Sunday, May 29, 2005

சுமி

சுமி


இன்னைக்காவது சொல்லிடு சுமி இதை விட்டா சான்சே இல்ல... போ.. போய் சொல்லு

ஏன் அவன் தான் சொல்லட்டுமே?

நீதான் சொல்லேன் . . .? இதுல நீ... நான்னு ...சண்டை எதுக்கு?

நெவர். . . அவங்கதான் சொல்லனும். . . அதுதான் முறை

உன் சார்பா நான் போய் சொல்லட்டா?

மீனா. . . என்னை புரிஞ்சுக்க. . நாமளா போய் சொல்லவே கூடாதுப்பா. . . இன்னைக்கு இல்லன்னாலும்... என்னைக்கும் அது நமக்கு வீக் பாயின்ட்

நீ உன்னோட வாழ்க்கையோட விளையாடற சுமி

அவனோட வாழ்க்கையும் இதுல தானே அடங்குது..? அவனுக்கு நான் வேண்டாங்கறதாலதான இப்ப கூட சொல்லாம இருக்கான்....? நிஜமாவே அது போல எதுவுமே இல்லயோ என்னமோ. ..? நான் போயி ... உளறி ...அசிங்கமாயிடும் மீனா... வேண்டாம் நானா சொல்லமாட்டேன். . . நான் அவனுக்கு வேணும்னா. . . அவன் வந்து சொல்லட்டும் -

அழுகையோடு முடிந்தது
--------------------------------------------------
முதல்லயே சொல்லித் தொலைச்சிருக்கலாண்டா நீ..சொதப்பிட்ட. . . உன் தலைஎழுத்து..

சட்டுன்னு நிசயமாயிடும்னு நான் துளி கூட நினைக்கலடா. . . கொஞ்சம் கண்ணாமூச்சி விளையாடிட்டு. . .அவ எதிர் பார்த்து ஏமாறும் போது ரசிச்சிட்டு... நல்ல நாள்ள சொல்லனும்னுதான் தள்ளி போட்டேன்

மண்ணாங்கட்டி . . . நான் வேணா மீனாவ இங்க வர சொல்றேன் ... அவ ஸ்மார்ட்.. அவ கிட்ட சொல்லி நிறுத்த சொல்லலாமா?

இப்பவா..? பாக்கு வெத்தல மாத்தியாசுன்னாங்களே...?

போனவாரம் ஆனுவல் டே பங்ஷன் அன்னைக்காவது நீ சொல்லி இருக்கலாம். . . வண்டி எதுத்துட்டு கிளம்பிட்ட. . . பெரிய_________
(கெட்ட வார்த்தைகளை போட்டுக் கொள்ளுங்கள்)

மறு நாள் அவ பர்த்டேக்கு ப்ரசன்ட் வாங்கதானடா போனேன்?

நல்லாத்தான் பாடினா. . . உன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை பாராட்டு வரும்னு எதிர்பார்த்தா.... எங்க நின்னுட்டு இருந்தாலும் உன்னையே பார்த்துட்டு இருந்தா. . . நீ ரொம்ப சிலுப்பிக்கிட்ட. . . இப்ப... தாழியே உடைஞ்சாச்சு. . . போடாங். . நீ எல்லாம் வேஸ்ட்றா. . .

அவ மனசில நான் இருக்கேன்னு எனக்கு புரியவே ரொம்ப லேட்டாயிடுச்சு.. அத கன்பர்ம் பண்ணணும் பண்ணனும்னே நாள் கடத்திட்டேன். .ப்ச்...

டேய் மாமூ. . . நீ ஜாயின் பண்ண முதல் நாள் . . . உன்னை பார்த்ததும் போட்ட 1000 வாட்ஸ் பல்பை.. அவ மூஞ்சியில இருந்து இன்ன்ன்ன்னும் ஆப் பண்ணல. . .அது உங்களுக்கு இன்னும் புரியல..? உனக்கெல்லாம் எதுக்குடா லவ்வு...?
( வேற நல்லதா நாலு கெட்ட வார்த்தை போட்டுக் கொள்ளுங்கள்)

-------------------------------------------------

நீ வேணும் ஷிவா. . . நீ வேணும் டா எனக்கு..ப்ளீஸ். . . இன்னைக்கு வந்து சொல்லிடு. . .இல்லைன்ன அவ்ளோ தான் . . இன்னைக்கு ஈவ்னிங் 5.30க்குள்ள நீ எங்க டிபார்ட்மென்ட் வற. . வந்து. . .என் கிட்ட வந்து ஐ லவ் யூன்னு சொல்ற. . .ஆமா சொல்லிட்டேன்.. –
--மனதுக்குள் பேசிக் கொண்டாள்.

