" பம்ப் செட்ல குளிச்சாச்சு... அதோ உன் அம்மாவும் குளிசுட்டு வறா... இப்ப மணி ரெண்டு... ஐஞ்சு மணிக்குள்ளாற வேணுங்கறத சாப்டுக்குங்க... இதோட அடுத்த வாரம் தான் .. புறிஞ்சுதா? இங்க மண்டைய மண்டைய ஆட்டிட்டு நான் அந்தப் பக்கம் போனதும் வரப்ப விட்டு இறங்கி வயல்ல வாய் வச்சீங்க... நடக்கறதே வேற.. என் செல்லம்.. என் கன்னு குட்டி.. போ.. போயி வேணுங்கற புல்ல மேஞ்சுக்கோ.."
மேற்படி கொஞ்சல்ஸ் எங்கள் வீட்டு கன்றுக்கு என் அப்பாவிடமிருந்து கிடைத்தவை.
என் அப்பாவிடம் இருந்து மூன்று முத்தங்களைப் பெற்றுக் கொண்ட எங்கள் வீட்டு பாக்ய லக்ஷ்மி அவரது தோளில் தன் முகம் தேய்க்கும், காது மடல்களை கூர்மையாக்கி “கவனிக்கிறேன்” என்று உடல் மொழியால் உணர்த்தும்.
பசுவுக்கும் அதன் கன்றிற்கும் என்ன மொழி புரியும்? ஆனாலும் எங்களைக் கொஞ்சுவதைவிட ஒரு பிடி அதிக வாஞ்சையுடன் எங்கள் வீட்டு பசுவையும் அதன் கன்றுகளையும் கொஞ்சி வளர்க்கும் என் தந்தையின் அன்பில், ஆதூரத்தில் நான் உணர்ந்திருக்கின்றேன் தெய்வீகத்தை.
என் அப்பாவின் அன்புக் கட்டளையை புரிந்துக் கொண்டு, மணிலாவும், நெற் பயிரும் எவ்வளவுதான் செழுமையாய் விளைந்து கண்களைக் கவர்ந்தாலும், கண்களுக்கு தெரியாத தர்ம நியயங்களுக்கு உட்பட்டு... புல்லை மட்டுமே மேய்ந்து, வரப்பை விட்டு வயலில் ஒரு வாய் கூட மேயாத எங்கள் வீட்டு கன்றுகளிடம் கண்டிருக்கிறேன் – அந்த தெய்வத்தை.
--------------------------------------------------
" மொத்தம் அஞ்சு பொட்டி... அஞ்சுலயும் தலா இருபத்தி நாலு கம்பிங்க... இங்கதான் என்னோட ஷெல்ப்ல வச்சிட்டு தூங்கப் போறேன்.. மவளுங்களே.. நாளைக்கு காலைல எழுந்து எண்ணிப் பாப்பேன்... ஒரு கம்பி குறைஞ்சாலும் நாளைக்கு தீபாவளி சாமிக்கு இல்ல... உங்களுக்குத்தான்... அதுவும் என் கையாலத்தான் .. புறிஞ்சுதா? - நின்று மிரட்டிவிட்டு தூங்கப் போனான் எங்கள் வீட்டு தீவட்டி தடியன். இத்தனைக்கும் என்னைவிட நாலு வயது சிறியவன்.
அது என்ன ... தீபாவளின்னா .. ஆம்பிளைப் பிள்ளைங்க தான் அதிகமா வெடி வெடிக்கனும்.. பொம்பளை பிள்ளைங்க நின்னு வேடிக்கை பார்க்கணுமா?
குடும்பத்திலே ஒரு மத்யஸ்த்தம்.. பாகப்பிரிவினைன்னு வரும் போது தர்ம நியாயம் வேணாமா?
தீபாவளிக்கு முதல் நாளிரவு நடந்த, மிக நீள சண்டை காட்சிகள் நிறைந்த பட்டாசு பாகப்பிரிவினையில் - அம்மா. அப்பா, சித்தி, சித்தப்பா அத்தனைபேரும் . . . அன்னியாயக் காரர்கள்.. எனக்கும் என் தங்கைக்கும் நாலு பெட்டி மத்தாப்பு.. ஆனால் என் தம்பிக்கு மட்டும் ஐந்து பெட்டி மத்தாப்பு.
பெட்டிங்க தானே உங்க கணக்கு...? பெட்டிங்க அப்டியே இருக்கும்.. உள்ள இருக்கற மத்தாப்புங்க..? தோல் இருக்க சுளையை முழுங்கறோம் இருங்க...- என்று கறுவிக் கொண்டோம் நானும் என் தங்கையும்.
எங்கள் தம்பி தூங்கியதும் அவனது பாகத்தின் பெட்டிகளிலிருந்து தலா இரண்டிரண்டு மத்தாப்புகளை திருட திட்டமிட்டதை எங்கள் திருட்டு முழிகளிலிருந்து புரிந்துக் கொண்ட என் தம்பியின் மிரட்டல் தான் மேற்படி நீங்கள் படித்த கொலை மிரட்டல்.
ஆனால் மறு நாள்
தீபாவளி விடியல் கருக்கலில் வாசல் விளக்குப் பிறையில் அகல் விளக்கை ஏற்றி எங்கள் தம்பி ஒவ்வொரு வெடியாக, சரமாக வெடிப்பதை, எங்கள் பட்டாசுக் கட்டுகளைப் பிரிக்கக் கூடத் தோன்றாமல் வேடிக்கை பார்த்து நின்றோம்.. அவனது பாகத்தை அவன் வெடித்து முடித்து விட்டால்... அவன் வெறுமையாய் நிற்கக் கூடாதேயென என் பாகத்தை தந்து விடலாம் என நானும், அவளது பாகத்தை தந்து விடலாம் என என் தங்கையும் உள்ளுக்குள் நினைத்தபடி வாசல் திண்ணையில் நின்றிருக்கையில்... எங்கள் கழனி வேலையாள், எங்கள் வயதொத்த அவரது மகனையும், மகளையும் அழைத்துக்கொன்டு வருவது தெரிந்தது. அருகில் வந்த போதுதான் புரிந்துக்கொண்டோம் அவர்களது உதடுகள் புன்னகைத்தாலும்.. கண்கள் ஏக்கத்தால் கசிந்தன என்று.
ஒரே ஓட்டமாக உள்ளே ஓடிய என் தம்பி அவனது பங்கில் பாதியை கொண்டுவந்து அவ்விருவருக்கும் தரும் முன்பே நானும் என் தங்கையும் எங்களது பங்குகளில் பாதியை கொடுத்துக் கொண்டு இருந்தோம். அங்கே... அந்த இடத்தில்.. அந்த தருணத்தில் எங்கள் ஐவரின் சின்னஞ் சிறு பிஞ்சு கைகளில் இறைவன் இருந்திருக்கலாம்..
" நீ வருவன்னு தெரியும் முனியா.. அதால உன் பிள்ளைங்களுக்கும் சேர்த்து ஒரு பாகம் போட்டு .. இதுங்களுக்கு தெரியாம எடுத்து வச்சோம்.. இந்தா இனிப்போட சேர்த்து பட்டாசை பிள்ளைங்களுக்கு கொடு " - என்று தந்த என் அம்மா, சித்தியின் கண்களில் இறைவன் இருந்ததாகத்தான் தோன்றியது எனக்கு. ..
" இதெல்லாம் எதுக்கு அம்மா.. எதோ வள்ளி புதுசா அதிரசம் பண்ணா.. ஐயா வூட்டு பிள்ளைங்க ஆசையா சாபிடுமேன்னு கருக்கல்ல கொடுத்தனுப்ச்சா - என்று தன் மூங்கில் கூடையில் அதிரசங்களை பொதிந்து, மூன்று மைல் நடந்து அந்த விடியலில் எங்கள் வாசலில் வந்து நின்ற எங்கள் முனியனின் நெஞ்சினில் இறைவன் இருப்பதாகத் தோன்றியது எனக்கு....
மேற் சொன்ன அத்தனை நிகழ்வுகளையும்... மௌனமாய்.. சின்ன சின்ன காற்றுச் சலனங்களுடன் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டு அகல் விளக்கின் சுடரில்...இப்போதும் இருக்கின்றான் இறைவன் .
--------------------------------------------------
"" பேப்பர்க்கு எழுதிப் போடணும்.. இவங்க எல்லாம் அனுபவிப்பானுங்க... நமக்குன்னா குடுக்க மனசு வராது... இதெல்லாம் சரிப்பட்டு வராது.. ஜி. எம்.. ஒழிகன்னு கோஷம் போட்டு ஸ்ட்ரைக் பண்ணணும்ப்பா.. நம்ம வயத்துல அடிசுட்டு.. இவங்க மட்டும் நல்லா இருப்பாங்களா?""
வக்கிர மனம் கொண்ட நிர்வாகிகளை தாக்கிப் பேசி, உள்ளிருப்பு வேலை நிறுத்தம், கருப்பு பட்டை அணிந்து கோரிக்கைகளை முன் வைத்தல்.. அடையாள உண்ணா விரதம் ( உண்மையான உண்ணா விரதம் தான்) இருந்தும் மசியாத நிர்வாகத்தின் மேல் நிஜமாகவே கோபம் வந்தது.
நியாயமாக மூன்று வருடங்களுக்கு முன்பே தரவேண்டிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதையுமே தராமல்.. எதேனும் சாக்குப் போக்கு சொல்லும் எங்கள் ஜி. எம்.. கண்டிக்கத் தக்கவர்தான்.
" அவன் மட்டும் தனியா மாட்னான்... மவனே நானே போட்டுத் தள்ளிடுவேன்.. வேணான்டா கும்பலா அவனை போட்டு அமுக்கியே நசுக்கனும்..."" - சக ஊழியர்கள் பேசப் பேச... அவர் (ன்) கும்பலில் மாட்டினால், என் பங்கிற்கு ஒரு அடியாவது அடிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.
மறு நாள்
"" வேன் எடுங்கப்பா.. யார் யார் பிளட் டொனேட் பண்ணப் போறது? அவங்க முதல்ல வண்டில ஏறுங்க.. சீக்கிரம்.. ஆப்பரேஷன் வெயிட்டிங்.. பணம் இருக்கோ என்னவோ?.. யார் யாருக்கு எவ்ளவு தரமுடியுமோ தாங்க... குணமாயி வந்தப்புறம் வாங்கிக்கலாம்..""- பரபப்புடன் யூனியன் லீடர் தலைமையில் மொத்தம் இருபத்தியோர் பேர் தங்களது நிர்வாகிக்காக இரத்தம் தர முன் வருவார்கள் என அந்த தனியார் மருத்துவ மனை எதிர் பார்க்கவில்லை.
இதுதான் சந்தர்ப்பம் என்று இருபது பேரிடமும் இரத்தம் தானமாக பெற்றுக் கொண்டது. விடுபட்ட அந்த இருபத்தியோராவது நபர் வேறு யாரும் இல்லை.. நான் தான். “ இந்தாங்கம்மா.. இதுல எழுதி இருக்கிற வைட்டமின் டானிக்கை தவறாம சாப்டுங்க.. ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க... நீங்கல்லாம் பிளட் டொனேட் பண்ண முடியாது.. இந்த அனீமிக்கை இப்படியே விட்டீங்கன்னா நியாபக மறதி வந்துரும் “ – என்ற அட்வைசை கேட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.
மூன்று வருடங்களாக சம்பளமே உயர்த்தாமல், தொழிலாளர்களுக்கென ஒரு நெல் முனையளவும் நல்லது நடக்க விடாத ஒரு உயரதிகாரிக்கு மாசிவ் ஆர்ட் அட்டாக் என கேள்வி பட்ட அடுத்த நொடி, எதையும் மனதில் வைக்காமல், தங்கள் இரத்தத்தையும், பணத்தையும் வாரி வழங்கிய எங்கள் அலுவலக மக்களின் மத்தியில் நான் நின்ற போது நான் உணர்ந்தது வேறு என்னவாக இருக்க முடியும்?
அதேதான்.. அந்த தெய்வீகத்தைதான் நான் அங்கே உணர்ந்தேன்.
--------------------------------------------------
யாரும் நம் கையை பிடித்து அழைத்துச் சென்று வழி காட்ட முடியாத ஓர் இடம் தெய்வம் வசிக்குமிடம். கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர்.. நாமே உணர்ந்து உறைவதுதன் இறைவன்.
தொப்புள் கொடி நறுக்கி, மருத்துவர் முதுகில் தட்டும் தட்டில், தானாகவே மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் முதல் சுவாசத்தை யாரும் ஒரு குழந்தைக்கு சொல்லித்தருவதில்லை.. அது தானே தினறி, அழுது, பின் சுவாசிப்பதைப் போல.. நாமும் நமக்கு நாமே தினறி, யோசித்து பின் உணர்வதே தெய்வீகம்.
சுவாசிப்பதைப் போல தெய்வத்தை உணர்வதும் – இயல்பாய், தானாய் வர வேண்டும். அவ்வாறு வரப் பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள் அல்லவா?
தெய்வீகம் என்பது நமக்குள் நாம் நிகழ்தும் தேடல்.. சரியா?
This is the symbol of my literary interest & creations which takes me up from my life tensions & pressures. If possible you may fly in the literary sky with the help of this small wings.
Monday, June 27, 2005
Sunday, June 05, 2005
தேடல் - 3
தேடல் - 3
நல்ல வேள.... நீ என் மேல விழறத்துக்கு முன்னாடி நான் எழுந்துட்டேன் -– என்றான் என் தம்பி
விழுந்திருப்பேன்.. அதுக்குள்ள டீச்சரம்மா பிடிச்சுகிட்டாங்க -– என்றேன் நான்
இருளோவென்றிருந்த அந்த அறையில் சிகப்பு கண்ணாடி பேப்பர் சுற்றிய பத்து வாட்ஸ் பல்ப் மட்டுமே எரிந்துக் கொண்டிருந்தது. தடுக்கி விழுந்து தாராந்து போக இருந்த எங்களை தெய்வம் போல் அந்த அம்மையார் காப்பாற்றினார்.
ஆன்மீகம் ஆரம்பமாகியது
நீங்கள் யார்?
நான் பத்மப்ரியா, இவன் என் தம்பி
அது உங்கள் உடலுக்கான பெயர் -– நீங்கள் யார்?
( என்ன இழவுடா இது) – நாங்க நாங்கதான் - என்றேன்
நீங்கள் என்றால் உங்கள் ஆத்மா... ஆத்மா உருவமில்லாதது – பரம பிதா வான் வெளியில் இருக்கிறார் அவரோடு ஐக்கியமாக தியானம் ஒன்றுதான் வழி . . .
வீட்டில் சிறுவயதில் சின்ன சின்ன கதைகள் வழியாக பாட்டியும் , தாத்தாவும் . அம்மாவும், அப்பாவும் போக வரச் சொல்லித்தந்த நல்லொழுக்கங்களை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துவதைப் போல அவ்வம்மையாரின் ப்ரசங்கம் இருந்தது. பொய் சொல்லாமை. கோபம், காமம் விலக்கல், களவு செய்யாமை, கூடா நட்பு... இன்னும் பல
இதெல்லாம் எங்க வீட்ல ஏற்கெனவே சொல்லித் தந்திருக்காங்க - என்றேன்
நீங்க அதெல்லாம் மறந்திருப்பீங்க, இப்ப நீங்க கடை பிடிக்கறதில்லை – என்றார்.
இல்ல.. இல்ல .. நாங்க அதை கடை பிடிக்கறோம் என்றேன்
முறைத்தார். ... இழுத்து ஒரு அறை விடுவார் போல இருந்தது
அடக்கி வாசி -– என்பதைப் போல தம்பி முறைத்தான்.
இன்னைக்கு கிளாஸ் இத்தோட முடிந்தது நாளைக்கு வாங்க என்றார்
தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியில் வந்தோம்.
ஆன்மீகம் சொல்லித் தருவதென்றால் டியூப் லைட்டே போட்டுக்க கூடாது என்று எந்த மடையன் சொல்லித் தந்தான் எனத் தெரியவில்லை. மாயாஜால மந்திரக் குகை எபக்ட்டோட சொல்லித்தந்தாதன் மண்டைல ஏறும்னு நினைச்சிருக்காங்க.
இந்த மாதிரி கிளாஸ் அட்டென்ட் பண்ண பிடிக்காமத்தான் கலையியல் இளைஞி பட்டத்துடன் நிறுத்தியாச்சு...திருப்பியும் அதே மாதிரி கிளாசா..?தப்பிக்க காரணங்களை தேடியது மனது.
வயத்தை பிடிச்சுகிட்டு வலிக்குதுன்னு சொன்னாலும் – பூலோக ராட்ச்சசி, புண்ணியவதி அம்மா பிசாசா விடுவாள்..? பூ. ஊதுபத்தி, சாம்பிரானி மட்டி எல்லாம் எடுத்து கொடுத்து கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினாள் அம்மா.
அடுத்தவரது ஆன்மீக முன்னேற்றங்களில் தலையிடு வதில்லை என்ற கொள்கை பிடிப்போடு இருக்கும் அப்பா எங்களுக்கு நிகழ்ந்த இக் கொடுமைகளை கண்டு கொள்ளவே இல்லை.
எல்.கே.ஜி. கிளாசுக்கு போவதைப் போல கிளம்பினோம் – தம்பியும் தான்..வயசுப் பொண்ணை தனியா மடத்துக்கு அனுப்றதா? கிளம்புடா .. ம் .. ஆகட்டும் என்றாள் அம்மா.
என்னை கொலை செய்துவிட்டு சிறைச் சாலைக்குப் போகத் தயாராக இருந்தான் என் தம்பி.. ஆனால் எதிர் பிளாட் காவ்யா கொஞ்சம் மடிவாள் போல இருந்ததால் என்னை கொலை செய்யும் ஐடியாவினை தற் சமயம் நிறுத்தி வைத்தான்
ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதாக காட்டிக் கொண்டால் தானே காவ்யாவையும் காவ்யாவின் அம்மாவையும் கவர்ந்திழுக்க முடியும் என மடத்தனமாக நம்பினான்.
இன்று அந்த அம்மையாரையே காணோம் – அப்பாடா தப்ச்சோம் என்று நினைத்து முடிப்பதற்குள் நீங்கதான் புது ஸ்டூடன்ட்ஸ்ஸா என்றார் ஒரு நடுத்தர வயதுக்காரர்..
மஞ்சள் பைஜாமா ஜிப்பாவில், சமீபத்தில் செத்துப் போனா ஆதிகால ஜெமினி கணேசனை நினைவூட்டினார்.
ஆமாம் - என்றோம் கசாப்பு ஆடுகளைப் போல
உள்ள வாங்க என்றார். உத்தேசமாக, குத்துமதிப்பாக, தோராயமாக போய் உட்கார்ந்தோம்.
நீங்கள் யார் ? என்றார்
ஆகா ஆரம்பிச்சிட்டாருயா ஆரம்பிச்சுட்டாரு... சுதாரித்துக் கொண்டோம்
இந்த கிளாஸ் நேத்தே நடத்திட்டாங்க என்றோம் ஒரே குரலில்
இல்லை ரெப்ரஷ் பண்ணிக்கலாம் -– என்றார் எதோ கோகோ கோலா, மிராண்டா குடிக்கப் போவதைப் போல
அதே விளக்கங்கள் அதே பாடங்கள் ஆனால்..அவன் மட்டமானவன் என்பதை அவனது பார்வைகள் சென்ற இடம் உணர்த்தியது. சட்டென எழுந்துக்கொண்டான் தம்பி.. வயத்தை வலிக்குது கிளம்பலாம் என்றான்.. அப்பாடா என்றிருந்தது எனக்கு.. வேகமாக வெளியில் வந்தோம்.
என் பின் பக்கம் வந்தவர்.. எங்கிருந்து வருகின்றீர்கள் என்றார்.
நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்கிறார் என நினைத்து – அந்த பரமாத்மாவிலிருந்து வருகின்றோம் - என்றேன்
விழுந்து விழுந்து சிரித்தது அந்த லூசு. போதாத குறைக்கு "ஜோவியலா பேசறீங்க... இ லைக் இட் என்றது. தம்பியின் முறைப்பு என் முதுகை துளைத்தது.
உங்க வீடு எங்க? என்றது -–
உலக பந்தங்களில் இருந்து பற்றருக்க, வீடு பேறு அடைய வழி சொல்லித்தரும் இடத்தில் .. என் வீட்டைப் பற்றிய விவரங்கள் எதற்கு..வேண்டுமென்றே தவறான விலாசத்தை தந்தேன். . . அதை பற்றியும் விலாவாரியாக கேட்டுக்கொன்டது..
எங்கள் பின்னாடியே கிளம்பி வந்து எங்கள் வீட்டை கண்டுபிடித்து விடுமோ என்றும் பயமாயிருந்தது.
நாளையிலிருந்து வரவே கூடாது என்று முடிவெடுத்தோம். ஆனால் பக்கத்து வீட்டு மாமி புண்ணியம் கட்டிக் கொண்டாள்.மூனு நாள் கிளாஸ் அட்டென்ட் பன்னா நேரா முக்தி தான்னு சொல்றா மாமீ என்றாள் அம்மாவிடம்.
இன்னைக்கு மட்டும் போயிட்டு கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிடுங்க- – என்றாள் அம்மா.விட்டா.. இந்த கோர்ஸ் கம்ப்ளீட் பன்னிட்டோம் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ல ரிஜிஸ்டர் பன்னிக்குவாங்களான்னு கேளும்பா.
மூன்றாம் நாள் நல்ல வேளையாக அவன் இல்லை.. அப்பாடா என்றிருந்தது. ஆனால் .. எதிர்பாராத விதமாக ஓர் இளம் வயது வாலிபர் எங்களை வரவேற்றார்.. இன்னைக்கு நான் கிளாஸ் எடுப்பேன் என்றார்.
நீங்கள் யார்..? ( போச்சுடா . . . இதே கேள்வியா?)
நாங்கள் ஆத்மாக்கள் என்றோம்.
அதைத் தொடர்ந்துஅவர் தந்த ப்ரசங்கத்திற்கும் அவரது வயதுக்கும் சம்பந்தமே இல்லை.. நறுக்குத் தெறித்தார் போல் தெளிவான விளக்கங்கள்..அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் அமைதியான தீர்க்கமான பதில்.. கை கூப்பி வணங்க வேண்டுமெனத் தோன்றியது..குருவே சரணம்..
வாசலில் ஒரே பரபரப்பு. . . வந்துட்டார்.. வந்துட்டார் என்றார்கள்.
ஜிப்பாவும் இலாமல். . .சர்ச் பாதர் அங்கியும் இல்லாமல் ஒரு விதமான தோராய தொள தொளா அங்கி அணிந்து , அதற்குள்ளேயே நடமாடி நடந்து வந்த ஒருவர், அவருக்கென போடப்பட்டிருந்த சிறப்பு நாற்காலியில் அமர்ந்தார். தூங்கி வழிந்து அவர் ஆற்றிய உரையால் அவரும் தூங்கி அனைவரையும் தூங்க வைத்தார்.
அவர் விளக்கிய விளக்கங்கள் ஏற்கெனவே தாத்தா பாட்டியால் எங்களுக்கு நடைமுறையில் சொல்லித் தரப்பட்டிருந்தன. எனவே அவரது ப்ரசங்கத்தால் பரவசமோ, புளங்காகிதமோ. வேறு எந்த மண்ணாங்கட்டியுமோ ஏற்படவே இல்லை.
நான் மூன்று, தம்பி ஏழு -– ஆக மொத்தம் பத்து கொசுக்களை மட்டுமே அவரது உறையின் நடுவில் எங்களால் அடித்துக் கொல்ல முடிந்தது.
