ன வாங்கின?

முழூ பிளாக் கலர் சூரீ

ஆகா.. எனக்கு ரொம்ப பிடிச்ச கலர்.. என்னோட எல்லா டிரஸ்லயும் பிளாக் இல்லாம இருக்காது

தோய்க்கலன்னா அப்டித்தான் பிளாக்கா இருக்கும்...

யாரு தோய்க்கல..? அய்யா சுத்தத்தின் சின்னம்..

சரீ.. கருப்பு உனக்கு பிடிச்ச கலர்ன்னா.. நீயும் கருப்பா?

இன்னாது கருப்பா.. அய்யா அஜீத் கலர் .. தெரிஞ்சுக்கோ

அத நாங்க சொல்லணும்.. அத நீ தெரிஞ்சுக்கோ

அதுக்குத்தான் .. வா.. வந்து பாருன்னு சொல்றேன்.. நாம எப்ப மீட் பண்லாம் பவி?

என்னது மீட்டிங்கா? என்னோட எஸ்.எம்.எஸ் தொடரணுமா.. இல்லை இதோட கட் ஆகணுமா?

அப்புறம் உன் இஷ்ட்டம்.. ஒரு Heroவ மிஸ் பண்ணப் போற....

போதும்.. நிறுத்ரியா

ஒரு நாளைக்கு முப்பது மெசேஜாவது அனுப்பிக்கறோம்.. அதுக்கு காலைல ஒரு கால், மதியம் ஒரு கால், ஈவ்னிங் ஒரு கால் பண்ணி பேசலாம் நாம - அனுப்பினாள்

வேண்டவே.... வேண்டாம் பவி

ஏண்டா?

பேசினா... பேசற அந்த அஞ்சு நிமிஷம் வரைக்கும்தான் சந்தோஷம் இருக்கும் ..பேசி முடிச்சு லைன் கட் ஆனப்புறம் ரொம்ப வெறுமையா இருக்கும்.. அந்த வெறுமையை தாங்க முடியாது பவி..வேஸ்ட்டா உக்காந்துட்டு இருக்கற மாதிரி தெரியும் பவி..

இதெல்லாம் ரொம்ப ஓவர் சுஜீத்

இல்ல பவி.. நாள் முழுக்க நீ என்னை நினைக்கனும்.. நான் உன்னையே நினைக்கனும்.. அதுக்குத்தான் எஸ்.எம்.எஸ்.

இதுவும் ஓவர்தான்.

ஒவ்வொரு முறை உன்கிட்ட இருந்து மெசேஜ் வரும் போதெல்லாம்.. அப்பத்தான் புதுசா.. முதன் முதலா உன் மெசேஜை படிக்கறமாதிரி இருக்கு.. இதெல்லாம் உனக்குப் புரியாதா.. இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியா?

ரெண்டாவதா சொன்னியே அது – அவசரப்பட்டு அனுப்பி விட்டாள்.
அனுப்பியபின் வருந்தினாள்.

ஏன்.. ஏன்.. ஏன் பவி நடிக்கற..?

சரீ.. மரைன் கோர்ஸ் அப்ளை பண்ண நாளைக்கு லாஸ்ட் டேட்.. எல்லாம் ரெடி பண்ணிட்டியா?

அத விடு... அக்கா ரெடி பண்ணிட்டா.. நீ சொல்லு ஏன் ஏன் நடிக்கற?

போர் அடிக்காத சுஜீத்.. வேற எதாவது பேசு

இதை விட வேற என்ன பேசணும் உனக்கு?

பதில் அனுப்பவில்லை இவள்.

மறுனாள் காலையில் இவளே Hi அனுப்பினாள்

பதில் இல்லை

என்ன கோவமா?

அதற்கும் பதில் இல்லை

ப்ளீஸ் சுஜீத்

ஏழெட்டு மெசேஜ்களுக்கும் பதில் இல்லை.... என்ன ஆச்சு இவனுக்கு..?