--------------------------------------------------
எனக்கு நீ வேணும் சுமி. .. நீ இல்லாம நான் எப்படி. . . எப்படி..?
நான் எப்பவுமே எதிலயுமே லேட்தான் சுமி. . . உன்னை ஓவரா வெறுப்பேத்திட்டேன். . . அதுக்காக.. நீ எப்படி நிச்சயத்துக்கு சம்மதிக்கலாம்?

-- மனதிற்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------

எத்தனை சந்தர்ப்பம் வந்துச்சு? ஏண்டா சொல்லாம நின்ன?அன்னைக்கு எங்க புது வீட்டுக்கு பர்ஸ்ட் டைம் என் வண்டில என் கூடத்தான வந்த..? அப்ப சொல்லிருக்கலாமில்ல? அன்னைக்கு நான் எவ்ளோ எதிர் பார்த்தேன் தெரியுமா?
அம்மாக்கு நீ குடுத்த கிப்ட் ரொம்ப பிடிச்சது. . உன்னையும் சேர்த்துதான். . . அப்பா கூட உன்ன ஸ்மார்ட்டுன்னாரு. . . அவரே உன்ன ஸ்மார்ட்டுன்னா. . நீ நிஜமாவே ஸ்மார்ட் தான். . . தம்பி கூட உன்னோட பேசிட்டு இருந்தா ஜாலியா இருக்குன்னு சொன்னான் - எல்லாரையும் அட்ராக்ட் பண்ணியே. . . அன்னைக்கே நீ சொல்லிருக்கலாம். . .

உங்க அப்பா அம்மாவை என்கிட்ட அறிமுகம் படுத்தினியே.. அன்னைக்கு ஈவ்னிங்காவது சொல்லுவேன்னு எவ்ளோ ஏங்கினேன் தெரியுமா?

மனதுக்குள் பேசிக்கொண்டாள்.
--------------------------------------------------

உங்க வீட்டுக்கு உன்னோட வண்டில வரும்போதே தீர்மானம் பன்னேன். . .திரும்பும் போது நீ என்னை டிராப் பண்ணுவ. . .அப்போ . . .பெரிய கோயிலுக்கு போகச் சொல்லி. . . அங்க அமைதியான கல் படியில உட்கார்ந்து. . . பௌர்ணமி நிலவு சாட்சியா. . . உன் கைய பிடிச்சு “ ஐ லவ் யூ சுமி. . ஐ லவ் யூடா” ந்னு சொல்லனும்னு ஆசையா இருந்தேன். . . ஆனா உன் தம்பியை டிராப் பண்ண சொல்லிட்டாரு உங்க அப்பா.. . நான் அன்னைக்கு எவ்ளோ வருத்தப்பட்டேன்னு உனக்கு தெரியுமா?

எங்க அப்பா அம்மா உன்ன பார்த்ததும் ப்ளசன்ட் ஆயிட்டாங்க.. ஆனாலும் அம்மாகிட்ட உன்ன பத்தி சொல்லி அவங்க சம்மதத்தை வாங்கி அவங்களை ட்ரெயின் ஏத்திட்டு வற்றதுக்குள்ள நீ ஊருக்கு போயிட்ட சுமி... ஆன் தட் டே ஐ மிஸ்ட் யு லாட் சுமி. ..

மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

--------------------------------------------------

உனக்காகத்தானே ஆனுவல் டேக்கு அந்த பாட்டை பாடினேன்.. . . நல்லா இருக்குன்னு ஒரு வார்த்த.. .ஒரே ஒரு வார்த்த சொன்னியா? எல்லாரும் அப்ரிஷியேட் பண்ணாங்க.. நீ மட்டும் வண்டி எடுத்துக்கிட்டு வேகமா போயிட்ட..

நீ.. என்னை லவ் பண்ணலடா. . . லவ்வே பண்ணல.. நான் தான் தப்பா எடுத்துக்கிட்டு..கனவுல மிதந்தேன்னு நினைக்கிறேன்..

மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்
--------------------------------------------------

நீ எனக்காகத்தான் அந்தப் பாட்டை பாடினேன்னு எனக்கு தெரியும் சுமி. . . எல்லாரோட கண்ணும் அன்னைக்கு நம்ம மேலதான் சுமி.. லவ்வெல்லாம் எல்லார் எதிர்லேயும் டிக்ளேர் பண்ற விஷயம் இல்ல டா...