திவ்யமா இருந்துத்து ப்ரசாதம். . . உன் பிள்ளைகள் வாங்கவேயில்லை பார்த்துக்க... என்னதான் வளர்த்திருக்கியோ போ...! என்று அம்மாவிடம் போட்டுக் கொடுப்பாள் இந்த பக்கத்து வீட்டு மாமி, அதற்காகவே கூட்டம் கலையும் போது எஸ்கேப் ஆய்டலாம் என்ற எங்களின் இரண்டு அம்ச திட்டம் திவாலாகியது.
வரிசையில் நின்று நகர்ந்து நானும் தீர்த்தம் வாங்க கை நீட்டினேன்... அந்த ஆன்மீகக் குருவிடம் இருந்து நான் எதிர்பார்த்ததெல்லாம்... குழந்தையைப் போன்ற ஒரு சிரிப்பும்.. கண்களில் தெரியும் ஆத்ம ஒளியும் மட்டுமே.. ஆனால் துரதிருஷ்டவசமாக இரண்டுமே மிஸ்ஸிங்.. தீர்த்தம் கொடுக்கும் சாக்கில் அருகில் வரும் ஒவ்வொரு பெண்ணையும் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.. என்ன எழவுடா இது .. சே..!
தெய்வதம் என்பது காதலைப் போன்றது...உணரத்தான் முடியும்...ஒருவர் விளக்கி நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது அல்ல. தானே உணர்ந்து தானே அனுபவிப்பது தான் தெய்வீகம்.
அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அந்த அனுபவம் என்பதே நான் தான் என்றான் – -( கவியரசு கண்ணதாசனிடம் சொல்லாமல் கொள்ளாமல் திருடியது)
நான் அனுபவித்து உணர்ந்த சில தெய்வீகத் தருணங்கள் - இத் தேடலின் முடிவுப் பகுதியில்.
---------------
தொடர்ந்துத் தொலையும்
------------
நல்ல வேள.... நீ என் மேல விழறத்துக்கு முன்னாடி நான் எழுந்துட்டேன் -– என்றான் என் தம்பி
விழுந்திருப்பேன்.. அதுக்குள்ள டீச்சரம்மா பிடிச்சுகிட்டாங்க -– என்றேன் நான்
இருளோவென்றிருந்த அந்த அறையில் சிகப்பு கண்ணாடி பேப்பர் சுற்றிய பத்து வாட்ஸ் பல்ப் மட்டுமே எரிந்துக் கொண்டிருந்தது. தடுக்கி விழுந்து தாராந்து போக இருந்த எங்களை தெய்வம் போல் அந்த அம்மையார் காப்பாற்றினார்.
ஆன்மீகம் ஆரம்பமாகியது
நீங்கள் யார்?
நான் பத்மப்ரியா, இவன் என் தம்பி
அது உங்கள் உடலுக்கான பெயர் -– நீங்கள் யார்?
( என்ன இழவுடா இது) – நாங்க நாங்கதான் - என்றேன்
நீங்கள் என்றால் உங்கள் ஆத்மா... ஆத்மா உருவமில்லாதது – பரம பிதா வான் வெளியில் இருக்கிறார் அவரோடு ஐக்கியமாக தியானம் ஒன்றுதான் வழி . . .
வீட்டில் சிறுவயதில் சின்ன சின்ன கதைகள் வழியாக பாட்டியும் , தாத்தாவும் . அம்மாவும், அப்பாவும் போக வரச் சொல்லித்தந்த நல்லொழுக்கங்களை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துவதைப் போல அவ்வம்மையாரின் ப்ரசங்கம் இருந்தது. பொய் சொல்லாமை. கோபம், காமம் விலக்கல், களவு செய்யாமை, கூடா நட்பு... இன்னும் பல
இதெல்லாம் எங்க வீட்ல ஏற்கெனவே சொல்லித் தந்திருக்காங்க - என்றேன்
நீங்க அதெல்லாம் மறந்திருப்பீங்க, இப்ப நீங்க கடை பிடிக்கறதில்லை – என்றார்.
இல்ல.. இல்ல .. நாங்க அதை கடை பிடிக்கறோம் என்றேன்
முறைத்தார். ... இழுத்து ஒரு அறை விடுவார் போல இருந்தது
அடக்கி வாசி -– என்பதைப் போல தம்பி முறைத்தான்.
இன்னைக்கு கிளாஸ் இத்தோட முடிந்தது நாளைக்கு வாங்க என்றார்
தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியில் வந்தோம்.
ஆன்மீகம் சொல்லித் தருவதென்றால் டியூப் லைட்டே போட்டுக்க கூடாது என்று எந்த மடையன் சொல்லித் தந்தான் எனத் தெரியவில்லை. மாயாஜால மந்திரக் குகை எபக்ட்டோட சொல்லித்தந்தாதன் மண்டைல ஏறும்னு நினைச்சிருக்காங்க.
இந்த மாதிரி கிளாஸ் அட்டென்ட் பண்ண பிடிக்காமத்தான் கலையியல் இளைஞி பட்டத்துடன் நிறுத்தியாச்சு...திருப்பியும் அதே மாதிரி கிளாசா..?தப்பிக்க காரணங்களை தேடியது மனது.
வயத்தை பிடிச்சுகிட்டு வலிக்குதுன்னு சொன்னாலும் – பூலோக ராட்ச்சசி, புண்ணியவதி அம்மா பிசாசா விடுவாள்..? பூ. ஊதுபத்தி, சாம்பிரானி மட்டி எல்லாம் எடுத்து கொடுத்து கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினாள் அம்மா.
அடுத்தவரது ஆன்மீக முன்னேற்றங்களில் தலையிடு வதில்லை என்ற கொள்கை பிடிப்போடு இருக்கும் அப்பா எங்களுக்கு நிகழ்ந்த இக் கொடுமைகளை கண்டு கொள்ளவே இல்லை.
எல்.கே.ஜி. கிளாசுக்கு போவதைப் போல கிளம்பினோம் – தம்பியும் தான்..வயசுப் பொண்ணை தனியா மடத்துக்கு அனுப்றதா? கிளம்புடா .. ம் .. ஆகட்டும் என்றாள் அம்மா.
என்னை கொலை செய்துவிட்டு சிறைச் சாலைக்குப் போகத் தயாராக இருந்தான் என் தம்பி.. ஆனால் எதிர் பிளாட் காவ்யா கொஞ்சம் மடிவாள் போல இருந்ததால் என்னை கொலை செய்யும் ஐடியாவினை தற் சமயம் நிறுத்தி வைத்தான்
ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதாக காட்டிக் கொண்டால் தானே காவ்யாவையும் காவ்யாவின் அம்மாவையும் கவர்ந்திழுக்க முடியும் என மடத்தனமாக நம்பினான்.
இன்று அந்த அம்மையாரையே காணோம் – அப்பாடா தப்ச்சோம் என்று நினைத்து முடிப்பதற்குள் நீங்கதான் புது ஸ்டூடன்ட்ஸ்ஸா என்றார் ஒரு நடுத்தர வயதுக்காரர்..
மஞ்சள் பைஜாமா ஜிப்பாவில், சமீபத்தில் செத்துப் போனா ஆதிகால ஜெமினி கணேசனை நினைவூட்டினார்.
ஆமாம் - என்றோம் கசாப்பு ஆடுகளைப் போல
உள்ள வாங்க என்றார். உத்தேசமாக, குத்துமதிப்பாக, தோராயமாக போய் உட்கார்ந்தோம்.
நீங்கள் யார் ? என்றார்
ஆகா ஆரம்பிச்சிட்டாருயா ஆரம்பிச்சுட்டாரு... சுதாரித்துக் கொண்டோம்
இந்த கிளாஸ் நேத்தே நடத்திட்டாங்க என்றோம் ஒரே குரலில்
இல்லை ரெப்ரஷ் பண்ணிக்கலாம் -– என்றார் எதோ கோகோ கோலா, மிராண்டா குடிக்கப் போவதைப் போல
அதே விளக்கங்கள் அதே பாடங்கள் ஆனால்..அவன் மட்டமானவன் என்பதை அவனது பார்வைகள் சென்ற இடம் உணர்த்தியது. சட்டென எழுந்துக்கொண்டான் தம்பி.. வயத்தை வலிக்குது கிளம்பலாம் என்றான்.. அப்பாடா என்றிருந்தது எனக்கு.. வேகமாக வெளியில் வந்தோம்.
என் பின் பக்கம் வந்தவர்.. எங்கிருந்து வருகின்றீர்கள் என்றார்.
நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்கிறார் என நினைத்து – அந்த பரமாத்மாவிலிருந்து வருகின்றோம் - என்றேன்
விழுந்து விழுந்து சிரித்தது அந்த லூசு. போதாத குறைக்கு "ஜோவியலா பேசறீங்க... இ லைக் இட் என்றது. தம்பியின் முறைப்பு என் முதுகை துளைத்தது.
உங்க வீடு எங்க? என்றது -–
உலக பந்தங்களில் இருந்து பற்றருக்க, வீடு பேறு அடைய வழி சொல்லித்தரும் இடத்தில் .. என் வீட்டைப் பற்றிய விவரங்கள் எதற்கு..வேண்டுமென்றே தவறான விலாசத்தை தந்தேன். . . அதை பற்றியும் விலாவாரியாக கேட்டுக்கொன்டது..
எங்கள் பின்னாடியே கிளம்பி வந்து எங்கள் வீட்டை கண்டுபிடித்து விடுமோ என்றும் பயமாயிருந்தது.
நாளையிலிருந்து வரவே கூடாது என்று முடிவெடுத்தோம். ஆனால் பக்கத்து வீட்டு மாமி புண்ணியம் கட்டிக் கொண்டாள்.மூனு நாள் கிளாஸ் அட்டென்ட் பன்னா நேரா முக்தி தான்னு சொல்றா மாமீ என்றாள் அம்மாவிடம்.
இன்னைக்கு மட்டும் போயிட்டு கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிடுங்க- – என்றாள் அம்மா.விட்டா.. இந்த கோர்ஸ் கம்ப்ளீட் பன்னிட்டோம் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ல ரிஜிஸ்டர் பன்னிக்குவாங்களான்னு கேளும்பா.
மூன்றாம் நாள் நல்ல வேளையாக அவன் இல்லை.. அப்பாடா என்றிருந்தது. ஆனால் .. எதிர்பாராத விதமாக ஓர் இளம் வயது வாலிபர் எங்களை வரவேற்றார்.. இன்னைக்கு நான் கிளாஸ் எடுப்பேன் என்றார்.
நீங்கள் யார்..? ( போச்சுடா . . . இதே கேள்வியா?)
நாங்கள் ஆத்மாக்கள் என்றோம்.
அதைத் தொடர்ந்துஅவர் தந்த ப்ரசங்கத்திற்கும் அவரது வயதுக்கும் சம்பந்தமே இல்லை.. நறுக்குத் தெறித்தார் போல் தெளிவான விளக்கங்கள்..அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் அமைதியான தீர்க்கமான பதில்.. கை கூப்பி வணங்க வேண்டுமெனத் தோன்றியது..குருவே சரணம்..
வாசலில் ஒரே பரபரப்பு. . . வந்துட்டார்.. வந்துட்டார் என்றார்கள்.
ஜிப்பாவும் இலாமல். . .சர்ச் பாதர் அங்கியும் இல்லாமல் ஒரு விதமான தோராய தொள தொளா அங்கி அணிந்து , அதற்குள்ளேயே நடமாடி நடந்து வந்த ஒருவர், அவருக்கென போடப்பட்டிருந்த சிறப்பு நாற்காலியில் அமர்ந்தார். தூங்கி வழிந்து அவர் ஆற்றிய உரையால் அவரும் தூங்கி அனைவரையும் தூங்க வைத்தார்.
அவர் விளக்கிய விளக்கங்கள் ஏற்கெனவே தாத்தா பாட்டியால் எங்களுக்கு நடைமுறையில் சொல்லித் தரப்பட்டிருந்தன. எனவே அவரது ப்ரசங்கத்தால் பரவசமோ, புளங்காகிதமோ. வேறு எந்த மண்ணாங்கட்டியுமோ ஏற்படவே இல்லை.
நான் மூன்று, தம்பி ஏழு -– ஆக மொத்தம் பத்து கொசுக்களை மட்டுமே அவரது உறையின் நடுவில் எங்களால் அடித்துக் கொல்ல முடிந்தது.
திவ்யமா இருந்துத்து ப்ரசாதம். . . உன் பிள்ளைகள் வாங்கவேயில்லை பார்த்துக்க... என்னதான் வளர்த்திருக்கியோ போ...! என்று அம்மாவிடம் போட்டுக் கொடுப்பாள் இந்த பக்கத்து வீட்டு மாமி, அதற்காகவே கூட்டம் கலையும் போது எஸ்கேப் ஆய்டலாம் என்ற எங்களின் இரண்டு அம்ச திட்டம் திவாலாகியது.
வரிசையில் நின்று நகர்ந்து நானும் தீர்த்தம் வாங்க கை நீட்டினேன்... அந்த ஆன்மீகக் குருவிடம் இருந்து நான் எதிர்பார்த்ததெல்லாம்... குழந்தையைப் போன்ற ஒரு சிரிப்பும்.. கண்களில் தெரியும் ஆத்ம ஒளியும் மட்டுமே.. ஆனால் துரதிருஷ்டவசமாக இரண்டுமே மிஸ்ஸிங்.. தீர்த்தம் கொடுக்கும் சாக்கில் அருகில் வரும் ஒவ்வொரு பெண்ணையும் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.. என்ன எழவுடா இது .. சே..!
தெய்வதம் என்பது காதலைப் போன்றது...உணரத்தான் முடியும்...ஒருவர் விளக்கி நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது அல்ல. தானே உணர்ந்து தானே அனுபவிப்பது தான் தெய்வீகம்.
அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அந்த அனுபவம் என்பதே நான் தான் என்றான் – -( கவியரசு கண்ணதாசனிடம் சொல்லாமல் கொள்ளாமல் திருடியது)
நான் அனுபவித்து உணர்ந்த சில தெய்வீகத் தருணங்கள் - இத் தேடலின் முடிவுப் பகுதியில்.
---------------
தொடர்ந்துத் தொலையும்
------------
Friday, June 03, 2005
அவள்
உன்னை மட்டுமே பார்ப்பவள் நான்
உன்னை மட்டுமல்ல - இந்த
ஊரையே பார்ப்பவள் அவள் - என்றாலும்
உரைப்பதில்லை உனக்கு
அவளின் அனைத்தும் இரவல்
அடுத்தவனிடம் அள்ளினாள் என்றாலும்
அலுக்கவில்லை உனக்கு அவளது ஒளி
யாரோடு யாரை ஒப்பிடுகிறாய் ?
நீ அவளையும் விரும்பித் தொலை
அதற்காக. . . . அவளோடு என்னையா?
ஓரவஞ்சனை ஒப்பிடலில் - அவளை
ஓரப்பார்வை வேறு
அவளைப் பார்த்துக்கொண்டே
நான் வேண்டும் என்கிறாய்
என்னைப் பார்த்துக் கொண்டே
அவள் வேண்டும் என்கிறாய்
வெட்கமின்றி வெறிப்பவள் எதிரில்
வேண்டுமென்றே என்னைக் கொஞ்சுவாய்
வேறுபக்கம் போகாமல் அவளும்
வெளிச்சம் வேறு போடுவாள்
உன்னைப் பார்க்க இயலாத - அவளின்
அந்த மூன்று நாட்கள் மட்டுமே
நீ எனக்கே எனக்கு
நான் இருந்தாலும் போனாலும் -
இல்லை இல்லாமலேயே போனாலும்
நேர்தியாய் உன்னோடு மாலையில் அவளுன்டு
எனவே . . .
அப்புறப்படுத்து. . .அவளை
அதுதான் அந்த அழகிய நிலாப் பெண்ணை
நீ, அவள், நான் என
கோஷ்டி காதல் அனுசரிக்க
என்னால் இயலாது.
உன்னை மட்டுமே பார்ப்பவள் நான்
உன்னை மட்டுமல்ல - இந்த
ஊரையே பார்ப்பவள் அவள் - என்றாலும்
உரைப்பதில்லை உனக்கு
அவளின் அனைத்தும் இரவல்
அடுத்தவனிடம் அள்ளினாள் என்றாலும்
அலுக்கவில்லை உனக்கு அவளது ஒளி
யாரோடு யாரை ஒப்பிடுகிறாய் ?
நீ அவளையும் விரும்பித் தொலை
அதற்காக. . . . அவளோடு என்னையா?
ஓரவஞ்சனை ஒப்பிடலில் - அவளை
ஓரப்பார்வை வேறு
அவளைப் பார்த்துக்கொண்டே
நான் வேண்டும் என்கிறாய்
என்னைப் பார்த்துக் கொண்டே
அவள் வேண்டும் என்கிறாய்
வெட்கமின்றி வெறிப்பவள் எதிரில்
வேண்டுமென்றே என்னைக் கொஞ்சுவாய்
வேறுபக்கம் போகாமல் அவளும்
வெளிச்சம் வேறு போடுவாள்
உன்னைப் பார்க்க இயலாத - அவளின்
அந்த மூன்று நாட்கள் மட்டுமே
நீ எனக்கே எனக்கு
நான் இருந்தாலும் போனாலும் -
இல்லை இல்லாமலேயே போனாலும்
நேர்தியாய் உன்னோடு மாலையில் அவளுன்டு
எனவே . . .
அப்புறப்படுத்து. . .அவளை
அதுதான் அந்த அழகிய நிலாப் பெண்ணை
நீ, அவள், நான் என
கோஷ்டி காதல் அனுசரிக்க
என்னால் இயலாது.
Sunday, May 29, 2005
முன் குறிப்பு
முன் குறிப்பு
பின் வரும் " சுமி " யும் காதல் என்ற ஒரே ஒரு வார்த்தையை தேடி அலைந்த இரு இதயங்களின் தேடல் தான்...
தெய்வீகத்தை விட ஆத்மீகம் உணர்வு பூர்வமானது ... வலி நிரம்பியது அல்லவா?
ஆத்மாவின் வலியை அனுபவித்திருக்கின்றீர்களா? சுமியை படிங்க .. .கொஞ்சம் புரியும்.
அப்புறம் ...தேடல் - 3 ஐ தேடாதீங்க.. அது அடுத்த வாரம் வரும்
(ஐயா.. ஜாலி ந்னு குதிக்க வேண்டாம்...அடுத்த வாரம் கண்டிப்பா தேடல் - 3 ப்ளாகிடப்படும் .. .தப்பிக்கவே முடியாது கண்மணிகளா)
பின் வரும் " சுமி " யும் காதல் என்ற ஒரே ஒரு வார்த்தையை தேடி அலைந்த இரு இதயங்களின் தேடல் தான்...
தெய்வீகத்தை விட ஆத்மீகம் உணர்வு பூர்வமானது ... வலி நிரம்பியது அல்லவா?
ஆத்மாவின் வலியை அனுபவித்திருக்கின்றீர்களா? சுமியை படிங்க .. .கொஞ்சம் புரியும்.
அப்புறம் ...தேடல் - 3 ஐ தேடாதீங்க.. அது அடுத்த வாரம் வரும்
(ஐயா.. ஜாலி ந்னு குதிக்க வேண்டாம்...அடுத்த வாரம் கண்டிப்பா தேடல் - 3 ப்ளாகிடப்படும் .. .தப்பிக்கவே முடியாது கண்மணிகளா)
சுமி
சுமி
இன்னைக்காவது சொல்லிடு சுமி இதை விட்டா சான்சே இல்ல... போ.. போய் சொல்லு
ஏன் அவன் தான் சொல்லட்டுமே?
நீதான் சொல்லேன் . . .? இதுல நீ... நான்னு ...சண்டை எதுக்கு?
நெவர். . . அவங்கதான் சொல்லனும். . . அதுதான் முறை
உன் சார்பா நான் போய் சொல்லட்டா?
மீனா. . . என்னை புரிஞ்சுக்க. . நாமளா போய் சொல்லவே கூடாதுப்பா. . . இன்னைக்கு இல்லன்னாலும்... என்னைக்கும் அது நமக்கு வீக் பாயின்ட்
நீ உன்னோட வாழ்க்கையோட விளையாடற சுமி
அவனோட வாழ்க்கையும் இதுல தானே அடங்குது..? அவனுக்கு நான் வேண்டாங்கறதாலதான இப்ப கூட சொல்லாம இருக்கான்....? நிஜமாவே அது போல எதுவுமே இல்லயோ என்னமோ. ..? நான் போயி ... உளறி ...அசிங்கமாயிடும் மீனா... வேண்டாம் நானா சொல்லமாட்டேன். . . நான் அவனுக்கு வேணும்னா. . . அவன் வந்து சொல்லட்டும் -
அழுகையோடு முடிந்தது
--------------------------------------------------
முதல்லயே சொல்லித் தொலைச்சிருக்கலாண்டா நீ..சொதப்பிட்ட. . . உன் தலைஎழுத்து..
சட்டுன்னு நிசயமாயிடும்னு நான் துளி கூட நினைக்கலடா. . . கொஞ்சம் கண்ணாமூச்சி விளையாடிட்டு. . .அவ எதிர் பார்த்து ஏமாறும் போது ரசிச்சிட்டு... நல்ல நாள்ள சொல்லனும்னுதான் தள்ளி போட்டேன்
மண்ணாங்கட்டி . . . நான் வேணா மீனாவ இங்க வர சொல்றேன் ... அவ ஸ்மார்ட்.. அவ கிட்ட சொல்லி நிறுத்த சொல்லலாமா?
இப்பவா..? பாக்கு வெத்தல மாத்தியாசுன்னாங்களே...?
போனவாரம் ஆனுவல் டே பங்ஷன் அன்னைக்காவது நீ சொல்லி இருக்கலாம். . . வண்டி எதுத்துட்டு கிளம்பிட்ட. . . பெரிய_________
(கெட்ட வார்த்தைகளை போட்டுக் கொள்ளுங்கள்)
மறு நாள் அவ பர்த்டேக்கு ப்ரசன்ட் வாங்கதானடா போனேன்?
நல்லாத்தான் பாடினா. . . உன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை பாராட்டு வரும்னு எதிர்பார்த்தா.... எங்க நின்னுட்டு இருந்தாலும் உன்னையே பார்த்துட்டு இருந்தா. . . நீ ரொம்ப சிலுப்பிக்கிட்ட. . . இப்ப... தாழியே உடைஞ்சாச்சு. . . போடாங். . நீ எல்லாம் வேஸ்ட்றா. . .
அவ மனசில நான் இருக்கேன்னு எனக்கு புரியவே ரொம்ப லேட்டாயிடுச்சு.. அத கன்பர்ம் பண்ணணும் பண்ணனும்னே நாள் கடத்திட்டேன். .ப்ச்...
டேய் மாமூ. . . நீ ஜாயின் பண்ண முதல் நாள் . . . உன்னை பார்த்ததும் போட்ட 1000 வாட்ஸ் பல்பை.. அவ மூஞ்சியில இருந்து இன்ன்ன்ன்னும் ஆப் பண்ணல. . .அது உங்களுக்கு இன்னும் புரியல..? உனக்கெல்லாம் எதுக்குடா லவ்வு...?
