தூரத்திலிருந்து தூக்கி எறிய மனமில்லை
கொஞ்சம் உள்சென்று
விட்டு விட்டு வரவும் துணிவில்லை
நாலணாவிற்கு நச்சரிக்கும் சிறுவரிடம்
தூக்கி கொடுக்கவும் விருப்பமில்லை
காலருகில் வைத்துவிடுவதும் சரியில்லை
ப்யூர் வெஜிடேரியனை
மீன்களுடன் சேர்ப்பதும் முறையில்லை
என்னதான் செய்வது...?
கடற்கரைக்கு வந்தபின்னும்
போகமாட்டேன் என்னும்
இந்த மண்ணு பிள்ளையாரை.....
1 comment:
என்ன தான் செய்வது இப்படியெல்லாம் யோசிக்கௌம் மனதை
Post a Comment