மனதுக்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------

அவ இன்னைக்கு லஞ்ச்சே சாப்ட்லடா. . . அழுத மாதிரி இருந்தது அவ முகம்.. அவ சந்தோஷமாவே இல்ல. . . நிச்சயம் ஆன பொண்ணு மாதிரியா இருக்கா? இப்ப கூட லேட் இல்லடா. . . கான்டீனுக்கு கூட்டிட்டு வரேன்.. நிச்சயம் ஆச்சோ .. ஆகலயோ... அதப் பத்தி கவலப் படாம ஒரு வார்த்தை சொல்லிடு சிவா .. எனக் கென்னவோ நீ ரொம்ப லேட் பண்ற மாதிரி இருக்கு

இல்லடா. . . நேத்து வரைக்கும்னா.. நான் பயப்பட மாட்டேன்.. இன்னைக்கு இவ மட்டும் இல்ல இவளோட சேர்த்து இவ அத்தை பையன் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு.. விருப்பமிலாமயா நிச்சயத்துக்கு சம்மதிச்சிருப்பா?. . . எனக்காக ஒன்னு செய்றியா? மீனாவ கூட்டிட்டுவா. . . நான் அவ கிட்ட பேசனும்... நான் சொல்றேனோ சொல்லலையோ... அது வேற விஷயம்... அவ என்னை லவ் பன்னிணாளா..? எதுக்காக இப்படி திடீர்னு நிச்சயம் பண்ண சம்மதிச்சான்னு தெரியனும்..

தெரிஞ்சி...? தெரிஞ்சி என்னடா பண்ணப்போற? தும்ப விட்டுட்டு வால பிடிக்கற.. சரி.. நான் போயி மீனாவ வர சொல்றேன்.. திஸ் சிகார் மஸ்ட் பி த லாஸ்ட் ஒன் ஷிவா.. ஒடம்ப கெடுத்துக்காத. . .
--------------------------------------------------

சுமி ஜன்னல் வழியா பாரு . . . இதோட மூனு பாக்கெட் புடிச்சி தீர்த்துட்டான்.. போடி போயி சொல்லு... இப்பவாவது சொல்லித் தொலை.. நீ அவனை லவ் பன்றத

புரிஞ்சுதான் பேசறியா மீனா.. அவன் எனக்காகத்தான் சிகரெட் பிடிச்சு தள்றான்னு என்னை இமேஜின் பண்ணிக்கச் சொல்றியா..? இமேஜின் பண்ணி . . இமேஜின் பண்ணி நான் எமாந்தது போதும்.. நான் போய் சொல்லமாட்டேன்.. நாங்க சேரனும்னு இருந்தா... இன்னைக்கு ஈவ்னிங்குள்ள அவன் வந்து கண்டிப்பா சொல்லுவான்

--------------------------------------------------

யாற்றா அவன் கார்ல வந்து சுமியையும் மீனாவையும் அழைசிட்டு போறான்? சுமி ஏன் அழறா?

சுமியோட அப்பாக்கு மேசிவ் அட்டாக், மலர்ல சேர்த்திருக்காங்க.. அவன் தான் அவளுக்குன்னு நிச்சயம் பண்ண அத்தை பையன்

சரி.. வண்டி எடு ... நாம மலருக்கு போறோம்

--------------------------------------------------

இந்த மூணு நாள் நாயா அலைஞ்சியே... நடுவிலே எப்பவாவது சொன்னியா ஷிவா?

எங்கடா... அவ அழுதுகிட்டே இருக்காடா..? அவ அத்தை பையன் வேற.. கூடவே நிக்கறான்... “ நான் இருக்கும் போது நீ என்ன இங்க “ ந்ன்ற மாதிரி பாக்கறான். . .இப்ப போயி நான் எப்டி..?

இன்னைக்கு சுமிய கூப்பிட்டு சொல்லிடு

இன்னைக்கா..? இன்னைக்குத்தான் ஐ.சீ.யூ ல இருந்து அவங்க அப்பா வெளியில வந்திருக்காரு..

சொல்லித் தொலைடா முண்டம்.... சொல்லித் தொலை.

