தீபாவளி விடிந்தபின்
விலாவரியாய்
தினத்தந்தியில் சுருட்டி தந்து
திகைப்புறச் செய்த
குடும்ப தையல்காரரும் -
அவர் தைத்த மாடர்ன் உடைகளும். . .
ஒரு தாய் மக்களென்பதை - அந்த
ஒரே டிசைன் உடையணிந்து நிரூபித்த
நானும் எனது தம்பி தங்கையரும். . .
முப்பது ரூபாய் வெடிகளுக்கு
முதல் நாள் இரவே நடந்த
பாகப்பிரிவினையும். . . .
அதனால் வந்த மனத்தாங்கலும்
அதற்கு சித்தப்பாவின் மத்யஸ்தமும்....
விடிந்ததும்
அத்தனை பேர் பாகத்தையும்
ஒற்றை ஆளாய்
அசராமல் வெடித்து தீர்த்த
அதே சித்தப்பாவும். . . .
அவரை அடித்து பின்னி
துவைக்க ஆவேசித்து. . .
பின்
எதுவும் செய்யாமல்
அவர் அருகே
வெறுமனே நின்ற நாங்களும்...
தட்டு நிரம்பிய பட்சணங்கள்
போதாதென
வேகவைத்த உப்பு வேர்கடலையோடு
மழை விழும் முற்றம் சுற்றி
ஆளுக்கொரு தூணில் சாய்ந்து
ஆரவாரமாய் பேசி சிரித்த
ஊர்க்கதையும் . . . பேய்க்கதையும். . .
கடுங்காப்பி மணத்துடன்
வெட்டு, குத்து, கொலைப் பழியுடன்
தாயக்கட்டை விளையாடிய
அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பாவும்...
ம். . ஏனோ . .
நிகழும் பொழுதைவிட
நினைக்கும் பொழுதில்தான்
என்னை நெகிழ்விக்கின்றன
சில தீபாவளிகள். . ...
4 comments:
kalakkalaa ezhuthi irukeenga.
முப்பது ரூபாய் வெடிகளுக்கு
முதல் நாள் இரவே நடந்த
பாகப்பிரிவினையும். . . .
அதனால் வந்த மனத்தாங்கலும்
posted by: பாலாஜி-பாரி
Thank you balaji-parry for your comments
//கடுங்காப்பி மணத்துடன்
வெட்டு, குத்து, கொலைப் பழியுடன்
தாயக்கட்டை விளையாடிய
அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பாவும்...//
எனக்கும் பரமபதம் ஆடிய நாட்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
இன்று தான் உங்கள் பதிவுக்கு முதன் முதலாய் வருகிறேன்.ஒவ்வொரு பதிவிலும் அசத்துகிறீங்க போங்க.
வணக்கம்,
"நிகழும் பொழுதைவிட
நினைக்கும் பொழுதில்தான்
என்னை நெகிழ்விக்கின்றன
சில தீபாவளிகள். . ..."
சில தீபாவளி மட்டுமல்ல உங்கள் எல்லா கவிதைகளும் நினைக்கும் பொழுதில் எங்களை நெகிழ்விக்கின்றன .சிறகுகள் மேலும் சிறக்கட்டும்
By Arunsiva
Post a Comment