Tuesday, April 05, 2005

உயிரின் உருவம்

எளிதாய் எடுத்தாளலாம்
எளிமையாய் புரியவைக்கலாம்
ஏங்கினேன் என எழுதியே
ஏங்கவைக்கலாம்

கடும் விமர்சனம்
கண்டிப்பாய் விழாது
கருத்தை கவரவில்லை
என்றாலும்
கடுஞ்சொல் வராது

காவியங்களோ
கருத்தோவியங்களோ
தேவையில்லை
கருகிய காதல்
கவிதைகள் போதும்
கவிஞர் என முகவரியிட

இங்கு..
காதலைவிட
காதல் கவிதைகள் மட்டுமே
உண்மையான உயிர்ப்புடன்

காதல்...!?
இறந்த காலத்தில் இருந்திருக்குமோ!
இப்பொழுது இருக்கிறதோ!
இனிமேலும் இருக்குமோ ! இல்லை. . .
இருக்கவே இருக்காதோ. . . ஆனால்

கால காலத்திற்கும்
கட்டாயம் இருக்கும்
காதல் கவிதைகள்.

இருப்பதாக நம்பப்படுவதால் .. இறைவன்
காதல்
இருப்பதாக நம்பப்படுவதால்.. . கவிதைகள்.

1 comment:

ப்ரியன் said...

காதலிப்பவர்களுக்குப் புரியும் இக்கவிதையின் அருமை