( வேற நல்லதா நாலு கெட்ட வார்த்தை போட்டுக் கொள்ளுங்கள்)
-------------------------------------------------
நீ வேணும் ஷிவா. . . நீ வேணும் டா எனக்கு..ப்ளீஸ். . . இன்னைக்கு வந்து சொல்லிடு. . .இல்லைன்ன அவ்ளோ தான் . . இன்னைக்கு ஈவ்னிங் 5.30க்குள்ள நீ எங்க டிபார்ட்மென்ட் வற. . வந்து. . .என் கிட்ட வந்து ஐ லவ் யூன்னு சொல்ற. . .ஆமா சொல்லிட்டேன்.. –
--மனதுக்குள் பேசிக் கொண்டாள்.
--------------------------------------------------
எனக்கு நீ வேணும் சுமி. .. நீ இல்லாம நான் எப்படி. . . எப்படி..?
நான் எப்பவுமே எதிலயுமே லேட்தான் சுமி. . . உன்னை ஓவரா வெறுப்பேத்திட்டேன். . . அதுக்காக.. நீ எப்படி நிச்சயத்துக்கு சம்மதிக்கலாம்?
-- மனதிற்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------
எத்தனை சந்தர்ப்பம் வந்துச்சு? ஏண்டா சொல்லாம நின்ன?அன்னைக்கு எங்க புது வீட்டுக்கு பர்ஸ்ட் டைம் என் வண்டில என் கூடத்தான வந்த..? அப்ப சொல்லிருக்கலாமில்ல? அன்னைக்கு நான் எவ்ளோ எதிர் பார்த்தேன் தெரியுமா?
அம்மாக்கு நீ குடுத்த கிப்ட் ரொம்ப பிடிச்சது. . உன்னையும் சேர்த்துதான். . . அப்பா கூட உன்ன ஸ்மார்ட்டுன்னாரு. . . அவரே உன்ன ஸ்மார்ட்டுன்னா. . நீ நிஜமாவே ஸ்மார்ட் தான். . . தம்பி கூட உன்னோட பேசிட்டு இருந்தா ஜாலியா இருக்குன்னு சொன்னான் - எல்லாரையும் அட்ராக்ட் பண்ணியே. . . அன்னைக்கே நீ சொல்லிருக்கலாம். . .
உங்க அப்பா அம்மாவை என்கிட்ட அறிமுகம் படுத்தினியே.. அன்னைக்கு ஈவ்னிங்காவது சொல்லுவேன்னு எவ்ளோ ஏங்கினேன் தெரியுமா?
மனதுக்குள் பேசிக்கொண்டாள்.
--------------------------------------------------
உங்க வீட்டுக்கு உன்னோட வண்டில வரும்போதே தீர்மானம் பன்னேன். . .திரும்பும் போது நீ என்னை டிராப் பண்ணுவ. . .அப்போ . . .பெரிய கோயிலுக்கு போகச் சொல்லி. . . அங்க அமைதியான கல் படியில உட்கார்ந்து. . . பௌர்ணமி நிலவு சாட்சியா. . . உன் கைய பிடிச்சு “ ஐ லவ் யூ சுமி. . ஐ லவ் யூடா” ந்னு சொல்லனும்னு ஆசையா இருந்தேன். . . ஆனா உன் தம்பியை டிராப் பண்ண சொல்லிட்டாரு உங்க அப்பா.. . நான் அன்னைக்கு எவ்ளோ வருத்தப்பட்டேன்னு உனக்கு தெரியுமா?
எங்க அப்பா அம்மா உன்ன பார்த்ததும் ப்ளசன்ட் ஆயிட்டாங்க.. ஆனாலும் அம்மாகிட்ட உன்ன பத்தி சொல்லி அவங்க சம்மதத்தை வாங்கி அவங்களை ட்ரெயின் ஏத்திட்டு வற்றதுக்குள்ள நீ ஊருக்கு போயிட்ட சுமி... ஆன் தட் டே ஐ மிஸ்ட் யு லாட் சுமி. ..
மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
--------------------------------------------------
உனக்காகத்தானே ஆனுவல் டேக்கு அந்த பாட்டை பாடினேன்.. . . நல்லா இருக்குன்னு ஒரு வார்த்த.. .ஒரே ஒரு வார்த்த சொன்னியா? எல்லாரும் அப்ரிஷியேட் பண்ணாங்க.. நீ மட்டும் வண்டி எடுத்துக்கிட்டு வேகமா போயிட்ட..
நீ.. என்னை லவ் பண்ணலடா. . . லவ்வே பண்ணல.. நான் தான் தப்பா எடுத்துக்கிட்டு..கனவுல மிதந்தேன்னு நினைக்கிறேன்..
மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்
--------------------------------------------------
நீ எனக்காகத்தான் அந்தப் பாட்டை பாடினேன்னு எனக்கு தெரியும் சுமி. . . எல்லாரோட கண்ணும் அன்னைக்கு நம்ம மேலதான் சுமி.. லவ்வெல்லாம் எல்லார் எதிர்லேயும் டிக்ளேர் பண்ற விஷயம் இல்ல டா...
மனதுக்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------
அவ இன்னைக்கு லஞ்ச்சே சாப்ட்லடா. . . அழுத மாதிரி இருந்தது அவ முகம்.. அவ சந்தோஷமாவே இல்ல. . . நிச்சயம் ஆன பொண்ணு மாதிரியா இருக்கா? இப்ப கூட லேட் இல்லடா. . . கான்டீனுக்கு கூட்டிட்டு வரேன்.. நிச்சயம் ஆச்சோ .. ஆகலயோ... அதப் பத்தி கவலப் படாம ஒரு வார்த்தை சொல்லிடு சிவா .. எனக் கென்னவோ நீ ரொம்ப லேட் பண்ற மாதிரி இருக்கு
இல்லடா. . . நேத்து வரைக்கும்னா.. நான் பயப்பட மாட்டேன்.. இன்னைக்கு இவ மட்டும் இல்ல இவளோட சேர்த்து இவ அத்தை பையன் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு.. விருப்பமிலாமயா நிச்சயத்துக்கு சம்மதிச்சிருப்பா?. . . எனக்காக ஒன்னு செய்றியா? மீனாவ கூட்டிட்டுவா. . . நான் அவ கிட்ட பேசனும்... நான் சொல்றேனோ சொல்லலையோ... அது வேற விஷயம்... அவ என்னை லவ் பன்னிணாளா..? எதுக்காக இப்படி திடீர்னு நிச்சயம் பண்ண சம்மதிச்சான்னு தெரியனும்..
தெரிஞ்சி...? தெரிஞ்சி என்னடா பண்ணப்போற? தும்ப விட்டுட்டு வால பிடிக்கற.. சரி.. நான் போயி மீனாவ வர சொல்றேன்.. திஸ் சிகார் மஸ்ட் பி த லாஸ்ட் ஒன் ஷிவா.. ஒடம்ப கெடுத்துக்காத. . .
--------------------------------------------------
சுமி ஜன்னல் வழியா பாரு . . . இதோட மூனு பாக்கெட் புடிச்சி தீர்த்துட்டான்.. போடி போயி சொல்லு... இப்பவாவது சொல்லித் தொலை.. நீ அவனை லவ் பன்றத
புரிஞ்சுதான் பேசறியா மீனா.. அவன் எனக்காகத்தான் சிகரெட் பிடிச்சு தள்றான்னு என்னை இமேஜின் பண்ணிக்கச் சொல்றியா..? இமேஜின் பண்ணி . . இமேஜின் பண்ணி நான் எமாந்தது போதும்.. நான் போய் சொல்லமாட்டேன்.. நாங்க சேரனும்னு இருந்தா... இன்னைக்கு ஈவ்னிங்குள்ள அவன் வந்து கண்டிப்பா சொல்லுவான்
--------------------------------------------------
யாற்றா அவன் கார்ல வந்து சுமியையும் மீனாவையும் அழைசிட்டு போறான்? சுமி ஏன் அழறா?
சுமியோட அப்பாக்கு மேசிவ் அட்டாக், மலர்ல சேர்த்திருக்காங்க.. அவன் தான் அவளுக்குன்னு நிச்சயம் பண்ண அத்தை பையன்
சரி.. வண்டி எடு ... நாம மலருக்கு போறோம்
--------------------------------------------------
இந்த மூணு நாள் நாயா அலைஞ்சியே... நடுவிலே எப்பவாவது சொன்னியா ஷிவா?
எங்கடா... அவ அழுதுகிட்டே இருக்காடா..? அவ அத்தை பையன் வேற.. கூடவே நிக்கறான்... “ நான் இருக்கும் போது நீ என்ன இங்க “ ந்ன்ற மாதிரி பாக்கறான். . .இப்ப போயி நான் எப்டி..?
இன்னைக்கு சுமிய கூப்பிட்டு சொல்லிடு
இன்னைக்கா..? இன்னைக்குத்தான் ஐ.சீ.யூ ல இருந்து அவங்க அப்பா வெளியில வந்திருக்காரு..
சொல்லித் தொலைடா முண்டம்.... சொல்லித் தொலை.
--------------------------------------------------
நான் இவ்ளோ அழறேனே . . . எதாவது வந்து பேசுறியா... மக்கு மாதிரி வெளியிலேயே நில்லு.. என்னமோ எங்களுக்கு வேல செய்யவே வந்த மாதிரி ஓடி ஓடி போயிடுடா.. பக்கத்துல வந்து நான் இருக்கேன் சுமி.. கவலப்படாதேன்னு ஒரு வார்த்த .. ஒரே ஒரு வார்த்த சொல்லு ஷிவா..
மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
--------------------------------------------------
என்னடா ஷிவா? இன்னைக்குத்தான் ஜெனரல் வார்டுக்கு வந்தாரு.. இப்ப திரும்பவும் ஐ.சீ.யூக்கு மாத்தி இருக்காங்க.. சுமி மட்டும் உள்ள இருக்கா?
காலைலயே திரும்பவும் சம் ப்ராப்ளம்.. ஐ.சீ.யூக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.. சுமியோட பேசியே ஆகனும்னு அவள உள்ள அழைச்சுக்கிட்டாரு அவ அப்பா..ஐயோ . . . அவ கைய பிடிச்சுகிட்டு அவர் எதோ கேக்கறாரு... சுமியும் தலைய ஆட்டி ஆட்டி அவர் கைல ப்ராமிஸ் பன்றாடா..
வேறென்ன நம்ம குல கௌரவத்தை காப்பாத்து.. கல்யாணத்துக்கு அப்பா இருப்பேனோ இல்லையோ தான்... அவ்ளோதான்டா... உனக்கு இருந்த கடைசீ சான்சும் முடிஞ்சுது... மாங்கா டா நீ.. சொல்லு சொல்லுன்னு தலபாடா அடிச்சிகிட்டேன்... முண்டம் மாதிரி நின்ன .. இப்ப பாரு.. அவ ப்ராமிஸ்லாம் பண்றா.
இப்ப என்னடா பண்றது...?
--------------------------------------------------
ஷிவா நீ ஏன்டா இப்டி இருக்க..? பேச முடியாத வலியிலேயும் என் கைய பிடிச்சிகிட்டு “ யார் மேலயாவது ஆசை இருந்தா அப்பாகிட்ட சொல்லிடுடா.. உன் கல்யாணத்துக்கு அப்பா இருப்பேனோ என்னவோ.. உன் மனசில யாராவது இருந்தா அப்பா கிட்ட சொல்லு. .. உன் அம்மா இதெல்லாம் கேப்பாளோ மாட்டாளோ.. நான் இருக்கும் போதே.. உன்னை உன் மனசுக்கு பிடிச்சவன் கையில பிடிச்சி கொடுத்திட்டா.. நான் நிம்மதியா கண்ண மூடுவேன்” ந்னு அப்பா கேக்கும் போது துணிஞ்சு, தைரியமா என்னால உன்னப்பத்தி சொல்ல முடியல.. உன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை வராம நான் எப்படி.. நான் எப்படி அப்பா கிட்ட..? அதனாலேயே நான் “ அதெல்லாம் ஒன்னுமில்லப்பா.. அதெல்லாம் ஒன்னுமில்லப்பா” ந்னு அழுத்தி அழுத்தி சொல்லிட்டு வந்தேன்.
உன்னை நான் பார்த்திருக்கவே கூடாதுடா.. பார்த்தாலும் உன்னை விரும்பி இருக்க கூடாது.. உன்னை விரும்பினாலும்.. நீயும் என்னை லவ் பண்றேன்னு நினைச்சு ஏமாந்திருக்க கூடாது.. என்னை சாகடிக்கிறியே ஷிவா.. ஆனா நானா வந்து உன்கிட்ட எப்படி... எப்படி சொல்வேன் ஷிவா.. நெவர்.. சொல்ல மாட்டேன்.. சொல்ல முடியாதுடா என்னால..
மனதிற்குள் பேசிக் கொண்டாள்... வெளியில் அழுதாள்
--------------------------------------------------
அவங்க அப்பா இருந்தாலாவது. . . அவர் கிட்ட நான் போயி பேசி எதாவது பண்ணலாம்... அவரும் போயி சேர்ந்துட்டாரே ஷிவா
முடிஞ்சதை பத்தி பேசாத.. நாளைக்கு கிளம்பறேன்... பூனால நம்ம பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டேன்.. போறதுக்கு முன்னாடி எனக்கு அவள பார்க்கணும்.. அவ வீட்டுக்கு என்னோட வற்றியா?
-------------------------------------------------
நீ வீட்டுக்கு வந்தது இதுக்காகவா ஷிவா? பூனா போறேன்னு சொல்றத்துக்காகவா? கடைசீ வரைக்கும் சொல்லவே இல்லியே ஷிவா?...!? நிஜமாவே நீ என்னை லவ் பண்ணலயா? நீ லவ் பண்ற அளவுக்கு நான் இல்லையா? அப்ப ஏன் எனக்கு இவ்ளோ உதவி பண்ண? போ.. போ..பின்னாலேயெ சுமி செத்துட்டான்னு நியூஸ் வரும்.. போ
மனதிற்குள் அழுதாள்
--------------------------------------------------
வீட்ல மாப்ள பாக்கறாங்க. .. பாக்கு வெத்தலை மாத்த போறாங்கன்னு ஒரு வார்த்தை .. ஒரே ஒரு வார்த்தை வந்து சொல்லி இருந்தீன்னா.. அந்த பாக்கு வெத்தலையை எங்க அப்பா அம்மா மாத்தி இருப்பாங்களே? எதுவுமே சொல்லாம நிச்சயத்துக்கு சம்மதிச்சிட்ட இல்ல?
நீ என்னை விரும்பலை சுமி.. விரும்பவே இல்ல.. சும்மா டைம் பாஸ்க்காக என்னோட பழகி இருக்க.. நான் தான் நீ என்னை லவ் பண்றியோன்னு தப்பா நினைச்சுட்டேன்
மனதிற்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------
வீட்ல மாப்ள பாக்கறாங்க . . . அடுத்த மாசம் பாக்கு வெத்தலை மாத்த போறாங்கன்னு நியூஸ் பரப்பியும்.. அவன் வந்து அவனோட லவ்வ சொல்லலைன்னா.. அவன் உன்னை நிஜமாவே லவ் பண்ணல சுமி... அவனையே நினைச்சு அழாதே சுமி...
இப்ப புரிஞ்சிதா.. என்னை போயி சொல்லு சொல்லுன்னு சொன்னியே.. நானா போயி சொல்லி.. அதுக்கு அவன் .. சே சே.. நான் உங்க கூட ப்ரென்ட்லியாத்தான் பழகினேன்.. லவ்வெல்லம் எதுவும் இல்லைன்னு சொல்லி இருப்பான். . . அதை விட பெரிய அவமானம் எதுவும் இல்ல மீனா.. எதுவும் இல்ல
அவனையே நினைச்சு அழாதடா.. அழுது என்ன ஆகப் போகுது? உங்க அம்மா ஆசைப்படி உன் அத்தைப் பையனையே கல்யாணம் பண்ணிக்க.. அதுதான் உனக்கும் நல்லது.. உங்க பேமிலிக்கும் நல்லது சுமி
ப்ச்.. என் உயிரே என்கிட்ட இல்ல மீனா..
மனதிற்குள் அழுதாள்
--------------------------------------------------
அண்ணா .. வற்ற வாரமே வந்து பாக்கு வெத்தலை மாத்திரு.. இவ அவங்க அப்பா போனதிலேர்ந்து தெம்பாவே இல்லை.. எனக்கு பயமா இருக்கு.. நீ முதல்ல வந்து சேரு. . ..
போனில் அழுதாள் சுமியின் அம்மா
--------------------------------------------------
அடர்ந்த காரிருளில் ஒரு புள்ளியாய் கரைந்து போனது பூனா நோக்கிச் செல்லும் அந்த ரயில்... அந்த இருளிலேயே இரு புள்ளிகளாய் கரைந்து போயின அவ்விருவரின் இதயங்களும் அவற்றின் உயிர்ப்பும்.
இன்னைக்காவது சொல்லிடு சுமி இதை விட்டா சான்சே இல்ல... போ.. போய் சொல்லு
ஏன் அவன் தான் சொல்லட்டுமே?
நீதான் சொல்லேன் . . .? இதுல நீ... நான்னு ...சண்டை எதுக்கு?
நெவர். . . அவங்கதான் சொல்லனும். . . அதுதான் முறை
உன் சார்பா நான் போய் சொல்லட்டா?
மீனா. . . என்னை புரிஞ்சுக்க. . நாமளா போய் சொல்லவே கூடாதுப்பா. . . இன்னைக்கு இல்லன்னாலும்... என்னைக்கும் அது நமக்கு வீக் பாயின்ட்
நீ உன்னோட வாழ்க்கையோட விளையாடற சுமி
அவனோட வாழ்க்கையும் இதுல தானே அடங்குது..? அவனுக்கு நான் வேண்டாங்கறதாலதான இப்ப கூட சொல்லாம இருக்கான்....? நிஜமாவே அது போல எதுவுமே இல்லயோ என்னமோ. ..? நான் போயி ... உளறி ...அசிங்கமாயிடும் மீனா... வேண்டாம் நானா சொல்லமாட்டேன். . . நான் அவனுக்கு வேணும்னா. . . அவன் வந்து சொல்லட்டும் -
அழுகையோடு முடிந்தது
--------------------------------------------------
முதல்லயே சொல்லித் தொலைச்சிருக்கலாண்டா நீ..சொதப்பிட்ட. . . உன் தலைஎழுத்து..
சட்டுன்னு நிசயமாயிடும்னு நான் துளி கூட நினைக்கலடா. . . கொஞ்சம் கண்ணாமூச்சி விளையாடிட்டு. . .அவ எதிர் பார்த்து ஏமாறும் போது ரசிச்சிட்டு... நல்ல நாள்ள சொல்லனும்னுதான் தள்ளி போட்டேன்
மண்ணாங்கட்டி . . . நான் வேணா மீனாவ இங்க வர சொல்றேன் ... அவ ஸ்மார்ட்.. அவ கிட்ட சொல்லி நிறுத்த சொல்லலாமா?
இப்பவா..? பாக்கு வெத்தல மாத்தியாசுன்னாங்களே...?
போனவாரம் ஆனுவல் டே பங்ஷன் அன்னைக்காவது நீ சொல்லி இருக்கலாம். . . வண்டி எதுத்துட்டு கிளம்பிட்ட. . . பெரிய_________
(கெட்ட வார்த்தைகளை போட்டுக் கொள்ளுங்கள்)
மறு நாள் அவ பர்த்டேக்கு ப்ரசன்ட் வாங்கதானடா போனேன்?
நல்லாத்தான் பாடினா. . . உன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை பாராட்டு வரும்னு எதிர்பார்த்தா.... எங்க நின்னுட்டு இருந்தாலும் உன்னையே பார்த்துட்டு இருந்தா. . . நீ ரொம்ப சிலுப்பிக்கிட்ட. . . இப்ப... தாழியே உடைஞ்சாச்சு. . . போடாங். . நீ எல்லாம் வேஸ்ட்றா. . .
அவ மனசில நான் இருக்கேன்னு எனக்கு புரியவே ரொம்ப லேட்டாயிடுச்சு.. அத கன்பர்ம் பண்ணணும் பண்ணனும்னே நாள் கடத்திட்டேன். .ப்ச்...
டேய் மாமூ. . . நீ ஜாயின் பண்ண முதல் நாள் . . . உன்னை பார்த்ததும் போட்ட 1000 வாட்ஸ் பல்பை.. அவ மூஞ்சியில இருந்து இன்ன்ன்ன்னும் ஆப் பண்ணல. . .அது உங்களுக்கு இன்னும் புரியல..? உனக்கெல்லாம் எதுக்குடா லவ்வு...?
( வேற நல்லதா நாலு கெட்ட வார்த்தை போட்டுக் கொள்ளுங்கள்)
-------------------------------------------------
நீ வேணும் ஷிவா. . . நீ வேணும் டா எனக்கு..ப்ளீஸ். . . இன்னைக்கு வந்து சொல்லிடு. . .இல்லைன்ன அவ்ளோ தான் . . இன்னைக்கு ஈவ்னிங் 5.30க்குள்ள நீ எங்க டிபார்ட்மென்ட் வற. . வந்து. . .என் கிட்ட வந்து ஐ லவ் யூன்னு சொல்ற. . .ஆமா சொல்லிட்டேன்.. –
--மனதுக்குள் பேசிக் கொண்டாள்.
--------------------------------------------------
எனக்கு நீ வேணும் சுமி. .. நீ இல்லாம நான் எப்படி. . . எப்படி..?
நான் எப்பவுமே எதிலயுமே லேட்தான் சுமி. . . உன்னை ஓவரா வெறுப்பேத்திட்டேன். . . அதுக்காக.. நீ எப்படி நிச்சயத்துக்கு சம்மதிக்கலாம்?
-- மனதிற்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------
எத்தனை சந்தர்ப்பம் வந்துச்சு? ஏண்டா சொல்லாம நின்ன?அன்னைக்கு எங்க புது வீட்டுக்கு பர்ஸ்ட் டைம் என் வண்டில என் கூடத்தான வந்த..? அப்ப சொல்லிருக்கலாமில்ல? அன்னைக்கு நான் எவ்ளோ எதிர் பார்த்தேன் தெரியுமா?
அம்மாக்கு நீ குடுத்த கிப்ட் ரொம்ப பிடிச்சது. . உன்னையும் சேர்த்துதான். . . அப்பா கூட உன்ன ஸ்மார்ட்டுன்னாரு. . . அவரே உன்ன ஸ்மார்ட்டுன்னா. . நீ நிஜமாவே ஸ்மார்ட் தான். . . தம்பி கூட உன்னோட பேசிட்டு இருந்தா ஜாலியா இருக்குன்னு சொன்னான் - எல்லாரையும் அட்ராக்ட் பண்ணியே. . . அன்னைக்கே நீ சொல்லிருக்கலாம். . .
உங்க அப்பா அம்மாவை என்கிட்ட அறிமுகம் படுத்தினியே.. அன்னைக்கு ஈவ்னிங்காவது சொல்லுவேன்னு எவ்ளோ ஏங்கினேன் தெரியுமா?
மனதுக்குள் பேசிக்கொண்டாள்.
--------------------------------------------------
உங்க வீட்டுக்கு உன்னோட வண்டில வரும்போதே தீர்மானம் பன்னேன். . .திரும்பும் போது நீ என்னை டிராப் பண்ணுவ. . .அப்போ . . .பெரிய கோயிலுக்கு போகச் சொல்லி. . . அங்க அமைதியான கல் படியில உட்கார்ந்து. . . பௌர்ணமி நிலவு சாட்சியா. . . உன் கைய பிடிச்சு “ ஐ லவ் யூ சுமி. . ஐ லவ் யூடா” ந்னு சொல்லனும்னு ஆசையா இருந்தேன். . . ஆனா உன் தம்பியை டிராப் பண்ண சொல்லிட்டாரு உங்க அப்பா.. . நான் அன்னைக்கு எவ்ளோ வருத்தப்பட்டேன்னு உனக்கு தெரியுமா?