--------------------------------------------------

நான் இவ்ளோ அழறேனே . . . எதாவது வந்து பேசுறியா... மக்கு மாதிரி வெளியிலேயே நில்லு.. என்னமோ எங்களுக்கு வேல செய்யவே வந்த மாதிரி ஓடி ஓடி போயிடுடா.. பக்கத்துல வந்து நான் இருக்கேன் சுமி.. கவலப்படாதேன்னு ஒரு வார்த்த .. ஒரே ஒரு வார்த்த சொல்லு ஷிவா..
மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

--------------------------------------------------

என்னடா ஷிவா? இன்னைக்குத்தான் ஜெனரல் வார்டுக்கு வந்தாரு.. இப்ப திரும்பவும் ஐ.சீ.யூக்கு மாத்தி இருக்காங்க.. சுமி மட்டும் உள்ள இருக்கா?

காலைலயே திரும்பவும் சம் ப்ராப்ளம்.. ஐ.சீ.யூக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.. சுமியோட பேசியே ஆகனும்னு அவள உள்ள அழைச்சுக்கிட்டாரு அவ அப்பா..ஐயோ . . . அவ கைய பிடிச்சுகிட்டு அவர் எதோ கேக்கறாரு... சுமியும் தலைய ஆட்டி ஆட்டி அவர் கைல ப்ராமிஸ் பன்றாடா..

வேறென்ன நம்ம குல கௌரவத்தை காப்பாத்து.. கல்யாணத்துக்கு அப்பா இருப்பேனோ இல்லையோ தான்... அவ்ளோதான்டா... உனக்கு இருந்த கடைசீ சான்சும் முடிஞ்சுது... மாங்கா டா நீ.. சொல்லு சொல்லுன்னு தலபாடா அடிச்சிகிட்டேன்... முண்டம் மாதிரி நின்ன .. இப்ப பாரு.. அவ ப்ராமிஸ்லாம் பண்றா.

இப்ப என்னடா பண்றது...?

--------------------------------------------------

ஷிவா நீ ஏன்டா இப்டி இருக்க..? பேச முடியாத வலியிலேயும் என் கைய பிடிச்சிகிட்டு “ யார் மேலயாவது ஆசை இருந்தா அப்பாகிட்ட சொல்லிடுடா.. உன் கல்யாணத்துக்கு அப்பா இருப்பேனோ என்னவோ.. உன் மனசில யாராவது இருந்தா அப்பா கிட்ட சொல்லு. .. உன் அம்மா இதெல்லாம் கேப்பாளோ மாட்டாளோ.. நான் இருக்கும் போதே.. உன்னை உன் மனசுக்கு பிடிச்சவன் கையில பிடிச்சி கொடுத்திட்டா.. நான் நிம்மதியா கண்ண மூடுவேன்” ந்னு அப்பா கேக்கும் போது துணிஞ்சு, தைரியமா என்னால உன்னப்பத்தி சொல்ல முடியல.. உன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை வராம நான் எப்படி.. நான் எப்படி அப்பா கிட்ட..? அதனாலேயே நான் “ அதெல்லாம் ஒன்னுமில்லப்பா.. அதெல்லாம் ஒன்னுமில்லப்பா” ந்னு அழுத்தி அழுத்தி சொல்லிட்டு வந்தேன்.

உன்னை நான் பார்த்திருக்கவே கூடாதுடா.. பார்த்தாலும் உன்னை விரும்பி இருக்க கூடாது.. உன்னை விரும்பினாலும்.. நீயும் என்னை லவ் பண்றேன்னு நினைச்சு ஏமாந்திருக்க கூடாது.. என்னை சாகடிக்கிறியே ஷிவா.. ஆனா நானா வந்து உன்கிட்ட எப்படி... எப்படி சொல்வேன் ஷிவா.. நெவர்.. சொல்ல மாட்டேன்.. சொல்ல முடியாதுடா என்னால..

மனதிற்குள் பேசிக் கொண்டாள்... வெளியில் அழுதாள்
--------------------------------------------------

அவங்க அப்பா இருந்தாலாவது. . . அவர் கிட்ட நான் போயி பேசி எதாவது பண்ணலாம்... அவரும் போயி சேர்ந்துட்டாரே ஷிவா

முடிஞ்சதை பத்தி பேசாத.. நாளைக்கு கிளம்பறேன்... பூனால நம்ம பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டேன்.. போறதுக்கு முன்னாடி எனக்கு அவள பார்க்கணும்.. அவ வீட்டுக்கு என்னோட வற்றியா?

