Sunday, May 22, 2005

பின் குறிப்பு
(சாரீ... இப்போ இது முன் குறிப்பு)

எனது தேடல் - 1 க்கு பின்னூட்டமிட்டுள்ள கடைசீ இரு வாசக ஜாம்பவான்களுக்கு எழுதிக் கொள்வது. . .

(துளசி மேம் நீங்க இல்ல, உங்களுக்கு அடுத்து பின்னூட்டமிட்ட அந்த இரண்டு பேர்)
(தேடல் - 2 க்கு உங்கள் பின்னூட்டத்தை எதிர் பார்க்கிறேன்)

ஜாம்பவான்களே. . .

இயக்குனர் திரு. வசந்த் அவர்கள் தனது பாடல் காட்சிகளை செதுக்கி வடிப்பதைப் போல, நீங்களிருவரும், உங்களது பின்னூட்டத்தை செதுக்கி இருந்தீர்கள்.

கருத்தாழமிக்க சொற்களாலும், வடிவான வாக்கியங்களாலும் தங்களது விமர்சனத்தை ஒரு கவிதையை போல வடித்திருந்தீர்கள்.

தங்களது பின்னூட்டத்தில் இருந்து தாங்கள் இருவரும் எனது தேடல் - 1 கதையை ஒரு வரி விடாமல், கூர்ந்து கவனம் செலுத்தி படித்திருக்கிறீர்கள் என்பதை நான் புரிந்துக் கொண்டேன். தங்களது விமர்சனம் என்னை மேன்மேலும் சிறப்பாக எழுத வைக்கிறது.

நிற்க. . .

இச்சூழலில், தாங்கள் இருவருக்கும் இவ்வெளிய எழுத்தாளினியின் வேண்டுகோள் என்னவெனில். ..

புலம்பிக் கொண்டோ. .. அழுது..மூக்கை சிந்தி வேஷ்ட்டியில் துடைத்துக்கொண்டோ.. எனது பதிவுகளுக்குப் பின்னூட்டமிடவென்டுமென்ற அரசாணை ஏதும் தற்போது தமிழ் நாட்டில் இல்லை...
எனவே ...
எனது பதிவுகளைப் படித்த பிறகு.. உயிரோடிருந்தாலே போதுமானது.

(மவன்களே... யாரு கிட்ட. . . மெட்ராஸ் பொன்னு நானு... வந்தன்னா அவ்ளோதான்.. ஒருத்தர் வேளச்சேரி.... ஒருத்தர் பொள்ளாச்சியா? உங்ள அடிக்றத்துகாவ வேண்டி அவ்ளோ தூரம் வர முடியாது.. அதால பொழச்சீங்க. . பதிவுகளை படிச்சமா. . . பொழப்ப பார்த்தமான்னு இருக்கோணும். . . கரீட்டா? .ம்.. அந்த பயம் இருக்கட்டும்)


2 comments:

பத்ம ப்ரியா said...

Hi Agni,
In the title itself i told that I am searching.... searching.. and searching....That's y i placed the title Theedal.

I want to point out the co incidence occured between we 2 due to this story Theedal.. that is.. as a writter.. i am searching the story and as a fan .. you also searching the story.. what a co incidence and what a search..

Thedaloo.. thedal thaan poonga

Any how i will try to write story in my future. And i will sing (poem) also.

Thanks agni

குழலி / Kuzhali said...

(வடிவேல் சொல்லுறமாதிரி சொல்லுங்க)
கண்ணகட்டுதே என்னப்பா இப்படி கண்ணக்கட்டுது