எங்க அப்பா அம்மா உன்ன பார்த்ததும் ப்ளசன்ட் ஆயிட்டாங்க.. ஆனாலும் அம்மாகிட்ட உன்ன பத்தி சொல்லி அவங்க சம்மதத்தை வாங்கி அவங்களை ட்ரெயின் ஏத்திட்டு வற்றதுக்குள்ள நீ ஊருக்கு போயிட்ட சுமி... ஆன் தட் டே ஐ மிஸ்ட் யு லாட் சுமி. ..
மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
--------------------------------------------------
உனக்காகத்தானே ஆனுவல் டேக்கு அந்த பாட்டை பாடினேன்.. . . நல்லா இருக்குன்னு ஒரு வார்த்த.. .ஒரே ஒரு வார்த்த சொன்னியா? எல்லாரும் அப்ரிஷியேட் பண்ணாங்க.. நீ மட்டும் வண்டி எடுத்துக்கிட்டு வேகமா போயிட்ட..
நீ.. என்னை லவ் பண்ணலடா. . . லவ்வே பண்ணல.. நான் தான் தப்பா எடுத்துக்கிட்டு..கனவுல மிதந்தேன்னு நினைக்கிறேன்..
மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்
--------------------------------------------------
நீ எனக்காகத்தான் அந்தப் பாட்டை பாடினேன்னு எனக்கு தெரியும் சுமி. . . எல்லாரோட கண்ணும் அன்னைக்கு நம்ம மேலதான் சுமி.. லவ்வெல்லாம் எல்லார் எதிர்லேயும் டிக்ளேர் பண்ற விஷயம் இல்ல டா...
மனதுக்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------
அவ இன்னைக்கு லஞ்ச்சே சாப்ட்லடா. . . அழுத மாதிரி இருந்தது அவ முகம்.. அவ சந்தோஷமாவே இல்ல. . . நிச்சயம் ஆன பொண்ணு மாதிரியா இருக்கா? இப்ப கூட லேட் இல்லடா. . . கான்டீனுக்கு கூட்டிட்டு வரேன்.. நிச்சயம் ஆச்சோ .. ஆகலயோ... அதப் பத்தி கவலப் படாம ஒரு வார்த்தை சொல்லிடு சிவா .. எனக் கென்னவோ நீ ரொம்ப லேட் பண்ற மாதிரி இருக்கு
இல்லடா. . . நேத்து வரைக்கும்னா.. நான் பயப்பட மாட்டேன்.. இன்னைக்கு இவ மட்டும் இல்ல இவளோட சேர்த்து இவ அத்தை பையன் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு.. விருப்பமிலாமயா நிச்சயத்துக்கு சம்மதிச்சிருப்பா?. . . எனக்காக ஒன்னு செய்றியா? மீனாவ கூட்டிட்டுவா. . . நான் அவ கிட்ட பேசனும்... நான் சொல்றேனோ சொல்லலையோ... அது வேற விஷயம்... அவ என்னை லவ் பன்னிணாளா..? எதுக்காக இப்படி திடீர்னு நிச்சயம் பண்ண சம்மதிச்சான்னு தெரியனும்..
தெரிஞ்சி...? தெரிஞ்சி என்னடா பண்ணப்போற? தும்ப விட்டுட்டு வால பிடிக்கற.. சரி.. நான் போயி மீனாவ வர சொல்றேன்.. திஸ் சிகார் மஸ்ட் பி த லாஸ்ட் ஒன் ஷிவா.. ஒடம்ப கெடுத்துக்காத. . .
--------------------------------------------------
சுமி ஜன்னல் வழியா பாரு . . . இதோட மூனு பாக்கெட் புடிச்சி தீர்த்துட்டான்.. போடி போயி சொல்லு... இப்பவாவது சொல்லித் தொலை.. நீ அவனை லவ் பன்றத
புரிஞ்சுதான் பேசறியா மீனா.. அவன் எனக்காகத்தான் சிகரெட் பிடிச்சு தள்றான்னு என்னை இமேஜின் பண்ணிக்கச் சொல்றியா..? இமேஜின் பண்ணி . . இமேஜின் பண்ணி நான் எமாந்தது போதும்.. நான் போய் சொல்லமாட்டேன்.. நாங்க சேரனும்னு இருந்தா... இன்னைக்கு ஈவ்னிங்குள்ள அவன் வந்து கண்டிப்பா சொல்லுவான்
--------------------------------------------------
யாற்றா அவன் கார்ல வந்து சுமியையும் மீனாவையும் அழைசிட்டு போறான்? சுமி ஏன் அழறா?
சுமியோட அப்பாக்கு மேசிவ் அட்டாக், மலர்ல சேர்த்திருக்காங்க.. அவன் தான் அவளுக்குன்னு நிச்சயம் பண்ண அத்தை பையன்
சரி.. வண்டி எடு ... நாம மலருக்கு போறோம்
--------------------------------------------------
இந்த மூணு நாள் நாயா அலைஞ்சியே... நடுவிலே எப்பவாவது சொன்னியா ஷிவா?
எங்கடா... அவ அழுதுகிட்டே இருக்காடா..? அவ அத்தை பையன் வேற.. கூடவே நிக்கறான்... “ நான் இருக்கும் போது நீ என்ன இங்க “ ந்ன்ற மாதிரி பாக்கறான். . .இப்ப போயி நான் எப்டி..?
இன்னைக்கு சுமிய கூப்பிட்டு சொல்லிடு
இன்னைக்கா..? இன்னைக்குத்தான் ஐ.சீ.யூ ல இருந்து அவங்க அப்பா வெளியில வந்திருக்காரு..
சொல்லித் தொலைடா முண்டம்.... சொல்லித் தொலை.
--------------------------------------------------
நான் இவ்ளோ அழறேனே . . . எதாவது வந்து பேசுறியா... மக்கு மாதிரி வெளியிலேயே நில்லு.. என்னமோ எங்களுக்கு வேல செய்யவே வந்த மாதிரி ஓடி ஓடி போயிடுடா.. பக்கத்துல வந்து நான் இருக்கேன் சுமி.. கவலப்படாதேன்னு ஒரு வார்த்த .. ஒரே ஒரு வார்த்த சொல்லு ஷிவா..
மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
--------------------------------------------------
என்னடா ஷிவா? இன்னைக்குத்தான் ஜெனரல் வார்டுக்கு வந்தாரு.. இப்ப திரும்பவும் ஐ.சீ.யூக்கு மாத்தி இருக்காங்க.. சுமி மட்டும் உள்ள இருக்கா?
காலைலயே திரும்பவும் சம் ப்ராப்ளம்.. ஐ.சீ.யூக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.. சுமியோட பேசியே ஆகனும்னு அவள உள்ள அழைச்சுக்கிட்டாரு அவ அப்பா..ஐயோ . . . அவ கைய பிடிச்சுகிட்டு அவர் எதோ கேக்கறாரு... சுமியும் தலைய ஆட்டி ஆட்டி அவர் கைல ப்ராமிஸ் பன்றாடா..
வேறென்ன நம்ம குல கௌரவத்தை காப்பாத்து.. கல்யாணத்துக்கு அப்பா இருப்பேனோ இல்லையோ தான்... அவ்ளோதான்டா... உனக்கு இருந்த கடைசீ சான்சும் முடிஞ்சுது... மாங்கா டா நீ.. சொல்லு சொல்லுன்னு தலபாடா அடிச்சிகிட்டேன்... முண்டம் மாதிரி நின்ன .. இப்ப பாரு.. அவ ப்ராமிஸ்லாம் பண்றா.
இப்ப என்னடா பண்றது...?
--------------------------------------------------
ஷிவா நீ ஏன்டா இப்டி இருக்க..? பேச முடியாத வலியிலேயும் என் கைய பிடிச்சிகிட்டு “ யார் மேலயாவது ஆசை இருந்தா அப்பாகிட்ட சொல்லிடுடா.. உன் கல்யாணத்துக்கு அப்பா இருப்பேனோ என்னவோ.. உன் மனசில யாராவது இருந்தா அப்பா கிட்ட சொல்லு. .. உன் அம்மா இதெல்லாம் கேப்பாளோ மாட்டாளோ.. நான் இருக்கும் போதே.. உன்னை உன் மனசுக்கு பிடிச்சவன் கையில பிடிச்சி கொடுத்திட்டா.. நான் நிம்மதியா கண்ண மூடுவேன்” ந்னு அப்பா கேக்கும் போது துணிஞ்சு, தைரியமா என்னால உன்னப்பத்தி சொல்ல முடியல.. உன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை வராம நான் எப்படி.. நான் எப்படி அப்பா கிட்ட..? அதனாலேயே நான் “ அதெல்லாம் ஒன்னுமில்லப்பா.. அதெல்லாம் ஒன்னுமில்லப்பா” ந்னு அழுத்தி அழுத்தி சொல்லிட்டு வந்தேன்.
உன்னை நான் பார்த்திருக்கவே கூடாதுடா.. பார்த்தாலும் உன்னை விரும்பி இருக்க கூடாது.. உன்னை விரும்பினாலும்.. நீயும் என்னை லவ் பண்றேன்னு நினைச்சு ஏமாந்திருக்க கூடாது.. என்னை சாகடிக்கிறியே ஷிவா.. ஆனா நானா வந்து உன்கிட்ட எப்படி... எப்படி சொல்வேன் ஷிவா.. நெவர்.. சொல்ல மாட்டேன்.. சொல்ல முடியாதுடா என்னால..
மனதிற்குள் பேசிக் கொண்டாள்... வெளியில் அழுதாள்
--------------------------------------------------
அவங்க அப்பா இருந்தாலாவது. . . அவர் கிட்ட நான் போயி பேசி எதாவது பண்ணலாம்... அவரும் போயி சேர்ந்துட்டாரே ஷிவா
முடிஞ்சதை பத்தி பேசாத.. நாளைக்கு கிளம்பறேன்... பூனால நம்ம பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டேன்.. போறதுக்கு முன்னாடி எனக்கு அவள பார்க்கணும்.. அவ வீட்டுக்கு என்னோட வற்றியா?
-------------------------------------------------
நீ வீட்டுக்கு வந்தது இதுக்காகவா ஷிவா? பூனா போறேன்னு சொல்றத்துக்காகவா? கடைசீ வரைக்கும் சொல்லவே இல்லியே ஷிவா?...!? நிஜமாவே நீ என்னை லவ் பண்ணலயா? நீ லவ் பண்ற அளவுக்கு நான் இல்லையா? அப்ப ஏன் எனக்கு இவ்ளோ உதவி பண்ண? போ.. போ..பின்னாலேயெ சுமி செத்துட்டான்னு நியூஸ் வரும்.. போ
மனதிற்குள் அழுதாள்
--------------------------------------------------
வீட்ல மாப்ள பாக்கறாங்க. .. பாக்கு வெத்தலை மாத்த போறாங்கன்னு ஒரு வார்த்தை .. ஒரே ஒரு வார்த்தை வந்து சொல்லி இருந்தீன்னா.. அந்த பாக்கு வெத்தலையை எங்க அப்பா அம்மா மாத்தி இருப்பாங்களே? எதுவுமே சொல்லாம நிச்சயத்துக்கு சம்மதிச்சிட்ட இல்ல?
நீ என்னை விரும்பலை சுமி.. விரும்பவே இல்ல.. சும்மா டைம் பாஸ்க்காக என்னோட பழகி இருக்க.. நான் தான் நீ என்னை லவ் பண்றியோன்னு தப்பா நினைச்சுட்டேன்
மனதிற்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------
வீட்ல மாப்ள பாக்கறாங்க . . . அடுத்த மாசம் பாக்கு வெத்தலை மாத்த போறாங்கன்னு நியூஸ் பரப்பியும்.. அவன் வந்து அவனோட லவ்வ சொல்லலைன்னா.. அவன் உன்னை நிஜமாவே லவ் பண்ணல சுமி... அவனையே நினைச்சு அழாதே சுமி...
இப்ப புரிஞ்சிதா.. என்னை போயி சொல்லு சொல்லுன்னு சொன்னியே.. நானா போயி சொல்லி.. அதுக்கு அவன் .. சே சே.. நான் உங்க கூட ப்ரென்ட்லியாத்தான் பழகினேன்.. லவ்வெல்லம் எதுவும் இல்லைன்னு சொல்லி இருப்பான். . . அதை விட பெரிய அவமானம் எதுவும் இல்ல மீனா.. எதுவும் இல்ல
அவனையே நினைச்சு அழாதடா.. அழுது என்ன ஆகப் போகுது? உங்க அம்மா ஆசைப்படி உன் அத்தைப் பையனையே கல்யாணம் பண்ணிக்க.. அதுதான் உனக்கும் நல்லது.. உங்க பேமிலிக்கும் நல்லது சுமி
ப்ச்.. என் உயிரே என்கிட்ட இல்ல மீனா..
மனதிற்குள் அழுதாள்
--------------------------------------------------
அண்ணா .. வற்ற வாரமே வந்து பாக்கு வெத்தலை மாத்திரு.. இவ அவங்க அப்பா போனதிலேர்ந்து தெம்பாவே இல்லை.. எனக்கு பயமா இருக்கு.. நீ முதல்ல வந்து சேரு. . ..
போனில் அழுதாள் சுமியின் அம்மா
--------------------------------------------------
அடர்ந்த காரிருளில் ஒரு புள்ளியாய் கரைந்து போனது பூனா நோக்கிச் செல்லும் அந்த ரயில்... அந்த இருளிலேயே இரு புள்ளிகளாய் கரைந்து போயின அவ்விருவரின் இதயங்களும் அவற்றின் உயிர்ப்பும்.
Sunday, May 22, 2005
பின் குறிப்பு
(சாரீ... இப்போ இது முன் குறிப்பு)
எனது தேடல் - 1 க்கு பின்னூட்டமிட்டுள்ள கடைசீ இரு வாசக ஜாம்பவான்களுக்கு எழுதிக் கொள்வது. . .
(துளசி மேம் நீங்க இல்ல, உங்களுக்கு அடுத்து பின்னூட்டமிட்ட அந்த இரண்டு பேர்)
(தேடல் - 2 க்கு உங்கள் பின்னூட்டத்தை எதிர் பார்க்கிறேன்)
ஜாம்பவான்களே. . .
இயக்குனர் திரு. வசந்த் அவர்கள் தனது பாடல் காட்சிகளை செதுக்கி வடிப்பதைப் போல, நீங்களிருவரும், உங்களது பின்னூட்டத்தை செதுக்கி இருந்தீர்கள்.
கருத்தாழமிக்க சொற்களாலும், வடிவான வாக்கியங்களாலும் தங்களது விமர்சனத்தை ஒரு கவிதையை போல வடித்திருந்தீர்கள்.
தங்களது பின்னூட்டத்தில் இருந்து தாங்கள் இருவரும் எனது தேடல் - 1 கதையை ஒரு வரி விடாமல், கூர்ந்து கவனம் செலுத்தி படித்திருக்கிறீர்கள் என்பதை நான் புரிந்துக் கொண்டேன். தங்களது விமர்சனம் என்னை மேன்மேலும் சிறப்பாக எழுத வைக்கிறது.
நிற்க. . .
இச்சூழலில், தாங்கள் இருவருக்கும் இவ்வெளிய எழுத்தாளினியின் வேண்டுகோள் என்னவெனில். ..
புலம்பிக் கொண்டோ. .. அழுது..மூக்கை சிந்தி வேஷ்ட்டியில் துடைத்துக்கொண்டோ.. எனது பதிவுகளுக்குப் பின்னூட்டமிடவென்டுமென்ற அரசாணை ஏதும் தற்போது தமிழ் நாட்டில் இல்லை...
எனவே ...
எனது பதிவுகளைப் படித்த பிறகு.. உயிரோடிருந்தாலே போதுமானது.
(மவன்களே... யாரு கிட்ட. . . மெட்ராஸ் பொன்னு நானு... வந்தன்னா அவ்ளோதான்.. ஒருத்தர் வேளச்சேரி.... ஒருத்தர் பொள்ளாச்சியா? உங்ள அடிக்றத்துகாவ வேண்டி அவ்ளோ தூரம் வர முடியாது.. அதால பொழச்சீங்க. . பதிவுகளை படிச்சமா. . . பொழப்ப பார்த்தமான்னு இருக்கோணும். . . கரீட்டா? .ம்.. அந்த பயம் இருக்கட்டும்)
(சாரீ... இப்போ இது முன் குறிப்பு)
எனது தேடல் - 1 க்கு பின்னூட்டமிட்டுள்ள கடைசீ இரு வாசக ஜாம்பவான்களுக்கு எழுதிக் கொள்வது. . .
(துளசி மேம் நீங்க இல்ல, உங்களுக்கு அடுத்து பின்னூட்டமிட்ட அந்த இரண்டு பேர்)
(தேடல் - 2 க்கு உங்கள் பின்னூட்டத்தை எதிர் பார்க்கிறேன்)
ஜாம்பவான்களே. . .
இயக்குனர் திரு. வசந்த் அவர்கள் தனது பாடல் காட்சிகளை செதுக்கி வடிப்பதைப் போல, நீங்களிருவரும், உங்களது பின்னூட்டத்தை செதுக்கி இருந்தீர்கள்.
கருத்தாழமிக்க சொற்களாலும், வடிவான வாக்கியங்களாலும் தங்களது விமர்சனத்தை ஒரு கவிதையை போல வடித்திருந்தீர்கள்.
தங்களது பின்னூட்டத்தில் இருந்து தாங்கள் இருவரும் எனது தேடல் - 1 கதையை ஒரு வரி விடாமல், கூர்ந்து கவனம் செலுத்தி படித்திருக்கிறீர்கள் என்பதை நான் புரிந்துக் கொண்டேன். தங்களது விமர்சனம் என்னை மேன்மேலும் சிறப்பாக எழுத வைக்கிறது.
நிற்க. . .
இச்சூழலில், தாங்கள் இருவருக்கும் இவ்வெளிய எழுத்தாளினியின் வேண்டுகோள் என்னவெனில். ..
புலம்பிக் கொண்டோ. .. அழுது..மூக்கை சிந்தி வேஷ்ட்டியில் துடைத்துக்கொண்டோ.. எனது பதிவுகளுக்குப் பின்னூட்டமிடவென்டுமென்ற அரசாணை ஏதும் தற்போது தமிழ் நாட்டில் இல்லை...
எனவே ...
எனது பதிவுகளைப் படித்த பிறகு.. உயிரோடிருந்தாலே போதுமானது.
(மவன்களே... யாரு கிட்ட. . . மெட்ராஸ் பொன்னு நானு... வந்தன்னா அவ்ளோதான்.. ஒருத்தர் வேளச்சேரி.... ஒருத்தர் பொள்ளாச்சியா? உங்ள அடிக்றத்துகாவ வேண்டி அவ்ளோ தூரம் வர முடியாது.. அதால பொழச்சீங்க. . பதிவுகளை படிச்சமா. . . பொழப்ப பார்த்தமான்னு இருக்கோணும். . . கரீட்டா? .ம்.. அந்த பயம் இருக்கட்டும்)
தேடல் - 2
தேடல் - 2
“ நீ வீட்டுக்கு வா.. இன்னைக்கு இருக்கு பஞ்சாயத்து ” - என்றான் தம்பி.
அவன் வருந்துவதிலும் ஒரு வாஸ்தவம் இருக்கத்தான் செய்தது. ஸ்ட்ரீட் க்ரிக்கெட்டில் ஸிக்சர்லாம் அடிச்சி ஒழுங்கா சீன் காட்டிட்டு இருந்தான். நான் தான் “ இப்போ வரப்போறியா. . . இல்ல. . . சுமி மேட்டரை வீட்ல சொல்லட்டா” என்று மிரட்டி அழைத்து வந்தேன்.
(அது என்ன. . . சுமி மேட்டெர்? என்று நீங்க கேட்டா . . . விரைவில் வெளியாகும் என்னோட அடுத்த நாவலில் காண்க அப்டீன்னு பதில் சொல்லும் படியா ஆயிடும்)
( நாவலா ஆஆஆஆன்னு நீங்க மயங்கி விழுந்தாலும். . . கண்டிப்பாக நாவல் எழுதப்படும்)
“ இன்னா...! வந்டீங்க ” என்றார் இடுப்பில் கை வைத்த ஆட்டோ காரர்
“ அங்க போனோம். இங்க அனுப்னாங்க” என்றோம்
அதற்க்குள் “ இன்னா மேட்டரு” என்றபடி ஓர் கட்டிளம் ஆட்டோ காரர் வந்தார். டெரி காட்டன் காக்கி ஷர்ட் போட்டிருந்தார். பேக் கோம்பிங் செய்து, நீல நிற கர்சீப்பை காலருக்கு பின்னாடி மடித்து வைத்து ஒரு மார்க்கமாக இருந்தார்.
காக்கி ஷர்ட்டையும், காலர் கர்சீப்பையும் கழட்டி கடாசிவிட்டு க்ரீம் கலர் டீ ஷர்ட்டும். ஜீன்சும் போட்டால் விஜய் பக்கத்தில் குரூப் சாங்கில் ஆடக்கூடிய கெட்டபில் இருந்தார்.
“இவன்ட்ட சொல்லு” என்பதைப்போல என் தம்பியைப் பார்த்தார் இடுப்பில் கை வைத்த ஆட்டோ காரர்.
சொன்னான்.. அனைத்தையும் சொன்னான்
( இவ்வாறு சொல்லி சொல்லி நொந்து நூடுல்ஸ் ஆனாலும். . . அவனது முகக்களயை சிறிதும் இழக்கவில்லை என் தம்பி)
“ அட...! அது இந்த தெரு கட்சீல இருக்குதுங்க” என்றார் கட்டிளம் ஆட்டோகாரர்.
திடுக்கிட்டு “எதுடா” என்றார் இடுப்பில் கை வைத்த ஆட்டோகாரர். எனக்கு தெரியாம. . .! எப்போ? என்பதைப்போல முகத்தை வைத்துக்கொண்டார்
“அதான் தல. . . சௌகார் ஜானகி மாறி புல் கை ஜாக்கெட்லாம் போட்டுகிட்டு பூஜ பண்றாங்களே அந்த மடம் ” என்றார் கட்டிளம்
“அது நாலு தெரு தள்ளி டீக்கடை பக்கத்துல இல்ல இருந்துச்சி” என்றார் தல.
“இப்ப மாத்திட்டாங்க” என்றார் கட்டிளம்.
“இதெல்லாம் சொல்றதில்லியா? என்பதைப் போல முகபாவத்தை மாற்றி எங்களைப் பார்த்து
“ நேரா போங்க” என்றார் தல.
போனோம், நேரா போனோம்
நிலா முற்றம் வைத்துக் கட்டிய பழைய காலத்து பங்களா. தென்றல் தேகத்தை வருடி நின்றது. மஞ்சள் நிறக் கொடியில் அன்னப் பறவை - ஓ. . . இதுதான் அவர்கள் சின்னம்.
“வாங்க வாங்க”-என்று வரவேற்றனர் இரு பெண்மனிகள். . .
“ இங்க சாந்த சக்த்தி சங்கம்னு. . . .
இதுதான் இதுதான் - யார் அனுப்ச்சாங்க?
சரஸ்வதின்னு மடிப்பாக்கத்தில இருக்காங்களே அவங்க அனுப்ச்சாங்க.
ஓ. . .ஒல்லியா இருப்பாங்களே அவங்களா?
ஆமா. . .