-------------------------------------------------

நீ வீட்டுக்கு வந்தது இதுக்காகவா ஷிவா? பூனா போறேன்னு சொல்றத்துக்காகவா? கடைசீ வரைக்கும் சொல்லவே இல்லியே ஷிவா?...!? நிஜமாவே நீ என்னை லவ் பண்ணலயா? நீ லவ் பண்ற அளவுக்கு நான் இல்லையா? அப்ப ஏன் எனக்கு இவ்ளோ உதவி பண்ண? போ.. போ..பின்னாலேயெ சுமி செத்துட்டான்னு நியூஸ் வரும்.. போ

மனதிற்குள் அழுதாள்

--------------------------------------------------

வீட்ல மாப்ள பாக்கறாங்க. .. பாக்கு வெத்தலை மாத்த போறாங்கன்னு ஒரு வார்த்தை .. ஒரே ஒரு வார்த்தை வந்து சொல்லி இருந்தீன்னா.. அந்த பாக்கு வெத்தலையை எங்க அப்பா அம்மா மாத்தி இருப்பாங்களே? எதுவுமே சொல்லாம நிச்சயத்துக்கு சம்மதிச்சிட்ட இல்ல?

நீ என்னை விரும்பலை சுமி.. விரும்பவே இல்ல.. சும்மா டைம் பாஸ்க்காக என்னோட பழகி இருக்க.. நான் தான் நீ என்னை லவ் பண்றியோன்னு தப்பா நினைச்சுட்டேன்

மனதிற்குள் நினைத்துக் கொண்டான்

--------------------------------------------------

வீட்ல மாப்ள பாக்கறாங்க . . . அடுத்த மாசம் பாக்கு வெத்தலை மாத்த போறாங்கன்னு நியூஸ் பரப்பியும்.. அவன் வந்து அவனோட லவ்வ சொல்லலைன்னா.. அவன் உன்னை நிஜமாவே லவ் பண்ணல சுமி... அவனையே நினைச்சு அழாதே சுமி...

இப்ப புரிஞ்சிதா.. என்னை போயி சொல்லு சொல்லுன்னு சொன்னியே.. நானா போயி சொல்லி.. அதுக்கு அவன் .. சே சே.. நான் உங்க கூட ப்ரென்ட்லியாத்தான் பழகினேன்.. லவ்வெல்லம் எதுவும் இல்லைன்னு சொல்லி இருப்பான். . . அதை விட பெரிய அவமானம் எதுவும் இல்ல மீனா.. எதுவும் இல்ல

அவனையே நினைச்சு அழாதடா.. அழுது என்ன ஆகப் போகுது? உங்க அம்மா ஆசைப்படி உன் அத்தைப் பையனையே கல்யாணம் பண்ணிக்க.. அதுதான் உனக்கும் நல்லது.. உங்க பேமிலிக்கும் நல்லது சுமி

ப்ச்.. என் உயிரே என்கிட்ட இல்ல மீனா..

மனதிற்குள் அழுதாள்

--------------------------------------------------

அண்ணா .. வற்ற வாரமே வந்து பாக்கு வெத்தலை மாத்திரு.. இவ அவங்க அப்பா போனதிலேர்ந்து தெம்பாவே இல்லை.. எனக்கு பயமா இருக்கு.. நீ முதல்ல வந்து சேரு. . ..
போனில் அழுதாள் சுமியின் அம்மா

--------------------------------------------------

அடர்ந்த காரிருளில் ஒரு புள்ளியாய் கரைந்து போனது பூனா நோக்கிச் செல்லும் அந்த ரயில்... அந்த இருளிலேயே இரு புள்ளிகளாய் கரைந்து போயின அவ்விருவரின் இதயங்களும் அவற்றின் உயிர்ப்பும்.

6 comments:

லதா said...

20 / 25 வருடங்களுக்கு முன் நடந்திருக்கக் கூடிய கதை. இந்தக்கால இளைஞர்கள் சரியோ தவறோ மனதில் இருப்பதை எளிதில் வெளிப்படுத்துகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்

பிரதீப் said...

கதை சொன்ன விதம் புதுமையாய் இருந்தது. ஆனா, ரொம்ப இழுத்துட்டீங்களோன்னு தோனுது. முடிவு வரிகள் நன்றாய் இருந்தன..

பிரதீப் said...
This comment has been removed by a blog administrator.
பத்ம ப்ரியா said...

Hi agni, Hi latha Hi pradeep

thank you for your comments.. they are encouraging me. Thanks pa.

M. padmapriya

Pavals said...

----
சொல்ல நினைச்சத மனசுகுள்ளயே சொல்லிகிட்டேன்.. ;-)

லதா said...

ராசா,

இந்தக் கதை படிக்கும்போது உங்களின் "வென்னிலாகேக்" நினைவிற்கு வந்தது