Tuesday, April 05, 2005

என்னதான் செய்வது

தூரத்திலிருந்து தூக்கி எறிய மனமில்லை
கொஞ்சம் உள்சென்று
விட்டு விட்டு வரவும் துணிவில்லை

நாலணாவிற்கு நச்சரிக்கும் சிறுவரிடம்
தூக்கி கொடுக்கவும் விருப்பமில்லை
காலருகில் வைத்துவிடுவதும் சரியில்லை

ப்யூர் வெஜிடேரியனை
மீன்களுடன் சேர்ப்பதும் முறையில்லை

என்னதான் செய்வது...?

கடற்கரைக்கு வந்தபின்னும்
போகமாட்டேன் என்னும்
இந்த மண்ணு பிள்ளையாரை.....

1 comment:

ப்ரியன் said...

என்ன தான் செய்வது இப்படியெல்லாம் யோசிக்கௌம் மனதை