(மடிப்பாக்கத்தில் ஒல்லியாக ஒரேஏஏஏஏ ஒரு சரஸ்வதி தான் இருப்பாங்களான்னு மட்டும் என்னை கேட்டுராதீங்க. . . ஏன்னா லாஜிக் எதிர்பார்க்காதீங்க ப்ளீஸ். . . லாஜிக்கோடத்தான் கதை எழுதனும்னா.. . ஒரு கதை கூட என்னால எழுத முடியாது. . . அப்புறம் மிகச்சிறந்த எழுத்தாளினியை இழந்து சோகமாயிடுவீங்க.)
"செப்பல்சை கழட்டிட்டு உள்ள வாங்க. . ."- என்றார் சின்ன பென்மணி
ஸ்ருதி, ஸ்ரேயா கம் இயர். அரேஞ் இட் - என்றார் பெரிய பென்மணி.
(ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை ஆங்கிலம்...!)
ஸ்ருதி, ஸ்ரேயா என்றதுமே என் தம்பியிடம் இருந்து அவசரமான உயிர் துடிப்பொன்றை உணர்ந்தேன் நான். தலை முடியை விரல்களாலேயே பேக் கோம்பிங் செய்தான், நேற்றைய கர்சீப்பால் முகத்தை அழு ழு ழு த்தி துடைத்தான். அழகாகி விட்டதாக நினைத்து ..... ஸ்டைலாக நின்றான்.
வாவ். . .! உள்ளிருந்து இரு மின்னல்கள். . . நூடுல்ஸ் ஸ்ட்ராப் வைத்த க்கிப் சீ டாப்ஸ் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்த இரு தேவதைகள். . . ஆகா. . . என்ன அழகு. .! என்ன களை ...! என்னை கவர்ந்துவிட்டார்கள் அவர்கள்.
அவர்கள் இருவரும் என் தம்பியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் என் தம்பி உருகிப்போய் நின்றான். கண்கள் மின்ன தயங்கி தயங்கி ஒருத்தியின் அருகில் சென்று தைரியமாக அவளின் கன்னங்களைத் தொட்டான். . . அவள் சிணுங்கினாள்.
( நினைச்சேன். . . ஆன்மீகம்ன்றாங்க. . மடம்ன்றாங்க இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்னு நீங்க நினைக்கறது எனக்குத் தெரியும். . நினைக்கறதை நிறுத்திட்டு அடுத்த வரியை படிங்க.. . )
ஆன்மீகம் என்பது ஆத்மாக்களின் சங்கமம், ஆத்மாவில் ஆண் பெண் பாகுபாடு கிடையாது. . . ஆனால் அந்த ஆத்மாக்கள் ஆண் பெண் உடல்களில் பிறப்பதால் நாம் அவற்றை வேறு
படுத்தி பார்க்கிறோம். . . ஆசையை அடக்க நினைக்காதே. . . .அது உன்னை அடக்கிவிடும். . ஆசையை அடைந்து விடு அது அடங்கி விடும் - இது தானே ஓஷோவின் தத்துவம் ? ( யாருக்கு தெரியும். . . சும்மா. .. ஜுஜூபி..)
ஒருத்தி கன்னத்தை தொட்டது போதாது என்று. . இன்னொருத்தி பக்கத்தில் சென்றான் என் தம்பி. . . விட்டால் முத்தம் கொடுத்து விடுவான் போல இருந்தது. . அப்படி அவன் செய்திருந்தாலும் அங்கு ஆட்சேபிக்க யாரும் இல்லை. . .
(ஓவரா பண்ணாத ப்ரியா, கம் டு தி பாயின்ட் - ந்னு சொல்றீங்களா? அப்ப சரி..)
வேற ஒன்னுமில்லீங்க. . .ஸ்ருதி, ஸ்ரேயா ரெண்டு பேருக்குமே சேர்த்து மொத்தம் எட்டரை வயசு இருக்கலாம்.
ஆனால் அடுத்ததாக அந்த பெரிய பெண்மணியின் கட்டளயின் படி ஸ்ருதி, ஸ்ரேயா செய்த செய்கைகள் என்னையும் என் தம்பியையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
வலப்புரமாக நாங்கள் கழட்டி விட்ட செருப்புகளை தூக்கிச் சென்று இடப்பக்கம் ஏற்கெனவே உள்ள செருப்பு வரிசையில் அடுக்கினர்.. மற்ற செருப்புகளையும் இடைவெளி இல்லாமல் அடுக்கத் துவங்கினர்
தூக்கி வாரிப் போட்டது எனக்கு. . . வேண்டாம் ஸ்ருதி. . . இரு...இரு.. நாங்களே அங்க வைக்கிறோம். . .டோண்ட் டச். . . என்று சொல்லி முடிப்பதற்குள் அடுக்கி முடித்திருந்தனர்
கோபமாக வந்தது எனக்கு.
" குழந்தைங்களைப் போய். . . செப்பல்சை அடுக்கச் சொல்லி. . இட் இஸ் நாட் ஐஜீனிக் மேம் "- என்றேன் நான்
" நோ...ஆன்மீகத்தின் முதல்படியே பணிவுதான். . அதைத்தான் இங்க சொல்லித்தறோம்" என்றார் கர்வப் புன்னகையுடன்.
பணிவா. . .! கண்ட செருப்புகளை அடுக்கி வைக்கறது தான் பணிவா? அதுவும் தெய்வதம் தங்கும் குழந்தைகளைப் போய். .! அழுகை வரும் போல இருந்தது.
எனக்கு அந்த இடமே பிடிக்காமல் போய் விட்டது. உடனே திரும்பி வீட்டுக்கு போய் விட வேண்டும் என்று இருந்தது.
"உள்ள வாங்க, க்ளாஸ் அட்டென்ட் பண்ணுங்க. . .கோடீயில ஒருத்தரைத்தான் அவர் தனது பிள்ளையா செலக்ட் பன்றார்" – என்றபடி உள்ளே சென்றார் அந்த அம்மாள்.
உள்ளே சென்றோம்.
ஆனால் ...எந்த தெய்வமும் அங்கே வசிக்கவில்லை.
எந்த தெய்வதமும் என்னால் அங்கு உணரப்படவில்லை.
------------------------
தொடரும். . .
--------------
“ நீ வீட்டுக்கு வா.. இன்னைக்கு இருக்கு பஞ்சாயத்து ” - என்றான் தம்பி.
அவன் வருந்துவதிலும் ஒரு வாஸ்தவம் இருக்கத்தான் செய்தது. ஸ்ட்ரீட் க்ரிக்கெட்டில் ஸிக்சர்லாம் அடிச்சி ஒழுங்கா சீன் காட்டிட்டு இருந்தான். நான் தான் “ இப்போ வரப்போறியா. . . இல்ல. . . சுமி மேட்டரை வீட்ல சொல்லட்டா” என்று மிரட்டி அழைத்து வந்தேன்.
(அது என்ன. . . சுமி மேட்டெர்? என்று நீங்க கேட்டா . . . விரைவில் வெளியாகும் என்னோட அடுத்த நாவலில் காண்க அப்டீன்னு பதில் சொல்லும் படியா ஆயிடும்)
( நாவலா ஆஆஆஆன்னு நீங்க மயங்கி விழுந்தாலும். . . கண்டிப்பாக நாவல் எழுதப்படும்)
“ இன்னா...! வந்டீங்க ” என்றார் இடுப்பில் கை வைத்த ஆட்டோ காரர்
“ அங்க போனோம். இங்க அனுப்னாங்க” என்றோம்
அதற்க்குள் “ இன்னா மேட்டரு” என்றபடி ஓர் கட்டிளம் ஆட்டோ காரர் வந்தார். டெரி காட்டன் காக்கி ஷர்ட் போட்டிருந்தார். பேக் கோம்பிங் செய்து, நீல நிற கர்சீப்பை காலருக்கு பின்னாடி மடித்து வைத்து ஒரு மார்க்கமாக இருந்தார்.
காக்கி ஷர்ட்டையும், காலர் கர்சீப்பையும் கழட்டி கடாசிவிட்டு க்ரீம் கலர் டீ ஷர்ட்டும். ஜீன்சும் போட்டால் விஜய் பக்கத்தில் குரூப் சாங்கில் ஆடக்கூடிய கெட்டபில் இருந்தார்.
“இவன்ட்ட சொல்லு” என்பதைப்போல என் தம்பியைப் பார்த்தார் இடுப்பில் கை வைத்த ஆட்டோ காரர்.
சொன்னான்.. அனைத்தையும் சொன்னான்
( இவ்வாறு சொல்லி சொல்லி நொந்து நூடுல்ஸ் ஆனாலும். . . அவனது முகக்களயை சிறிதும் இழக்கவில்லை என் தம்பி)
“ அட...! அது இந்த தெரு கட்சீல இருக்குதுங்க” என்றார் கட்டிளம் ஆட்டோகாரர்.
திடுக்கிட்டு “எதுடா” என்றார் இடுப்பில் கை வைத்த ஆட்டோகாரர். எனக்கு தெரியாம. . .! எப்போ? என்பதைப்போல முகத்தை வைத்துக்கொண்டார்
“அதான் தல. . . சௌகார் ஜானகி மாறி புல் கை ஜாக்கெட்லாம் போட்டுகிட்டு பூஜ பண்றாங்களே அந்த மடம் ” என்றார் கட்டிளம்
“அது நாலு தெரு தள்ளி டீக்கடை பக்கத்துல இல்ல இருந்துச்சி” என்றார் தல.
“இப்ப மாத்திட்டாங்க” என்றார் கட்டிளம்.
“இதெல்லாம் சொல்றதில்லியா? என்பதைப் போல முகபாவத்தை மாற்றி எங்களைப் பார்த்து
“ நேரா போங்க” என்றார் தல.
போனோம், நேரா போனோம்
நிலா முற்றம் வைத்துக் கட்டிய பழைய காலத்து பங்களா. தென்றல் தேகத்தை வருடி நின்றது. மஞ்சள் நிறக் கொடியில் அன்னப் பறவை - ஓ. . . இதுதான் அவர்கள் சின்னம்.
“வாங்க வாங்க”-என்று வரவேற்றனர் இரு பெண்மனிகள். . .
“ இங்க சாந்த சக்த்தி சங்கம்னு. . . .
இதுதான் இதுதான் - யார் அனுப்ச்சாங்க?
சரஸ்வதின்னு மடிப்பாக்கத்தில இருக்காங்களே அவங்க அனுப்ச்சாங்க.
ஓ. . .ஒல்லியா இருப்பாங்களே அவங்களா?
ஆமா. . .
(மடிப்பாக்கத்தில் ஒல்லியாக ஒரேஏஏஏஏ ஒரு சரஸ்வதி தான் இருப்பாங்களான்னு மட்டும் என்னை கேட்டுராதீங்க. . . ஏன்னா லாஜிக் எதிர்பார்க்காதீங்க ப்ளீஸ். . . லாஜிக்கோடத்தான் கதை எழுதனும்னா.. . ஒரு கதை கூட என்னால எழுத முடியாது. . . அப்புறம் மிகச்சிறந்த எழுத்தாளினியை இழந்து சோகமாயிடுவீங்க.)
"செப்பல்சை கழட்டிட்டு உள்ள வாங்க. . ."- என்றார் சின்ன பென்மணி
ஸ்ருதி, ஸ்ரேயா கம் இயர். அரேஞ் இட் - என்றார் பெரிய பென்மணி.
(ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை ஆங்கிலம்...!)
ஸ்ருதி, ஸ்ரேயா என்றதுமே என் தம்பியிடம் இருந்து அவசரமான உயிர் துடிப்பொன்றை உணர்ந்தேன் நான். தலை முடியை விரல்களாலேயே பேக் கோம்பிங் செய்தான், நேற்றைய கர்சீப்பால் முகத்தை அழு ழு ழு த்தி துடைத்தான். அழகாகி விட்டதாக நினைத்து ..... ஸ்டைலாக நின்றான்.
வாவ். . .! உள்ளிருந்து இரு மின்னல்கள். . . நூடுல்ஸ் ஸ்ட்ராப் வைத்த க்கிப் சீ டாப்ஸ் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்த இரு தேவதைகள். . . ஆகா. . . என்ன அழகு. .! என்ன களை ...! என்னை கவர்ந்துவிட்டார்கள் அவர்கள்.
அவர்கள் இருவரும் என் தம்பியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் என் தம்பி உருகிப்போய் நின்றான். கண்கள் மின்ன தயங்கி தயங்கி ஒருத்தியின் அருகில் சென்று தைரியமாக அவளின் கன்னங்களைத் தொட்டான். . . அவள் சிணுங்கினாள்.
( நினைச்சேன். . . ஆன்மீகம்ன்றாங்க. . மடம்ன்றாங்க இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்னு நீங்க நினைக்கறது எனக்குத் தெரியும். . நினைக்கறதை நிறுத்திட்டு அடுத்த வரியை படிங்க.. . )
ஆன்மீகம் என்பது ஆத்மாக்களின் சங்கமம், ஆத்மாவில் ஆண் பெண் பாகுபாடு கிடையாது. . . ஆனால் அந்த ஆத்மாக்கள் ஆண் பெண் உடல்களில் பிறப்பதால் நாம் அவற்றை வேறு
படுத்தி பார்க்கிறோம். . . ஆசையை அடக்க நினைக்காதே. . . .அது உன்னை அடக்கிவிடும். . ஆசையை அடைந்து விடு அது அடங்கி விடும் - இது தானே ஓஷோவின் தத்துவம் ? ( யாருக்கு தெரியும். . . சும்மா. .. ஜுஜூபி..)
ஒருத்தி கன்னத்தை தொட்டது போதாது என்று. . இன்னொருத்தி பக்கத்தில் சென்றான் என் தம்பி. . . விட்டால் முத்தம் கொடுத்து விடுவான் போல இருந்தது. . அப்படி அவன் செய்திருந்தாலும் அங்கு ஆட்சேபிக்க யாரும் இல்லை. . .
(ஓவரா பண்ணாத ப்ரியா, கம் டு தி பாயின்ட் - ந்னு சொல்றீங்களா? அப்ப சரி..)
வேற ஒன்னுமில்லீங்க. . .ஸ்ருதி, ஸ்ரேயா ரெண்டு பேருக்குமே சேர்த்து மொத்தம் எட்டரை வயசு இருக்கலாம்.
ஆனால் அடுத்ததாக அந்த பெரிய பெண்மணியின் கட்டளயின் படி ஸ்ருதி, ஸ்ரேயா செய்த செய்கைகள் என்னையும் என் தம்பியையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
வலப்புரமாக நாங்கள் கழட்டி விட்ட செருப்புகளை தூக்கிச் சென்று இடப்பக்கம் ஏற்கெனவே உள்ள செருப்பு வரிசையில் அடுக்கினர்.. மற்ற செருப்புகளையும் இடைவெளி இல்லாமல் அடுக்கத் துவங்கினர்
தூக்கி வாரிப் போட்டது எனக்கு. . . வேண்டாம் ஸ்ருதி. . . இரு...இரு.. நாங்களே அங்க வைக்கிறோம். . .டோண்ட் டச். . . என்று சொல்லி முடிப்பதற்குள் அடுக்கி முடித்திருந்தனர்
கோபமாக வந்தது எனக்கு.
" குழந்தைங்களைப் போய். . . செப்பல்சை அடுக்கச் சொல்லி. . இட் இஸ் நாட் ஐஜீனிக் மேம் "- என்றேன் நான்
" நோ...ஆன்மீகத்தின் முதல்படியே பணிவுதான். . அதைத்தான் இங்க சொல்லித்தறோம்" என்றார் கர்வப் புன்னகையுடன்.
பணிவா. . .! கண்ட செருப்புகளை அடுக்கி வைக்கறது தான் பணிவா? அதுவும் தெய்வதம் தங்கும் குழந்தைகளைப் போய். .! அழுகை வரும் போல இருந்தது.
எனக்கு அந்த இடமே பிடிக்காமல் போய் விட்டது. உடனே திரும்பி வீட்டுக்கு போய் விட வேண்டும் என்று இருந்தது.
"உள்ள வாங்க, க்ளாஸ் அட்டென்ட் பண்ணுங்க. . .கோடீயில ஒருத்தரைத்தான் அவர் தனது பிள்ளையா செலக்ட் பன்றார்" – என்றபடி உள்ளே சென்றார் அந்த அம்மாள்.
உள்ளே சென்றோம்.
ஆனால் ...எந்த தெய்வமும் அங்கே வசிக்கவில்லை.
எந்த தெய்வதமும் என்னால் அங்கு உணரப்படவில்லை.
------------------------
தொடரும். . .
--------------
Monday, May 16, 2005
தேடல் - 1
தேடல் - 1
“ இதுக்கு மேல போகமுடியாது, நிறுத்து “ – என்றான் என் தம்பி. தெரு ஓரக் கோவில் தான் என்றாலும் அவள் அங்கே வசித்திருந்தாள். பாஸ்போர்ட் சைஸ் அம்மன் தான் என்றாலும், மூக்குத்தி எல்லாம் போட்டு , மலர்ந்த கண்களுடன், கடைவாய் புன்னகை கொண்டு அழகாக இருந்தாள்.
இடப்புறம் ஆண்களும், வலப்புறம் பெண்களும் – அட..! இந்த பெண்களும் அழகாத்தான் இருக்காங்க.. இவங்களைப் பார்க்கவே வாரா வரம் வராலாம் போலிருக்கே என்று நினைத்துக்கொன்டேன்.
வழக்கம்போல பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மஞ்சள், குங்குமம் இத்யாதி.. இத்யாதிகளை கடைசீ குட்டி பெண்வரை கொடுத்த பின்பே ஆண்கள் வரிசை என ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது பூசாரிக்கு... அவர் அவ்வளவு தாமதமாக தங்கள் பக்கம் திரும்பியதற்கு ஆண்கள் யாரும் வருந்தவில்லை..வருந்தினாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதும் அவர்களுக்கே தெரியும்.
“அதோ அந்த ஆட்டோ காரரை கேளுடா” – என்றேன் நான்
“இங்க சாந்த சக்தி சங்கம் எங்கன்னு தெரியுமா உங்களுக்கு?” – என்றான் அவரிடம்
“தெரு பேரு தெர்யுமா?” – என்றார் அவர்
“ இல்ல.. ஏதோ கிறிஸ்டியன் நேம்..பேரு கரெக்ட்டா தெரியாது.. தியானம் சொல்லித்தராங்களே அது “ – என்றேன் நான்
“முந்திரிக்கொட்டை” – என்பதைப்போல முறைத்தான் என் தம்பி
தோராயமாக ஏற்கெனவே தூக்கி இருந்த கையை இன்னும் மேலே தூக்கி“ நேரா போயி பஸ்ட் ரைட் திரும்பி, அப்புறம் அதுலயே நாலாவது ரைட் திரும்புங்க” என்றார் ஒரு தீர்மானத்தோடு.
நாம் நமது வாழ் நாளில், யாரிடம் வழி கேட்டாலும்,“ வாங்க சார்.. கரெக்ட்டா வந்திருக்கீங்க.. இதோ எதிர் வீடு தான் நீங்க கேட்ட அட்ரஸ்... இதோ பக்கத்து பில்டிங்தான் நீங்க கேட்ட ஆபீஸ்” என்று யாராவது சொல்லி இருக்காங்களா? கிடையவே கிடையாது.
ஏப்பவும் “ நேரா போயி மூணாவது ரைட். இல்லைன்ன “ ஐயையோ.. ஏரியா தாண்டி வந்துடீங்களே … வந்த வழியே திரும்பி போயீ. . .போயீ... அப்டீயே வீட்டுக்கு போயிடுங்க “ – என்பதைப் போலத்தான் வழி சொல்கிறார்கள்.
இன்னும் ரெண்டு பேரை விசாரிக்கலாமே – என்று நான் நினைத்ததை என் முட்டைக் கண் மொழிகளால் புரிந்துக்கொண்ட ஆட்டோகாரர் “ ம். . கிளம்புங்க” என்பதைப் போல முறைத்தார். நாங்கள் நேரா போயி வலது பக்கம் தான் திரும்புகிறோமா என்பதை வேறு இடுப்பில் கை வைத்தபடி கவனித்ததாக, திரும்பி பார்த்த என் தம்பி சொன்னான்
மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில், அக்காவாகவே இருந்தாலும், அவள் வண்டி ஓட்டி, தம்பி பின்னால் உட்கார்ந்து வந்தால்... அந்த தம்பியின் இமேஜ்..!(?) ஒரு கெத்து.. !(?) என்னாவறது..? நாளை. . . பின்ன.. பிகருங்க மதிக்குமா அவனை?
“ நீ இறங்கி பின்னாடி உக்காரு, நான் ஓட்டறேன் “- என்றான் என் தம்பி. இது நான் எதிர் பார்த்தது தான்.
ஆட்டோகாரர் பார்வையிலிருந்து அகன்று விட்டோம் என்றாலும்கூட, அவர் மீதான மதிப்பு, மரியாதை காரணமாக அவர் சொன்னபடி நாலாவது ரைட் திரும்பினோம்.
டீக்கடைக்கு சற்று தள்ளி இருந்த ஓம் ராஜபாண்டி நடமாடும் இஸ்திரிக்கடை நிறுவனரை கேட்போம் என நாங்களிருவரும் ஒரு மனதே முடிவெடுத்தோம். ஏனெனில் அவர்தான் சாதுவாக தானுன்டு தன் வேலை உண்டு என துணிகளை தேய்த்தபடி இருந்தார்.
“இங்க சாந்த சக்தி சங்கம் எங்க இருக்குன்னு தெரியுமா”? என்றான் என் தம்பி
“லோன் குடுப்பாங்களே அந்த கட்டடமா”? என்றார் அவர்
திரும்பி முறைத்தால் நேரமாகும் என்பதால் திரும்பாமலேயே என்னை முறைத்தான் என் தம்பி. அதெப்படி..? அவன் திரும்பாமலேயே உன்னை முறைத்தான்னு உனக்கு எப்படி தெரியும்..? என்று நீங்கள் கேட்டால்..
எல்லாம் ஒரு சைக்காலஜி தான்.. ரியர் வியூ கண்ணாடி எதுக்கு இருக்கு..?
அது என்ன..? அப்பா. அண்ணன், தம்பி கூட போகும் போது...
அவங்க மட்டும் தான் அட்ரெஸ் விசாரிப்பாங்க.. நாங்க விசாரிக்கவே கூடாது..அது வரைக்கும் கூட நடந்து வந்தாலும், அட்ரெஸ் விசாரிக்கும் போது ரென்டடி பின்னாடி நின்னுடனும்.. வண்டி பின் சீட்ல உக்கார்ந்திருந்தாலும் விளக்கங்கள் எதுவும் தரக்கூடாது...
அவங்களுக்கு புரியாத வழி எங்களுக்குப் புரிஞ்சாலும்
“ புரியலயே. . !!!!!!?
என்பதைப்போல முகத்தை வைத்துக்கொள்ளனும். கஷ்டம்டா சாமீ..!
புள்ளிக்கு வருவோம்... (அதாங்க.. கம் டு த பாயின்ட் தான்...)
“தெர்லீங்க” என்றார் ஓம் ராஜபாண்டி நடமாடும் இஸ்திரி நிலைய நிறுவனர்.
அதற்குள் மூன்று , நான்கு பேர் எங்களை சூழ்ந்தனர்.
“இன்னாப்பா. . . இன்னாது”? என்றார் ஒருவர். இவர் பிளம்பராக இருக்கலாம்.