எந்த வேலையும் செய்யப் பிடிக்காமல் வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.. அந்த நேரம் பார்த்து அவள் அலுவலகத்தின் கருத்து கந்தசாமி அவளருகில் வந்து " நீங்க செல்லு வச்சுக்கங்க.. வேணாங்கல... ஆனா அதுக்காக அதையே பார்த்துக்கிட்டு இருக்கனுமா? சாப்டறதுக்காகவாவது கையயும், கண்ணயும் அதில இருந்து எடுங்கம்மா" என்றார்

(ஒரு அலுவலகம்னா.. அதுல ஒரு கருத்து கந்தசாமி கண்டிப்பா இருக்கும்.. இது உலக நியதி)

மதியம் சாப்பிடப் பிடிக்காமல்.. மிகவும் யோசித்து.. யோசித்து.. போன் பேசுவது என்ற முடிவுக்கு வந்தாள்.

அவன் தான் எடுத்தான்

"" என்னடா ஆச்சு..? ஏன் ரிப்ளை பண்ணல? என்மேல கோவமா? என்னை விட்டு பிரியறதுன்னாலும்... போறத்துக்கு முன்னாடி Bye சொல்லிட்டுப் போ. நீங்கள்ளாம்.. இவ்ளோதான்டா.. ப்ரண்ட்ஷிப்போட அருமையே தெரியாது.. என்னை சொல்லனும்.. நாந்தான் மடச்சி...""

போதுமா.. இன்னும் பேசறியா? நான் கொஞ்சம் பேசட்டா?

ம்.. சொல்லு...

காலைல பைக்ல போகும் போது ஒரு சின்ன ஆக்சிடென்ட்

அடப்பாவி.. எங்க?

போரூர்ல

அடச்சே.. எங்க அடிபட்டுதுன்னு கேட்டேன்

எங்கன்னு சொல்லு பாப்போம்.. ?உனக்கு மெசேஜ் அனுப்ப முடியாதபடிக்கு அடிபடனும்னா எங்க அடிபடனும்னு சொல்லு பாப்போம்.. ?

நிச்சயமா ப்ரெய்ன்ல இல்ல... ஏன்னா உனக்கு ப்ரெய்னே இல்ல.. அது நீ அனுப்ற மெசேஜ்லயே தெரியும்.. எங்க அடிபட்டுது சொல்லுடா.. எனக்கு அழுகயா வருது ...

நீங்கதான் வீச்சரிவா வீரலட்சுமியாச்சே?

சொல்லு சுஜீ... ப்ளீஸ்...

வேற எங்க...? விரல்லதான்.. வலது கை விரல்ல அடி பட்ருச்சு..ஒன்னும் இல்ல கொஞ்சம் ஓவரா ப்ளட் போயிருச்சு... பாண்டேஜ் போட்ருக்காங்க.. ஆங்.. ஒன்னு சொல்ல மறந்துட்டேனே

என்ன..?

பேண்டேஜ் போட்டுவிட்ட நர்ஸ் அழகா இருந்தா....

உன்னை...? உனக்கு அடி பட்டது கரெக்ட்தான்..

சரி.. உடனே .. மௌன்ட் ரோட் டிராபிக் நடுவுல ஓ ஓ ஓ ஓடி வந்து.. என்னை பார்க்கணும் போல தோணுமே... என்ன நான் சொல்றது?

அப்படித்தான் தோன்றியது அவளுக்கு.. ஆனால் வேறு எதுவும் பேசாமல் அழுகையோடு...
Bye டா.. அப்புறம் பேசறேன் என்றாள்.

ரெஸ்ட் ரூம் டேபிளில் தலை கவிழ்ந்து அழுதாள்...
-------------------------------------------------------------------------
தொடரும்....



5 comments:

பரணீ said...

செம கலக்கு கலக்குறீங்க போங்க...

posted by: பரணீ

Jayaprakash Sampath said...

டென்சன் தாங்கலை.... கடேசிலே அவனைப் பாத்தீங்களா இல்லியா? எனக்கு மட்டுமாச்சும் சொல்லுங்களேன்...

Pavals said...

ஹலோ!!.. இதெல்லாம் நல்லதுகில்லை.. (புரியுதா??)

இப்னு ஹம்துன் said...

நல்ல எழுத்து நடை கை வரப்பெற்றிருக்கிறீர்கள். உங்களின் சில கவிதைகளை வேறு தளங்களில் நான் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.

posted by: IBNU HAMDUN

ப்ரியன் said...

நல்லா இருக்கு பத்மா...