அது ஏன் ஒருவர் செய்யும் தொழில் அவரது உடல் மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி அவரது ஆளுமையை மாற்றுகிறது ? ( எனக்கே ஒரு மண்ணும் புரியல.. உங்களுக்கு போயி புரியுமா என்ன? கொஞ்சம் ஓவர் தான்..என்ன பண்ணட்டும்..? இப்டி எழுதற எனக்கும் - புரியாம, படிக்கற உங்களுக்கும் - புரியாம ஒரு மையமா எழுதினாத்தான் சாகித்ய அகாடெமி விருது தருவாங்கன்னு என் பிரண்ட் சொன்னா அதான். ஆனா அவசரத்துல இப்படி எழுதிட்டேனா? இப்ப பாருங்க . .. அத வாங்கவேற லீவு போட்டுட்டு போகனும் இங்க இருந்து..ப்ச்)
“இன்னாமோ சக்த்தி சாந்த சபாவாம்" . . . என்றார் ஓம் ரா. பா ந.இஸ். நி. நிறுவனர்
“அடப்பாவிங்களா. . . சொல்லி ரெண்டு நிமிஷம் ஆகல அதுக்குள்ள பேரையே மாத்திட்டீங்களா ? என நினைத்துக் கொண்டேன்.
“சபாவா..? அதெல்லாம் பீச்சாங்கரைப் பக்கம் “-என்றார் அவர்.
” இன்னா எடோம் அது” என்றார் மற்றொருவர். இவர் மேஸ்த்திரியாகத் தான் இருக்க வேண்டும்.
“டேய்.. வீட்டுக்கே போயிடலான்டா” என்றேன் நான்
“இதுக்கு ஒரு முடிவு கட்றேன்” என்பதைப்போல டீ கிளாசை வேகமாய் வைத்துவிட்டு எங்கள் அருகில் வந்தார் டீ குடித்துக் கொண்டிருந்தவர்.. இவர் நிச்சயம் எலெக்ட்ரீஷியனாத்தான் இருக்கணும்.. பால் பாயின்ட் பேனால்லாம் வச்சிருக்காரே.
சொன்னான். . . அனைத்தையும் சொன்னான் என் தம்பி..( தேவையா இது எனக்கு ? மவளே.. வீட்டுக்கு வா. . . அங்க இருக்கு உனக்கு. . . நற.. நற.. நற..”) – என்று அவன் மனதிற்குள் திட்டியது, திவ்யமாக என் மனக்காதுகளில் கேட்டது. (என்னாது..!? மனக் காதுகளா..? என்னா ஓவரா ரீல் சுத்தர..? அப்டீன்னு நீங்க கேட்டா – “ ஏங்க . . மனக் கண்கள் இருக்கும் போது. . மனக் காதுகள் இருக்கக் கூடாதா..?” அப்டீன்னு நான் பதில் சொல்ல வேண்டி வரும்)
"ஓ . . அதுவா. .. சாமி கும்ப்ட்டு. . பொங்கல் தராங்களே அந்த இடமா”? என்றார்
வேகமாய் தலயாட்டினோம் நாங்கள். அப்போதும்.. அவன் மட்டும் தான் தலை ஆட்ட வேண்டும் , நான் வெறுமனே நிற்க வேண்டும் என் தம்பிக்கு. மேல் சாவனிஸம் எதெதில் இருக்கிறது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
அந்த எலக்ட்ரீஷியனும் – “ நேரா போங்க. பஸ்ட் ரைட் கட் பண்ணுங்க.. அங்கேர்ந்து எண்ணி நாலாவது ரைட் போங்க.. அங்க மிடில்ல இருக்கு “ என்றார் என்னையே பார்த்துக்கொன்டு. என்னவோ நான் அவரை "இங்க வாங்க மிஸ்டர்னு " - கூப்பிட்டு கேள்வி கேட்ட மாதிரி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
கேட்டது என் தம்பி, அவன் இருந்ததையே மறந்து விட்டார் போல.
“ பர்ஸ்ட் ரைட், அப்புறம் நாலாவது ரைட்டா”? என்று கேட்டான் தம்பி “ஆமாங்க பர்ஸ்ட் ரைட், அப்புறம் போர்த் ரைட்”? என்றார் என்னிடம் இதற்காகவே வண்டியை வேகமாக கிளப்பினான் தம்பி.
நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பி மீண்டும் நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பினால் இடுப்பில் கை வைத்த அதே ஆட்டோகாரரை சந்திப்போம் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை நாங்கள்.தூக்கி வாரி போட்டது எனக்கு.
“ நான் வர்ல இந்த ஆட்டத்துக்கு” – என்றேன்
-------------
தொடரும். . .
-----------
(இன்னாது. .?! தொடருமா..?! இதோடா. . .? பெரிய பெரிய ஜாம்பவான்க நாங்களே சிறுகதை, சிறு நீள சிறுகதை. . . மிக நீள சிறுகதை தான் எழுதறோம். . . இப்ப வந்த இந்தம்மா தொடர்கதை எழுதுவாங்களாமில்ல. . .? திஸ் ஈஸ் டூ மச்சுன்னு நீங்க நினைச்சாலும். . . சாரீ... தொடரும் தான். .
“தானா வருதுங்க. . . மடை திறந்த வெள்ளம் போல வருது. . . நான் என்ன பண்ணட்டும்? என்னோட மனோ வேகத்துக்கு என்னோட டைப்பிங் வேகம் போதல..”இப்படியெல்லாம் நான் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தா - சாரீ ... நீங்க தேரமாட்டீங்க..
ஏன்னா. .? ஏதோ ஒரு லாஜிக், ஒரு ப்ளாட் இருக்கேன்னு நினைச்சு பந்தாவா ஆரம்பிச்சிட்டேன். . எப்படி முடிக்கறதுன்னு தெரியல. . . அதான். . .தொடரும்னு போட்டுட்டு ஒரு வாரத்துல, அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க நாலு பேரு கிட்ட கேட்டு வாங்கி டெவெலப் பண்ணலாம்னு இருக்கேன். . ஓகே யா? வர்ட்டா. . ஸீ யூ )
“ இதுக்கு மேல போகமுடியாது, நிறுத்து “ – என்றான் என் தம்பி. தெரு ஓரக் கோவில் தான் என்றாலும் அவள் அங்கே வசித்திருந்தாள். பாஸ்போர்ட் சைஸ் அம்மன் தான் என்றாலும், மூக்குத்தி எல்லாம் போட்டு , மலர்ந்த கண்களுடன், கடைவாய் புன்னகை கொண்டு அழகாக இருந்தாள்.
இடப்புறம் ஆண்களும், வலப்புறம் பெண்களும் – அட..! இந்த பெண்களும் அழகாத்தான் இருக்காங்க.. இவங்களைப் பார்க்கவே வாரா வரம் வராலாம் போலிருக்கே என்று நினைத்துக்கொன்டேன்.
வழக்கம்போல பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மஞ்சள், குங்குமம் இத்யாதி.. இத்யாதிகளை கடைசீ குட்டி பெண்வரை கொடுத்த பின்பே ஆண்கள் வரிசை என ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது பூசாரிக்கு... அவர் அவ்வளவு தாமதமாக தங்கள் பக்கம் திரும்பியதற்கு ஆண்கள் யாரும் வருந்தவில்லை..வருந்தினாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதும் அவர்களுக்கே தெரியும்.
“அதோ அந்த ஆட்டோ காரரை கேளுடா” – என்றேன் நான்
“இங்க சாந்த சக்தி சங்கம் எங்கன்னு தெரியுமா உங்களுக்கு?” – என்றான் அவரிடம்
“தெரு பேரு தெர்யுமா?” – என்றார் அவர்
“ இல்ல.. ஏதோ கிறிஸ்டியன் நேம்..பேரு கரெக்ட்டா தெரியாது.. தியானம் சொல்லித்தராங்களே அது “ – என்றேன் நான்
“முந்திரிக்கொட்டை” – என்பதைப்போல முறைத்தான் என் தம்பி
தோராயமாக ஏற்கெனவே தூக்கி இருந்த கையை இன்னும் மேலே தூக்கி“ நேரா போயி பஸ்ட் ரைட் திரும்பி, அப்புறம் அதுலயே நாலாவது ரைட் திரும்புங்க” என்றார் ஒரு தீர்மானத்தோடு.
நாம் நமது வாழ் நாளில், யாரிடம் வழி கேட்டாலும்,“ வாங்க சார்.. கரெக்ட்டா வந்திருக்கீங்க.. இதோ எதிர் வீடு தான் நீங்க கேட்ட அட்ரஸ்... இதோ பக்கத்து பில்டிங்தான் நீங்க கேட்ட ஆபீஸ்” என்று யாராவது சொல்லி இருக்காங்களா? கிடையவே கிடையாது.
ஏப்பவும் “ நேரா போயி மூணாவது ரைட். இல்லைன்ன “ ஐயையோ.. ஏரியா தாண்டி வந்துடீங்களே … வந்த வழியே திரும்பி போயீ. . .போயீ... அப்டீயே வீட்டுக்கு போயிடுங்க “ – என்பதைப் போலத்தான் வழி சொல்கிறார்கள்.
இன்னும் ரெண்டு பேரை விசாரிக்கலாமே – என்று நான் நினைத்ததை என் முட்டைக் கண் மொழிகளால் புரிந்துக்கொண்ட ஆட்டோகாரர் “ ம். . கிளம்புங்க” என்பதைப் போல முறைத்தார். நாங்கள் நேரா போயி வலது பக்கம் தான் திரும்புகிறோமா என்பதை வேறு இடுப்பில் கை வைத்தபடி கவனித்ததாக, திரும்பி பார்த்த என் தம்பி சொன்னான்
மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில், அக்காவாகவே இருந்தாலும், அவள் வண்டி ஓட்டி, தம்பி பின்னால் உட்கார்ந்து வந்தால்... அந்த தம்பியின் இமேஜ்..!(?) ஒரு கெத்து.. !(?) என்னாவறது..? நாளை. . . பின்ன.. பிகருங்க மதிக்குமா அவனை?
“ நீ இறங்கி பின்னாடி உக்காரு, நான் ஓட்டறேன் “- என்றான் என் தம்பி. இது நான் எதிர் பார்த்தது தான்.
ஆட்டோகாரர் பார்வையிலிருந்து அகன்று விட்டோம் என்றாலும்கூட, அவர் மீதான மதிப்பு, மரியாதை காரணமாக அவர் சொன்னபடி நாலாவது ரைட் திரும்பினோம்.
டீக்கடைக்கு சற்று தள்ளி இருந்த ஓம் ராஜபாண்டி நடமாடும் இஸ்திரிக்கடை நிறுவனரை கேட்போம் என நாங்களிருவரும் ஒரு மனதே முடிவெடுத்தோம். ஏனெனில் அவர்தான் சாதுவாக தானுன்டு தன் வேலை உண்டு என துணிகளை தேய்த்தபடி இருந்தார்.
“இங்க சாந்த சக்தி சங்கம் எங்க இருக்குன்னு தெரியுமா”? என்றான் என் தம்பி
“லோன் குடுப்பாங்களே அந்த கட்டடமா”? என்றார் அவர்
திரும்பி முறைத்தால் நேரமாகும் என்பதால் திரும்பாமலேயே என்னை முறைத்தான் என் தம்பி. அதெப்படி..? அவன் திரும்பாமலேயே உன்னை முறைத்தான்னு உனக்கு எப்படி தெரியும்..? என்று நீங்கள் கேட்டால்..
எல்லாம் ஒரு சைக்காலஜி தான்.. ரியர் வியூ கண்ணாடி எதுக்கு இருக்கு..?
அது என்ன..? அப்பா. அண்ணன், தம்பி கூட போகும் போது...
அவங்க மட்டும் தான் அட்ரெஸ் விசாரிப்பாங்க.. நாங்க விசாரிக்கவே கூடாது..அது வரைக்கும் கூட நடந்து வந்தாலும், அட்ரெஸ் விசாரிக்கும் போது ரென்டடி பின்னாடி நின்னுடனும்.. வண்டி பின் சீட்ல உக்கார்ந்திருந்தாலும் விளக்கங்கள் எதுவும் தரக்கூடாது...
அவங்களுக்கு புரியாத வழி எங்களுக்குப் புரிஞ்சாலும்
“ புரியலயே. . !!!!!!?
என்பதைப்போல முகத்தை வைத்துக்கொள்ளனும். கஷ்டம்டா சாமீ..!
புள்ளிக்கு வருவோம்... (அதாங்க.. கம் டு த பாயின்ட் தான்...)
“தெர்லீங்க” என்றார் ஓம் ராஜபாண்டி நடமாடும் இஸ்திரி நிலைய நிறுவனர்.
அதற்குள் மூன்று , நான்கு பேர் எங்களை சூழ்ந்தனர்.
“இன்னாப்பா. . . இன்னாது”? என்றார் ஒருவர். இவர் பிளம்பராக இருக்கலாம்.
அது ஏன் ஒருவர் செய்யும் தொழில் அவரது உடல் மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி அவரது ஆளுமையை மாற்றுகிறது ? ( எனக்கே ஒரு மண்ணும் புரியல.. உங்களுக்கு போயி புரியுமா என்ன? கொஞ்சம் ஓவர் தான்..என்ன பண்ணட்டும்..? இப்டி எழுதற எனக்கும் - புரியாம, படிக்கற உங்களுக்கும் - புரியாம ஒரு மையமா எழுதினாத்தான் சாகித்ய அகாடெமி விருது தருவாங்கன்னு என் பிரண்ட் சொன்னா அதான். ஆனா அவசரத்துல இப்படி எழுதிட்டேனா? இப்ப பாருங்க . .. அத வாங்கவேற லீவு போட்டுட்டு போகனும் இங்க இருந்து..ப்ச்)
“இன்னாமோ சக்த்தி சாந்த சபாவாம்" . . . என்றார் ஓம் ரா. பா ந.இஸ். நி. நிறுவனர்
“அடப்பாவிங்களா. . . சொல்லி ரெண்டு நிமிஷம் ஆகல அதுக்குள்ள பேரையே மாத்திட்டீங்களா ? என நினைத்துக் கொண்டேன்.
“சபாவா..? அதெல்லாம் பீச்சாங்கரைப் பக்கம் “-என்றார் அவர்.
” இன்னா எடோம் அது” என்றார் மற்றொருவர். இவர் மேஸ்த்திரியாகத் தான் இருக்க வேண்டும்.
“டேய்.. வீட்டுக்கே போயிடலான்டா” என்றேன் நான்
“இதுக்கு ஒரு முடிவு கட்றேன்” என்பதைப்போல டீ கிளாசை வேகமாய் வைத்துவிட்டு எங்கள் அருகில் வந்தார் டீ குடித்துக் கொண்டிருந்தவர்.. இவர் நிச்சயம் எலெக்ட்ரீஷியனாத்தான் இருக்கணும்.. பால் பாயின்ட் பேனால்லாம் வச்சிருக்காரே.
சொன்னான். . . அனைத்தையும் சொன்னான் என் தம்பி..( தேவையா இது எனக்கு ? மவளே.. வீட்டுக்கு வா. . . அங்க இருக்கு உனக்கு. . . நற.. நற.. நற..”) – என்று அவன் மனதிற்குள் திட்டியது, திவ்யமாக என் மனக்காதுகளில் கேட்டது. (என்னாது..!? மனக் காதுகளா..? என்னா ஓவரா ரீல் சுத்தர..? அப்டீன்னு நீங்க கேட்டா – “ ஏங்க . . மனக் கண்கள் இருக்கும் போது. . மனக் காதுகள் இருக்கக் கூடாதா..?” அப்டீன்னு நான் பதில் சொல்ல வேண்டி வரும்)
"ஓ . . அதுவா. .. சாமி கும்ப்ட்டு. . பொங்கல் தராங்களே அந்த இடமா”? என்றார்
வேகமாய் தலயாட்டினோம் நாங்கள். அப்போதும்.. அவன் மட்டும் தான் தலை ஆட்ட வேண்டும் , நான் வெறுமனே நிற்க வேண்டும் என் தம்பிக்கு. மேல் சாவனிஸம் எதெதில் இருக்கிறது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
அந்த எலக்ட்ரீஷியனும் – “ நேரா போங்க. பஸ்ட் ரைட் கட் பண்ணுங்க.. அங்கேர்ந்து எண்ணி நாலாவது ரைட் போங்க.. அங்க மிடில்ல இருக்கு “ என்றார் என்னையே பார்த்துக்கொன்டு. என்னவோ நான் அவரை "இங்க வாங்க மிஸ்டர்னு " - கூப்பிட்டு கேள்வி கேட்ட மாதிரி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
கேட்டது என் தம்பி, அவன் இருந்ததையே மறந்து விட்டார் போல.
“ பர்ஸ்ட் ரைட், அப்புறம் நாலாவது ரைட்டா”? என்று கேட்டான் தம்பி “ஆமாங்க பர்ஸ்ட் ரைட், அப்புறம் போர்த் ரைட்”? என்றார் என்னிடம் இதற்காகவே வண்டியை வேகமாக கிளப்பினான் தம்பி.
நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பி மீண்டும் நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பினால் இடுப்பில் கை வைத்த அதே ஆட்டோகாரரை சந்திப்போம் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை நாங்கள்.தூக்கி வாரி போட்டது எனக்கு.
“ நான் வர்ல இந்த ஆட்டத்துக்கு” – என்றேன்
-------------
தொடரும். . .
-----------
(இன்னாது. .?! தொடருமா..?! இதோடா. . .? பெரிய பெரிய ஜாம்பவான்க நாங்களே சிறுகதை, சிறு நீள சிறுகதை. . . மிக நீள சிறுகதை தான் எழுதறோம். . . இப்ப வந்த இந்தம்மா தொடர்கதை எழுதுவாங்களாமில்ல. . .? திஸ் ஈஸ் டூ மச்சுன்னு நீங்க நினைச்சாலும். . . சாரீ... தொடரும் தான். .
“தானா வருதுங்க. . . மடை திறந்த வெள்ளம் போல வருது. . . நான் என்ன பண்ணட்டும்? என்னோட மனோ வேகத்துக்கு என்னோட டைப்பிங் வேகம் போதல..”இப்படியெல்லாம் நான் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தா - சாரீ ... நீங்க தேரமாட்டீங்க..
ஏன்னா. .? ஏதோ ஒரு லாஜிக், ஒரு ப்ளாட் இருக்கேன்னு நினைச்சு பந்தாவா ஆரம்பிச்சிட்டேன். . எப்படி முடிக்கறதுன்னு தெரியல. . . அதான். . .தொடரும்னு போட்டுட்டு ஒரு வாரத்துல, அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க நாலு பேரு கிட்ட கேட்டு வாங்கி டெவெலப் பண்ணலாம்னு இருக்கேன். . ஓகே யா? வர்ட்டா. . ஸீ யூ )
Sunday, May 08, 2005
பயணங்கள் முடிவதில்லை
“ எதுவுமே தேறாதுக்கா “ என்றாள் என் தங்கை
“ அப்படி இல்ல.... ஒன்னு , ரென்டு சுமாரா இருக்கு” – நான்
“எது? அந்த க்ரீம் கலர் ஷர்டை சொல்றியா?.... அவ்ளோ ஒன்னும் நல்லால..“ இருக்கறதுல ....அது தேறுதா? இல்லயா? அத சொல்லு ”
“தேறும்..... ஆனா மாங்கா மாதிரி நிக்குதே?
“அம்மாஞ்ஜியா இருந்தாதான் நல்லது. .... இல்லைன்னா சித்தப்பா சீட்டை மாத்திடுவாரு”
“ஆமாமா.... அம்மாஞ்ஜியாவே இருக்கட்டும்... அதான் நமக்கு நல்லது – ஆனா பார்கபிளா இருக்கு இல்ல”
“ம் ம் ... அது ” – என்றேன் நான்
“அப்டி பார்த்தா..... அந்த ப்ளூ டீ ஷர்ட் கூடத்தான் அழகா இருக்கு... இது ரெண்டும் தான் தேறும் போல” – என்றாள் .
இருபத்தி மூன்று பேர் கொண்ட எங்கள் குடும்ப கும்பலில் அடித்து பின்னி துவைத்து கட்டி ரவுடி ரங்கோலிகளாக ஜன்னல் சீட் பிடித்த நானும் எனது தங்கையும் –--- எங்கள் எதிர் சீட்டில் தூங்கிகொண்டே வரும் ஒரு ஜிப்பாகாரரும், கனகாம்பர கொண்டை போட்டு மூன்றுவட செயின் போட்ட ஒரு குண்டு அம்மவும், அந்தம்மா பக்கத்தில் அமர்ந்து, ஸ்வாரஸ்யம் ஏதும் வரவழைக்காமல் கொய்யா பழம் சாப்பிடும் வேஷ்டி கட்டிய ஒருவரும் எங்கள் சக பயணிகளாக வர வேண்டும் என நாங்கள் விரும்புவோம் என நீங்கள் நினைத்தால் -- மன்னிக்கவும் நீங்கள் நியாயத்திற்கு அப்பாற்பட்டவர்,
தூர தேச புகை வண்டிப் பயணம் நெடீஈஈ ய பயணமாக இருக்கும் பட்சத்தில் சக ப்ரயாணிகளாக வருபவர்கள் கொஞ்சம் சைட்டபிள்ளாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமில்லையா? நீங்களே சொல்லுங்க. . . கண்கள் அப்டி இப்டி போகும் போது கொஞ்சமாவது கலர் வேண்டாமா?
“ அம்மா.... கற்பகவல்லி தாயே..! அந்த ரெண்டு பசங்களும் எங்க பெட்டியிலயே ட்ராவல் பண்ண நீதாம்மா அருள் புரியனும் ” -தேங்காய் உடைப்பதாகவோ, கற்பூரம் ஏற்றுவதாகவோ எந்த கமிட்மென்ட்டும் இல்லாத சர்வ ஜாக்ரதையான ப்ரார்தனையை செய்தோம்.
“இதோ.. 20 ம் 21 ம் ... இங்க இருக்குதுங்க....”- என்று எங்கள் தலைகளை எண்ணியபடியே கடந்து சென்றார் எங்கள் சித்தப்பா.
நாலைந்து குடும்ப சமேதரராக வெளியூருக்கு கிளம்பும் சித்தப்பா ( மன்னிக்கவும்... நாலைந்து என்றால் அவருடையதே ... நாலைந்து அல்ல. அவர் குடும்பத்துடன் அண்ணன்கள் மற்றும் அக்கம் பக்கத்தாரின் குடும்பங்களையும் சேர்த்து) தவறாமல் அவரவர் வயதின் அடிப்படயில் அவரவர்க்கு ஒரு நம்பரை, அவர் வழங்குவதைப் பற்றி நான் இங்கு சிலாகித்தே ஆக வேண்டும்.
நம்பர்களை சத்தமாக கூப்பிட்டு யாரும் தொலைந்து போகாமல் பாதுகாக்கிறாராம்.
மேலும் அவரது உருவ பராக்கிரமும் இங்கு எழுத தக்கதே.. செயின் ஸ்மோக்கர்....அவருக்காகவே புதூ சிகரெட் பாக்டரி ஆரம்பித்தார்கள் என்றால் பார்துக்கொள்ளுங்கள்.
நடிகர் பார்த்திபன் சொல்வதானால்....என் சித்தப்பவை பற்றி இப்படி சொல்வார்
“ ஒரு பெரிய சிகரெட்
ஒரு சின்ன சிகரெட்டை .. பிடிக்கிறதே...! ?
கமா.. ஆச்சர்ய குறி..”
“ அக்கா.... அப்பா நம்மளை இங்க இருந்து எழுப்பி... அம்மா காபின்ல உக்கார சொன்னா என்னக்கா செய்றது”?
“வாந்தி வற்ற மாதிரி ஆக்ட் பண்ணி நாம இங்கயே இருக்கறோம்னு சொல்லிட்லாம்”
வாந்தி வரவேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லை... வாந்தி என்ற வார்த்தை மட்டுமே போதும்... அது யாருடைய வாயிலிருந்து வந்தாலும் வட்ட வட்டமான பின்புலத்துடன் தனது தேன் நிலவு நினைவுகளுக்குச் சென்று விடும் சித்தப்பா அதற்கு மேலும் எங்களை வலியுறுத்தவே மாட்டார் என்பதை நான் இங்கு வலியுறுத்தலாம்.
“அது என்ன...?அவரது தேன் நிலவு நினைவுகள்..? வாந்தியுடன் தொடர்பு படுத்தி..?” – என்று நீங்கள் கேட்டால்...
“ சாரீ.. அதை நீங்க சித்தப்பாவிடம் தான் கேக்கணும்... அது அவரோட பர்சனல் மேட்டர்” – என்ற பதில் மட்டுமே என்னிடம் உள்ளது.
( இருந்தாலும் ரசிகரா ஆய்ட்டீங்க.... சோ... உங்களுக்கு மட்டும்.. ரகசியம் .. ஓகே ..—புதூ பட்டு சட்டை, புதூ பட்டு வேட்டியொடு, தேன் நிலவு மூடுடன் தனது புதூ மனைவியுடன் இரயில் பயணத்தை அவர் துவக்கியதெல்லாம் வாஸ்தவம்தான்.. ஆனால்.. அடுத்த அரை மணி நேரத்தில்.. அவரது தோளில் இருந்து ஆரம்பித்து.. அவரது உள்ளங்கால் வரை வாந்தி எடுத்த சித்தி ஊட்டி போய் சேரும் வரை நிறுத்தவில்லை என்று கேள்வி)
சரி.. சரீ.. முக்கிய நீரோடைக்கு வரும் பட்ச்சத்தில் ( கம்மிங் டு தி மெயின் ஸ்ட்ரீம் என்பதின் தமிழாக்கம்....)
“ நம்ம கம்பார்ட்மென்ட் தான் கா அதுங்களும்” - என்றாள் என் தங்கை என் காதோரமாய். ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா என்பது அவள் கொள்கை.
“ சரீ.. சரீ.. அதுக்காக ஆயிரம் வாட்சை முகத்துல காட்ணுமா”? – என்றேன் 1500 வாட்ஸ் முகத்துடன்.
ஆம்... அவ்விரு கதா நாயகர்களும் தாவி ஏறி.. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நேரெதிர் இருக்கைகளில்... ஆமாம்.. எங்களின் நேர் எதிர் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்,
“ அக்கா....!?”
“ அடக்கி வாசி.. சித்தப்பா வெளியில நின்னுட்டு இருக்காரு”
ரயில் கிளம்பும் கடைசி நொடி வரை ரயில் நிலைய குடி நீர் குழாய்களில் தண்ணீர் பிடிப்பதை ஒரு வாழ் நாள் கொள்கையாகவே வைத்திருந்தார் எங்கள் சித்தப்பா. கடைசி நிமிட கதா நாயகனாக ரயில் படிக்கட் ரஞ்ஜித் போல அவர் தாவி ஏறி பயணிப்பதை சித்தி கூட ரசிப்பதில்லை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
அது என்ன... இந்த ஜென்ட்ஸ் எல்லோரும்
ரயில் கிளம்பினதுக்கப்புறம் ஏற்றது
சினிமா ஆரம்பிச்சதுக்கப்புறம் சீட்ல வந்து உக்காற்றது
பஸ் கிளம்பினதுக்கப்புறம் ஓடி வந்து ஏற்றது
இதெல்லாம் மாத்திக்கவே மாட்டாங்களோ..?
வெளியில் நின்ற சித்தப்பா எங்களை நோக்கி சைகையால் –
“ தண்ணீ வேணுமா?”
நாங்கள் சைகையால் – “ வேண்டவே வேண்டாம்”
ரயில் தனது பயணத்தை “ என் இனிய தமிழ் மக்களே” என்று துவக்கியது.. “ ஐய்யோ... நம்ம கம்பார்ட்மென்ட்லதான் ஏறுராருக்கா சித்தப்பா ”- அதிர்சியில் உறைய ஆரம்பித்தாள் என் தங்கை.
“ ஆகா.. மாட்னோம் இன்னிக்கி .. அம்மா பக்கத்துல போயி உக்கார சொல்ல போறாரு ”- வருத்தத்துடன் சொன்னேன் நான்.
ஆனால்... எங்களிருவருக்கும் ஆளுக்கோர் பாப்பின்ஸ், விகடன், குமுதம் தந்துவிட்டு அடுத்த கம்பார்ட்மென்ட் போக நகர்ந்தவர் மீண்டும் நின்றுவிட்டார்..
ஐயோ..புன்னகை மன்னன் கிளைமாக்ஸ் பார்ப்பதுபோல எங்கள் இதயங்கள் ...தடக்..... தடக்.... தடக்...
ஆனால்... நின்று நிதானித்து ... அந்த பையன்களை நன்றாக பார்த்துவிட்டு.. பின்பு நகர்ந்தார் எங்கள் சித்தப்பா.
ஆப்பாடா.. இனி நம்ம ராஜ்ஜியம் தான்..
அவர் அப்படி போனதும்.. பசங்களை கவனித்தோம்..
ஆகா.. ஆரம்பிசிட்டாங்கையா.. ஆரம்பிசிட்டாங்க..
கலைந்திராத கிராப்பை 5 நிமிடங்களுக்கும் மேலாக சீவினார்கள். கட்டம் போட்ட கர்சீபை நிதானமாக நீவி மடித்து காலருக்கு பின் புறம் வைத்துக் கொண்டார்கள்.
அடுத்ததாக.. இக் கதையின் முக்கிய கட்ட திருப்பத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள்....
அவர்கள்... அவர்கள்... நாங்கள் பார்த்துக் கொன்டிருக்கும் போதே.....அவர்களது பைகளை பெர்த்தில் வைத்தார்கள்
உட்கார்ந்தார்கள்...
எழுந்தார்கள்...
பெர்த்தில் இருந்த பைகளை மீண்டும் கால்களுக்கடியில் வைத்துக் கொண்டார்கள்.
“ இதுங்க மாங்கான்னு நான் அப்பவே சொன்னன்ல...” என்பதைப்போல பார்த்தாள் என் தங்கை.அவளது பார்வையை தவிர்க்க வேறு பக்கம் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கு.
அவர்களை பார்க்கவே விருப்பமில்லாதவர்களைப்போல் எங்கள் முகங்களை வைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.
காரணமே இல்லாமல் சிரித்தாள் என் தங்கை.அக்கா எண்ணும் பொறுப்பிலிருக்கும் நான் அவளை அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
எதேச்சையாக பார்ப்பது போலவும், எதிர் பக்க ப்ளாட்பார்மை பார்க்க விரும்புவது போலவும், எதிர் பக்க மேல் பர்த்தை பார்ப்பதைப் போலவும் பல வழி முறைகளை கையாண்டு நாங்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க...
இவ்விதமான எந்த முயற்சிகளையும் கையாளாமல் நேருக்கு நேராக, காந்திக்கு நேராக பார்த்துக்கொண்டிருந்தனர் அவ்விருவரும் எங்களை..
இந்த அண்ணலும் நோக்கினான்.. அவளும் ஜன்னலில் நோக்கினாள் என்ற காட்சி முடிவுக்கு வரும் படி..... அவர்களில் ஒருவன் எழுந்தான்.... எழுந்து................ அந்த பைகளை எடுத்து மீண்டும் பெர்த்தில் வைத்தான்
எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை,
“ எங்களுக்கு இல்லயா பாப்பின்ஸ்”?
“ கொஞ்சம் விகடன் தற்றீங்களா”?
“ சென்னையா நீங்க "?
“ எங்க போறீங்க... விசாக பட்ணமா”?
இவற்றுள் ஏதேனும் ஒரு கேள்வியை கேட்பார்கள் , அப்போது தெலுங்கும் தமிழும் அறவே தெரியாததாக பாவிக்க எண்ணியிருந்தோம் ங்கள்.ஆனால்.. விதி வலியதாக இருக்குமென்றாலும்... இவ்ளோ வலியதாகவா..?!
கதை பேச தைரியம் இல்லை என்றாலும் அட்லீஸ்ட் கண்களிலாவது காவியம் படைப்பார்கள் என என்னாலும் என் தங்கையாலும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் இருக்கை ஏகாம்பரர்கள் மீண்டும் எழுந்தார்கள்...
என்ன செய்ய போகிறார்களோ என எதிர் பார்த்திருக்கையில்...
தங்களது பைகளை பெர்த்தில் இருந்து இறக்கினார்கள்.
விழுந்து விழுந்து சிரித்தோம்...
கண்களில் நீர் வரும் வரை சிரித்தோம்..
நிறுத்த நினைத்தால் கூட நிறுத்த முடியவில்லை எங்களால்.
பக்கத்து காபினிலிருந்து சித்தப்பாவின் கனைப்பு சத்தம் கேட்டதும் சிரிப்பதை நிறுத்திக் கொண்டோம்.. ஆனால் அப்போதுதான் அதிகமாக சிரிக்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால்... நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு சிரிசிட்டு இருக்கோம்.. அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுபோல்.. இந்தக் கதையின் (!?)இறுதி கட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள் அவர்கள்..
இறுதியாக ... நீக்கள் எதிர் பார்த்த க்ளைமாக்ஸ் வந்தே விட்டது..அதிர்ஷ்டசாலி தான் நீங்க..போங்க வேற என்ன தான் சொல்ல முடியும் நான்?
ஆம்.. அவர்கள் தங்களது பைகளை திறந்து அதிலிருந்து இரண்டு பொட்டலங்களை வெளியே எடுத்தார்கள்..
அந்த பொட்டலங்களை சுற்றி இருந்த நூலை நிதானமாக... மென்மையாக ஆன்ட்டி கிளாக் வைசில் சுற்றி சுற்றி பிரித்தார்கள்...
பிரித்ததும்...?!
வேறு என்ன..? இட்லி...கோங்குரா சட்னி தான்.
ஒரு பிடி இட்டிலி... ஒரு பிடி சட்டினி... என்று கணக்காக சாப்பிட்டார்கள்.
முழு பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்தார்கள்.... கை கழுவினார்கள்...
மறக்காமல் அவர்களது பைகளை மீண்டும் பெர்த்தில் வைத்தார்கள்.
திடீரென... எங்களை நோக்கி... எங்களை நோக்கி... ஒரு ஸ்னேகப் பார்வைப் பார்த்தார்கள்..
"இது என்னடா புது வம்பு ? " என்று நினைத்து முடிக்குமுன்பே ...ஆளுக்கு ஒரு பர்த்தில் ஏறினார்கள் ..பையை தலைக்கு வைத்து கால் நீட்டி வசதியாக படுத்துக் கொண்டார்கள்.
"அடங்கொக்கா மக்கா... கொல்ட்டீங்களா நீங்க”?
அம்மாஞ்சியா இருக்க வேன்டியது வாஸ்தவந்தான்... அதுக்குன்னு இவ்ளோ அம்மாஞ்சியாவா?"
சுத்த மாக்கான்களா இருக்கீங்க.. தேரவே மாட்டீங்கடா நீங்க ஜென்மத்துக்கும்"
என்று மனதிற்குள் திட்டி தீர்த்தோம்.
(லாஜிக் இல்லாம கதைய முடிசிட்டேன்னு நீங்க என்னை தப்பா நினைச்சுட கூடாது இல்லயா? அதுக்காக பின் வரும் வாக்கியத்தை படிக்கவும்)
எங்க சித்தப்பாக்கு நாங்க பயப்படனும்..... அது லாஜிக்... இவன்க ஏன்..?
( கவனிக்க...லாஜிக் வந்துடுச்சி...சரியா?)
ரயிலின் வேகம் அதிகமாகியது..... மெல்லிய இருளில் மரங்கள் அடர்த்தியாயின...தங்கை என் தோள் மீது தலை சாய்த்து தூங்கி இருந்தாள்... நான்.. செம்மையாகியிருந்த அந்தி வானத்தை ரசிக்க ஆரம்பித்தேன்.
நன்றி... வணக்கம்... சுபம்... முற்றும்...
(சினிமான்னாதான் கல்யாண சீன் போடுவாங்க.. சிறுகதைக்கு அதெல்லாம் போடமாட்டாங்க ... அதனால நான் கிளம்பறேன்.. நீங்களும் கிளம்புங்க)
“ எதுவுமே தேறாதுக்கா “ என்றாள் என் தங்கை
“ அப்படி இல்ல.... ஒன்னு , ரென்டு சுமாரா இருக்கு” – நான்
“எது? அந்த க்ரீம் கலர் ஷர்டை சொல்றியா?.... அவ்ளோ ஒன்னும் நல்லால..“ இருக்கறதுல ....அது தேறுதா? இல்லயா? அத சொல்லு ”
“தேறும்..... ஆனா மாங்கா மாதிரி நிக்குதே?
“அம்மாஞ்ஜியா இருந்தாதான் நல்லது. .... இல்லைன்னா சித்தப்பா சீட்டை மாத்திடுவாரு”
“ஆமாமா.... அம்மாஞ்ஜியாவே இருக்கட்டும்... அதான் நமக்கு நல்லது – ஆனா பார்கபிளா இருக்கு இல்ல”
“ம் ம் ... அது ” – என்றேன் நான்
“அப்டி பார்த்தா..... அந்த ப்ளூ டீ ஷர்ட் கூடத்தான் அழகா இருக்கு... இது ரெண்டும் தான் தேறும் போல” – என்றாள் .
இருபத்தி மூன்று பேர் கொண்ட எங்கள் குடும்ப கும்பலில் அடித்து பின்னி துவைத்து கட்டி ரவுடி ரங்கோலிகளாக ஜன்னல் சீட் பிடித்த நானும் எனது தங்கையும் –--- எங்கள் எதிர் சீட்டில் தூங்கிகொண்டே வரும் ஒரு ஜிப்பாகாரரும், கனகாம்பர கொண்டை போட்டு மூன்றுவட செயின் போட்ட ஒரு குண்டு அம்மவும், அந்தம்மா பக்கத்தில் அமர்ந்து, ஸ்வாரஸ்யம் ஏதும் வரவழைக்காமல் கொய்யா பழம் சாப்பிடும் வேஷ்டி கட்டிய ஒருவரும் எங்கள் சக பயணிகளாக வர வேண்டும் என நாங்கள் விரும்புவோம் என நீங்கள் நினைத்தால் -- மன்னிக்கவும் நீங்கள் நியாயத்திற்கு அப்பாற்பட்டவர்,
தூர தேச புகை வண்டிப் பயணம் நெடீஈஈ ய பயணமாக இருக்கும் பட்சத்தில் சக ப்ரயாணிகளாக வருபவர்கள் கொஞ்சம் சைட்டபிள்ளாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமில்லையா? நீங்களே சொல்லுங்க. . . கண்கள் அப்டி இப்டி போகும் போது கொஞ்சமாவது கலர் வேண்டாமா?
“ அம்மா.... கற்பகவல்லி தாயே..! அந்த ரெண்டு பசங்களும் எங்க பெட்டியிலயே ட்ராவல் பண்ண நீதாம்மா அருள் புரியனும் ” -தேங்காய் உடைப்பதாகவோ, கற்பூரம் ஏற்றுவதாகவோ எந்த கமிட்மென்ட்டும் இல்லாத சர்வ ஜாக்ரதையான ப்ரார்தனையை செய்தோம்.
“இதோ.. 20 ம் 21 ம் ... இங்க இருக்குதுங்க....”- என்று எங்கள் தலைகளை எண்ணியபடியே கடந்து சென்றார் எங்கள் சித்தப்பா.
நாலைந்து குடும்ப சமேதரராக வெளியூருக்கு கிளம்பும் சித்தப்பா ( மன்னிக்கவும்... நாலைந்து என்றால் அவருடையதே ... நாலைந்து அல்ல. அவர் குடும்பத்துடன் அண்ணன்கள் மற்றும் அக்கம் பக்கத்தாரின் குடும்பங்களையும் சேர்த்து) தவறாமல் அவரவர் வயதின் அடிப்படயில் அவரவர்க்கு ஒரு நம்பரை, அவர் வழங்குவதைப் பற்றி நான் இங்கு சிலாகித்தே ஆக வேண்டும்.
நம்பர்களை சத்தமாக கூப்பிட்டு யாரும் தொலைந்து போகாமல் பாதுகாக்கிறாராம்.
மேலும் அவரது உருவ பராக்கிரமும் இங்கு எழுத தக்கதே.. செயின் ஸ்மோக்கர்....அவருக்காகவே புதூ சிகரெட் பாக்டரி ஆரம்பித்தார்கள் என்றால் பார்துக்கொள்ளுங்கள்.
நடிகர் பார்த்திபன் சொல்வதானால்....என் சித்தப்பவை பற்றி இப்படி சொல்வார்
“ ஒரு பெரிய சிகரெட்
ஒரு சின்ன சிகரெட்டை .. பிடிக்கிறதே...! ?
கமா.. ஆச்சர்ய குறி..”
“ அக்கா.... அப்பா நம்மளை இங்க இருந்து எழுப்பி... அம்மா காபின்ல உக்கார சொன்னா என்னக்கா செய்றது”?
“வாந்தி வற்ற மாதிரி ஆக்ட் பண்ணி நாம இங்கயே இருக்கறோம்னு சொல்லிட்லாம்”
வாந்தி வரவேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லை... வாந்தி என்ற வார்த்தை மட்டுமே போதும்... அது யாருடைய வாயிலிருந்து வந்தாலும் வட்ட வட்டமான பின்புலத்துடன் தனது தேன் நிலவு நினைவுகளுக்குச் சென்று விடும் சித்தப்பா அதற்கு மேலும் எங்களை வலியுறுத்தவே மாட்டார் என்பதை நான் இங்கு வலியுறுத்தலாம்.
“அது என்ன...?அவரது தேன் நிலவு நினைவுகள்..? வாந்தியுடன் தொடர்பு படுத்தி..?” – என்று நீங்கள் கேட்டால்...
“ சாரீ.. அதை நீங்க சித்தப்பாவிடம் தான் கேக்கணும்... அது அவரோட பர்சனல் மேட்டர்” – என்ற பதில் மட்டுமே என்னிடம் உள்ளது.
( இருந்தாலும் ரசிகரா ஆய்ட்டீங்க.... சோ... உங்களுக்கு மட்டும்.. ரகசியம் .. ஓகே ..—புதூ பட்டு சட்டை, புதூ பட்டு வேட்டியொடு, தேன் நிலவு மூடுடன் தனது புதூ மனைவியுடன் இரயில் பயணத்தை அவர் துவக்கியதெல்லாம் வாஸ்தவம்தான்.. ஆனால்.. அடுத்த அரை மணி நேரத்தில்.. அவரது தோளில் இருந்து ஆரம்பித்து.. அவரது உள்ளங்கால் வரை வாந்தி எடுத்த சித்தி ஊட்டி போய் சேரும் வரை நிறுத்தவில்லை என்று கேள்வி)
சரி.. சரீ.. முக்கிய நீரோடைக்கு வரும் பட்ச்சத்தில் ( கம்மிங் டு தி மெயின் ஸ்ட்ரீம் என்பதின் தமிழாக்கம்....)
“ நம்ம கம்பார்ட்மென்ட் தான் கா அதுங்களும்” - என்றாள் என் தங்கை என் காதோரமாய். ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா என்பது அவள் கொள்கை.
“ சரீ.. சரீ.. அதுக்காக ஆயிரம் வாட்சை முகத்துல காட்ணுமா”? – என்றேன் 1500 வாட்ஸ் முகத்துடன்.
ஆம்... அவ்விரு கதா நாயகர்களும் தாவி ஏறி.. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நேரெதிர் இருக்கைகளில்... ஆமாம்.. எங்களின் நேர் எதிர் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்,
“ அக்கா....!?”
“ அடக்கி வாசி.. சித்தப்பா வெளியில நின்னுட்டு இருக்காரு”
ரயில் கிளம்பும் கடைசி நொடி வரை ரயில் நிலைய குடி நீர் குழாய்களில் தண்ணீர் பிடிப்பதை ஒரு வாழ் நாள் கொள்கையாகவே வைத்திருந்தார் எங்கள் சித்தப்பா. கடைசி நிமிட கதா நாயகனாக ரயில் படிக்கட் ரஞ்ஜித் போல அவர் தாவி ஏறி பயணிப்பதை சித்தி கூட ரசிப்பதில்லை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
அது என்ன... இந்த ஜென்ட்ஸ் எல்லோரும்
ரயில் கிளம்பினதுக்கப்புறம் ஏற்றது
சினிமா ஆரம்பிச்சதுக்கப்புறம் சீட்ல வந்து உக்காற்றது
பஸ் கிளம்பினதுக்கப்புறம் ஓடி வந்து ஏற்றது
இதெல்லாம் மாத்திக்கவே மாட்டாங்களோ..?
வெளியில் நின்ற சித்தப்பா எங்களை நோக்கி சைகையால் –
“ தண்ணீ வேணுமா?”
நாங்கள் சைகையால் – “ வேண்டவே வேண்டாம்”
ரயில் தனது பயணத்தை “ என் இனிய தமிழ் மக்களே” என்று துவக்கியது.. “ ஐய்யோ... நம்ம கம்பார்ட்மென்ட்லதான் ஏறுராருக்கா சித்தப்பா ”- அதிர்சியில் உறைய ஆரம்பித்தாள் என் தங்கை.
“ ஆகா.. மாட்னோம் இன்னிக்கி .. அம்மா பக்கத்துல போயி உக்கார சொல்ல போறாரு ”- வருத்தத்துடன் சொன்னேன் நான்.
ஆனால்... எங்களிருவருக்கும் ஆளுக்கோர் பாப்பின்ஸ், விகடன், குமுதம் தந்துவிட்டு அடுத்த கம்பார்ட்மென்ட் போக நகர்ந்தவர் மீண்டும் நின்றுவிட்டார்..
ஐயோ..புன்னகை மன்னன் கிளைமாக்ஸ் பார்ப்பதுபோல எங்கள் இதயங்கள் ...தடக்..... தடக்.... தடக்...
ஆனால்... நின்று நிதானித்து ... அந்த பையன்களை நன்றாக பார்த்துவிட்டு.. பின்பு நகர்ந்தார் எங்கள் சித்தப்பா.
ஆப்பாடா.. இனி நம்ம ராஜ்ஜியம் தான்..
அவர் அப்படி போனதும்.. பசங்களை கவனித்தோம்..
ஆகா.. ஆரம்பிசிட்டாங்கையா.. ஆரம்பிசிட்டாங்க..
கலைந்திராத கிராப்பை 5 நிமிடங்களுக்கும் மேலாக சீவினார்கள். கட்டம் போட்ட கர்சீபை நிதானமாக நீவி மடித்து காலருக்கு பின் புறம் வைத்துக் கொண்டார்கள்.
அடுத்ததாக.. இக் கதையின் முக்கிய கட்ட திருப்பத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள்....
அவர்கள்... அவர்கள்... நாங்கள் பார்த்துக் கொன்டிருக்கும் போதே.....அவர்களது பைகளை பெர்த்தில் வைத்தார்கள்
உட்கார்ந்தார்கள்...
எழுந்தார்கள்...
பெர்த்தில் இருந்த பைகளை மீண்டும் கால்களுக்கடியில் வைத்துக் கொண்டார்கள்.
“ இதுங்க மாங்கான்னு நான் அப்பவே சொன்னன்ல...” என்பதைப்போல பார்த்தாள் என் தங்கை.அவளது பார்வையை தவிர்க்க வேறு பக்கம் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கு.
அவர்களை பார்க்கவே விருப்பமில்லாதவர்களைப்போல் எங்கள் முகங்களை வைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.
காரணமே இல்லாமல் சிரித்தாள் என் தங்கை.அக்கா எண்ணும் பொறுப்பிலிருக்கும் நான் அவளை அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
எதேச்சையாக பார்ப்பது போலவும், எதிர் பக்க ப்ளாட்பார்மை பார்க்க விரும்புவது போலவும், எதிர் பக்க மேல் பர்த்தை பார்ப்பதைப் போலவும் பல வழி முறைகளை கையாண்டு நாங்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க...
இவ்விதமான எந்த முயற்சிகளையும் கையாளாமல் நேருக்கு நேராக, காந்திக்கு நேராக பார்த்துக்கொண்டிருந்தனர் அவ்விருவரும் எங்களை..
இந்த அண்ணலும் நோக்கினான்.. அவளும் ஜன்னலில் நோக்கினாள் என்ற காட்சி முடிவுக்கு வரும் படி..... அவர்களில் ஒருவன் எழுந்தான்.... எழுந்து................ அந்த பைகளை எடுத்து மீண்டும் பெர்த்தில் வைத்தான்
எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை,
“ எங்களுக்கு இல்லயா பாப்பின்ஸ்”?
“ கொஞ்சம் விகடன் தற்றீங்களா”?
“ சென்னையா நீங்க "?
“ எங்க போறீங்க... விசாக பட்ணமா”?
இவற்றுள் ஏதேனும் ஒரு கேள்வியை கேட்பார்கள் , அப்போது தெலுங்கும் தமிழும் அறவே தெரியாததாக பாவிக்க எண்ணியிருந்தோம் ங்கள்.ஆனால்.. விதி வலியதாக இருக்குமென்றாலும்... இவ்ளோ வலியதாகவா..?!
கதை பேச தைரியம் இல்லை என்றாலும் அட்லீஸ்ட் கண்களிலாவது காவியம் படைப்பார்கள் என என்னாலும் என் தங்கையாலும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் இருக்கை ஏகாம்பரர்கள் மீண்டும் எழுந்தார்கள்...
என்ன செய்ய போகிறார்களோ என எதிர் பார்த்திருக்கையில்...
தங்களது பைகளை பெர்த்தில் இருந்து இறக்கினார்கள்.
விழுந்து விழுந்து சிரித்தோம்...
கண்களில் நீர் வரும் வரை சிரித்தோம்..
நிறுத்த நினைத்தால் கூட நிறுத்த முடியவில்லை எங்களால்.
பக்கத்து காபினிலிருந்து சித்தப்பாவின் கனைப்பு சத்தம் கேட்டதும் சிரிப்பதை நிறுத்திக் கொண்டோம்.. ஆனால் அப்போதுதான் அதிகமாக சிரிக்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால்... நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு சிரிசிட்டு இருக்கோம்.. அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுபோல்.. இந்தக் கதையின் (!?)இறுதி கட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள் அவர்கள்..
இறுதியாக ... நீக்கள் எதிர் பார்த்த க்ளைமாக்ஸ் வந்தே விட்டது..அதிர்ஷ்டசாலி தான் நீங்க..போங்க வேற என்ன தான் சொல்ல முடியும் நான்?
ஆம்.. அவர்கள் தங்களது பைகளை திறந்து அதிலிருந்து இரண்டு பொட்டலங்களை வெளியே எடுத்தார்கள்..
அந்த பொட்டலங்களை சுற்றி இருந்த நூலை நிதானமாக... மென்மையாக ஆன்ட்டி கிளாக் வைசில் சுற்றி சுற்றி பிரித்தார்கள்...
பிரித்ததும்...?!
வேறு என்ன..? இட்லி...கோங்குரா சட்னி தான்.
ஒரு பிடி இட்டிலி... ஒரு பிடி சட்டினி... என்று கணக்காக சாப்பிட்டார்கள்.
முழு பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்தார்கள்.... கை கழுவினார்கள்...
மறக்காமல் அவர்களது பைகளை மீண்டும் பெர்த்தில் வைத்தார்கள்.
திடீரென... எங்களை நோக்கி... எங்களை நோக்கி... ஒரு ஸ்னேகப் பார்வைப் பார்த்தார்கள்..
"இது என்னடா புது வம்பு ? " என்று நினைத்து முடிக்குமுன்பே ...ஆளுக்கு ஒரு பர்த்தில் ஏறினார்கள் ..பையை தலைக்கு வைத்து கால் நீட்டி வசதியாக படுத்துக் கொண்டார்கள்.
"அடங்கொக்கா மக்கா... கொல்ட்டீங்களா நீங்க”?
அம்மாஞ்சியா இருக்க வேன்டியது வாஸ்தவந்தான்... அதுக்குன்னு இவ்ளோ அம்மாஞ்சியாவா?"
சுத்த மாக்கான்களா இருக்கீங்க.. தேரவே மாட்டீங்கடா நீங்க ஜென்மத்துக்கும்"
என்று மனதிற்குள் திட்டி தீர்த்தோம்.
(லாஜிக் இல்லாம கதைய முடிசிட்டேன்னு நீங்க என்னை தப்பா நினைச்சுட கூடாது இல்லயா? அதுக்காக பின் வரும் வாக்கியத்தை படிக்கவும்)
எங்க சித்தப்பாக்கு நாங்க பயப்படனும்..... அது லாஜிக்... இவன்க ஏன்..?
( கவனிக்க...லாஜிக் வந்துடுச்சி...சரியா?)
ரயிலின் வேகம் அதிகமாகியது..... மெல்லிய இருளில் மரங்கள் அடர்த்தியாயின...தங்கை என் தோள் மீது தலை சாய்த்து தூங்கி இருந்தாள்... நான்.. செம்மையாகியிருந்த அந்தி வானத்தை ரசிக்க ஆரம்பித்தேன்.
நன்றி... வணக்கம்... சுபம்... முற்றும்...
(சினிமான்னாதான் கல்யாண சீன் போடுவாங்க.. சிறுகதைக்கு அதெல்லாம் போடமாட்டாங்க ... அதனால நான் கிளம்பறேன்.. நீங்களும் கிளம்புங்க)
Sunday, May 01, 2005
பூந்தோட்டம்
இடது மதிற் சுவரில் படர
நித்ய மல்லி
வலது பக்கத்திற்கு ஜாதி
பின்புற மதிலில் அடுக்கு மல்லி
கூடவே வெறும் மல்லி
வாயில் பிறை வளைவில்
பிடித்துப் படர கொடி சம்பங்கி
அடர்தியாய் சிரிக்க
அடுக்கு செம்பருத்தி
ஆசைக்கு சிவப்பு ரோஜா
ஆன்மீகத்திற்கு செவ்வரளி
முடிந்தால் மூலையில்
முல்லைக் கொடி ஒன்று
சிறு வெந்தயம், கொத்துமல்லி
சிந்தினாற் போல் சிறு கீரை
அவ்வளவும் இந்த
அரை கிரவுண்ட்
அடுக்ககத்தில் வளர்க்க
ஆசை என்றதும் - என்னை
அடித்து துவைக்கும்
ஆவேசத்தில் என்
அகத்தினர்.
ஆனாலும் அடமாய்
ஆறேழு தொட்டிகளில்
முளைக்கவே முளைக்காத
வெந்தயம், மல்லி
மொட்டே விடாத ரோஜா
மூன்றே இலை மனி பிளான்ட்.
அறுவடையை மேற் பார்வையிடும்
நிலக்கிழாத்தி போல்
அரையடித் தொட்டிகளை
ஆராய்கையில். . .
ஐ. . . .சின்னூன்டு வேப்பங் கன்று...!
எங்கிருந்து வந்தாயடி நீ....?
என்னிடம் ஏன் சேர்ந்தாயடி. ..?
நித்ய மல்லி
வலது பக்கத்திற்கு ஜாதி
பின்புற மதிலில் அடுக்கு மல்லி
கூடவே வெறும் மல்லி
வாயில் பிறை வளைவில்
பிடித்துப் படர கொடி சம்பங்கி
அடர்தியாய் சிரிக்க
அடுக்கு செம்பருத்தி
ஆசைக்கு சிவப்பு ரோஜா
ஆன்மீகத்திற்கு செவ்வரளி
முடிந்தால் மூலையில்
முல்லைக் கொடி ஒன்று
சிறு வெந்தயம், கொத்துமல்லி
சிந்தினாற் போல் சிறு கீரை
அவ்வளவும் இந்த
அரை கிரவுண்ட்
அடுக்ககத்தில் வளர்க்க
ஆசை என்றதும் - என்னை
அடித்து துவைக்கும்
ஆவேசத்தில் என்
அகத்தினர்.
ஆனாலும் அடமாய்
ஆறேழு தொட்டிகளில்
முளைக்கவே முளைக்காத
வெந்தயம், மல்லி
மொட்டே விடாத ரோஜா
மூன்றே இலை மனி பிளான்ட்.
அறுவடையை மேற் பார்வையிடும்
நிலக்கிழாத்தி போல்
அரையடித் தொட்டிகளை
ஆராய்கையில். . .
ஐ. . . .சின்னூன்டு வேப்பங் கன்று...!
எங்கிருந்து வந்தாயடி நீ....?
என்னிடம் ஏன் சேர்ந்தாயடி. ..?
Wednesday, April 20, 2005
அவன்
அவனை எனக்குப் பிடிக்கும்
முந்தானை சரி செய்தல் போலும்
முன் நுதல் குழல் ஒதுக்குதல் போலும்
அவன் முகம் பார்ப்பேன்.
விழியால் இணைந்தோம்
இணைந்தே வீழ்ந்தோம்
காதலில்.
எங்கள் அகங்களோ அருகருகே
ஆனால் இல்லங்களோ எதிரெதிரே.
புதூ வண்டி.. . புதூ ஆரன்
அதிக அழுத்தம்
எனக்காக என் வீட்டு வாசலில்.
பின் இருக்கையில்
நான் வரவா என்றால்
வா என்கிறான்
பின் விளைவுகளை எண்ணாமல்.
தலையணை மந்திரத்தால் - என்
தலைவனை மந்திரித்தால்
தடையேதுமில்லையென - என்
தலை வருடி முத்தமிடுவார்.
ஆனால் . . . என்
மாமியாருக்கான மந்திரம்
ஏதுமில்லை என்னிடம்.
தன் தாய்க்கும் என் மாமிக்குமான
சண்டையை நிறுத்த
அவனுக்கு
இன்னும் வேண்டும் வயது
இப்போது தானே நான்கு...!
முந்தானை சரி செய்தல் போலும்
முன் நுதல் குழல் ஒதுக்குதல் போலும்
அவன் முகம் பார்ப்பேன்.
விழியால் இணைந்தோம்
இணைந்தே வீழ்ந்தோம்
காதலில்.
எங்கள் அகங்களோ அருகருகே
ஆனால் இல்லங்களோ எதிரெதிரே.
புதூ வண்டி.. . புதூ ஆரன்
அதிக அழுத்தம்
எனக்காக என் வீட்டு வாசலில்.
பின் இருக்கையில்
நான் வரவா என்றால்
வா என்கிறான்
பின் விளைவுகளை எண்ணாமல்.
தலையணை மந்திரத்தால் - என்
தலைவனை மந்திரித்தால்
தடையேதுமில்லையென - என்
தலை வருடி முத்தமிடுவார்.
ஆனால் . . . என்
மாமியாருக்கான மந்திரம்
ஏதுமில்லை என்னிடம்.
தன் தாய்க்கும் என் மாமிக்குமான
சண்டையை நிறுத்த
அவனுக்கு
இன்னும் வேண்டும் வயது
இப்போது தானே நான்கு...!
Sunday, April 17, 2005
செல்லம்
மழைக்காலம்
மாலை மயக்கத்தில்
மௌனமாய் சூரியன்
இருபத்தியெட்டு கிக்குகளுக்குப்பின்
உறுமும் என்
இரு சக்கர வாகனம்
உடை விலகலை
மழையிலும்
தவறாது கவனிக்கும்
சக வழி போக்கர்கள்
நனைந்து, தலைவழி வரும்
மழை நீரை குடித்து
தவணை முறையில் வந்தடைந்தேன்
என் செல்லமே
உன்னைக்காண.
உலராடை உடுத்தாமல்
உனது பசியறிந்து
குழம்பாய் காய்ச்சிய பாலை
இளஞ் சூட்டுடன்
அருகில் வைத்தால்
பஞ்சுப் பொதிபோல்
உருண்டையாய் எழுந்து
சின்ன
முழங்கால் நீட்டி
சோம்பல் முறித்து
கார்பெட் மேல்
மீண்டும் தூங்கும்
என் குட்டி நாயே. . .
ஆறிய பாலை குடிக்க
உனக்கு பிடிக்காதேடா. . .
அதற்காகவாவது எழுந்திரு.
மாலை மயக்கத்தில்
மௌனமாய் சூரியன்
இருபத்தியெட்டு கிக்குகளுக்குப்பின்
உறுமும் என்
இரு சக்கர வாகனம்
உடை விலகலை
மழையிலும்
தவறாது கவனிக்கும்
சக வழி போக்கர்கள்
நனைந்து, தலைவழி வரும்
மழை நீரை குடித்து
தவணை முறையில் வந்தடைந்தேன்
என் செல்லமே
உன்னைக்காண.
உலராடை உடுத்தாமல்
உனது பசியறிந்து
குழம்பாய் காய்ச்சிய பாலை
இளஞ் சூட்டுடன்
அருகில் வைத்தால்
பஞ்சுப் பொதிபோல்
உருண்டையாய் எழுந்து
சின்ன
முழங்கால் நீட்டி
சோம்பல் முறித்து
கார்பெட் மேல்
மீண்டும் தூங்கும்
என் குட்டி நாயே. . .
ஆறிய பாலை குடிக்க
உனக்கு பிடிக்காதேடா. . .
அதற்காகவாவது எழுந்திரு.
Wednesday, April 13, 2005
தமிழரின் புத்தாண்டு..?
ஆலய மணி ஓசையில்
ஆண்டவன் சன்னதியில்
ஆரம்பமாவது
ஆங்கிலப் புத்தாண்டு
மலர்களும் கனிகளும்
மகிழ்வோடு குவித்து
கூடி வணங்கி பிறப்பது
மலையாள விஷுகனி
அடுத்து வரும்
ஆண்டிற்கான
அடையாள விலங்கினை
அறிவித்துப் பிறப்பது
சீனப் புத்தாண்டு
அவரவர் அடையாளங்களை
அடுத்த தலைமுறைக்கு
அழகாய் அளித்துவிட்டார்கள் அவர்கள்.
நாம்...?
ஸதா - அரட்டை, சிறப்பு விருந்தினர் மும்தாஜ்
செல்லமே, ஜெமினி, அரசாட்சி,
குஷி, த்ரீ ரோஸஸ் - இன்னும் பல. .
சிந்தனை சலவை செய்து
கேபிள் முக்தி தந்து
நாற்காலி மோன நிலை அருளும்
கலாச்சார வேர் புழு...
தொலைக்காட்சி பெட்டி மட்டும்தான்
நாம் அளிக்க நமது அடையாளம்.
தமிழரே. . . மன்னிக்கவும். . .
ஏனோ நினைவில் வந்து தொலைகிறது. . .
கல் தோன்றி மண் தோன்றா காலத்து
முன் தோன்றிய மூத்த குடி நம் குடி.
ஆண்டவன் சன்னதியில்
ஆரம்பமாவது
ஆங்கிலப் புத்தாண்டு
மலர்களும் கனிகளும்
மகிழ்வோடு குவித்து
கூடி வணங்கி பிறப்பது
மலையாள விஷுகனி
அடுத்து வரும்
ஆண்டிற்கான
அடையாள விலங்கினை
அறிவித்துப் பிறப்பது
சீனப் புத்தாண்டு
அவரவர் அடையாளங்களை
அடுத்த தலைமுறைக்கு
அழகாய் அளித்துவிட்டார்கள் அவர்கள்.
நாம்...?
ஸதா - அரட்டை, சிறப்பு விருந்தினர் மும்தாஜ்
செல்லமே, ஜெமினி, அரசாட்சி,
குஷி, த்ரீ ரோஸஸ் - இன்னும் பல. .
சிந்தனை சலவை செய்து
கேபிள் முக்தி தந்து
நாற்காலி மோன நிலை அருளும்
கலாச்சார வேர் புழு...
தொலைக்காட்சி பெட்டி மட்டும்தான்
நாம் அளிக்க நமது அடையாளம்.
தமிழரே. . . மன்னிக்கவும். . .
ஏனோ நினைவில் வந்து தொலைகிறது. . .
கல் தோன்றி மண் தோன்றா காலத்து
முன் தோன்றிய மூத்த குடி நம் குடி.
Tuesday, April 05, 2005
உயிரின் உருவம்
எளிதாய் எடுத்தாளலாம்
எளிமையாய் புரியவைக்கலாம்
ஏங்கினேன் என எழுதியே
ஏங்கவைக்கலாம்
கடும் விமர்சனம்
கண்டிப்பாய் விழாது
கருத்தை கவரவில்லை
என்றாலும்
கடுஞ்சொல் வராது
காவியங்களோ
கருத்தோவியங்களோ
தேவையில்லை
கருகிய காதல்
கவிதைகள் போதும்
கவிஞர் என முகவரியிட
இங்கு..
காதலைவிட
காதல் கவிதைகள் மட்டுமே
உண்மையான உயிர்ப்புடன்
காதல்...!?
இறந்த காலத்தில் இருந்திருக்குமோ!
இப்பொழுது இருக்கிறதோ!
இனிமேலும் இருக்குமோ ! இல்லை. . .
இருக்கவே இருக்காதோ. . . ஆனால்
கால காலத்திற்கும்
கட்டாயம் இருக்கும்
காதல் கவிதைகள்.
இருப்பதாக நம்பப்படுவதால் .. இறைவன்
காதல்
இருப்பதாக நம்பப்படுவதால்.. . கவிதைகள்.
எளிமையாய் புரியவைக்கலாம்
ஏங்கினேன் என எழுதியே
ஏங்கவைக்கலாம்
கடும் விமர்சனம்
கண்டிப்பாய் விழாது
கருத்தை கவரவில்லை
என்றாலும்
கடுஞ்சொல் வராது
காவியங்களோ
கருத்தோவியங்களோ
தேவையில்லை
கருகிய காதல்
கவிதைகள் போதும்
கவிஞர் என முகவரியிட
இங்கு..
காதலைவிட
காதல் கவிதைகள் மட்டுமே
உண்மையான உயிர்ப்புடன்
காதல்...!?
இறந்த காலத்தில் இருந்திருக்குமோ!
இப்பொழுது இருக்கிறதோ!
இனிமேலும் இருக்குமோ ! இல்லை. . .
இருக்கவே இருக்காதோ. . . ஆனால்
கால காலத்திற்கும்
கட்டாயம் இருக்கும்
காதல் கவிதைகள்.
இருப்பதாக நம்பப்படுவதால் .. இறைவன்
காதல்
இருப்பதாக நம்பப்படுவதால்.. . கவிதைகள்.
தீபாவளி
தீபாவளி விடிந்தபின்
விலாவரியாய்
தினத்தந்தியில் சுருட்டி தந்து
திகைப்புறச் செய்த
குடும்ப தையல்காரரும் -
அவர் தைத்த மாடர்ன் உடைகளும். . .
ஒரு தாய் மக்களென்பதை - அந்த
ஒரே டிசைன் உடையணிந்து நிரூபித்த
நானும் எனது தம்பி தங்கையரும். . .
முப்பது ரூபாய் வெடிகளுக்கு
முதல் நாள் இரவே நடந்த
பாகப்பிரிவினையும். . . .
அதனால் வந்த மனத்தாங்கலும்
அதற்கு சித்தப்பாவின் மத்யஸ்தமும்....
விடிந்ததும்
அத்தனை பேர் பாகத்தையும்
ஒற்றை ஆளாய்
அசராமல் வெடித்து தீர்த்த
அதே சித்தப்பாவும். . . .
அவரை அடித்து பின்னி
துவைக்க ஆவேசித்து. . .
பின்
எதுவும் செய்யாமல்
அவர் அருகே
வெறுமனே நின்ற நாங்களும்...
தட்டு நிரம்பிய பட்சணங்கள்
போதாதென
வேகவைத்த உப்பு வேர்கடலையோடு
மழை விழும் முற்றம் சுற்றி
ஆளுக்கொரு தூணில் சாய்ந்து
ஆரவாரமாய் பேசி சிரித்த
ஊர்க்கதையும் . . . பேய்க்கதையும். . .
கடுங்காப்பி மணத்துடன்
வெட்டு, குத்து, கொலைப் பழியுடன்
தாயக்கட்டை விளையாடிய
அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பாவும்...
ம். . ஏனோ . .
நிகழும் பொழுதைவிட
நினைக்கும் பொழுதில்தான்
என்னை நெகிழ்விக்கின்றன
சில தீபாவளிகள். . ...
விலாவரியாய்
தினத்தந்தியில் சுருட்டி தந்து
திகைப்புறச் செய்த
குடும்ப தையல்காரரும் -
அவர் தைத்த மாடர்ன் உடைகளும். . .
ஒரு தாய் மக்களென்பதை - அந்த
ஒரே டிசைன் உடையணிந்து நிரூபித்த
நானும் எனது தம்பி தங்கையரும். . .
முப்பது ரூபாய் வெடிகளுக்கு
முதல் நாள் இரவே நடந்த
பாகப்பிரிவினையும். . . .
அதனால் வந்த மனத்தாங்கலும்
அதற்கு சித்தப்பாவின் மத்யஸ்தமும்....
விடிந்ததும்
அத்தனை பேர் பாகத்தையும்
ஒற்றை ஆளாய்
அசராமல் வெடித்து தீர்த்த
அதே சித்தப்பாவும். . . .
அவரை அடித்து பின்னி
துவைக்க ஆவேசித்து. . .
பின்
எதுவும் செய்யாமல்
அவர் அருகே
வெறுமனே நின்ற நாங்களும்...
தட்டு நிரம்பிய பட்சணங்கள்
போதாதென
வேகவைத்த உப்பு வேர்கடலையோடு
மழை விழும் முற்றம் சுற்றி
ஆளுக்கொரு தூணில் சாய்ந்து
ஆரவாரமாய் பேசி சிரித்த
ஊர்க்கதையும் . . . பேய்க்கதையும். . .
கடுங்காப்பி மணத்துடன்
வெட்டு, குத்து, கொலைப் பழியுடன்
தாயக்கட்டை விளையாடிய
அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பாவும்...
ம். . ஏனோ . .
நிகழும் பொழுதைவிட
நினைக்கும் பொழுதில்தான்
என்னை நெகிழ்விக்கின்றன
சில தீபாவளிகள். . ...
என்னதான் செய்வது
தூரத்திலிருந்து தூக்கி எறிய மனமில்லை
கொஞ்சம் உள்சென்று
விட்டு விட்டு வரவும் துணிவில்லை
நாலணாவிற்கு நச்சரிக்கும் சிறுவரிடம்
தூக்கி கொடுக்கவும் விருப்பமில்லை
காலருகில் வைத்துவிடுவதும் சரியில்லை
ப்யூர் வெஜிடேரியனை
மீன்களுடன் சேர்ப்பதும் முறையில்லை
என்னதான் செய்வது...?
கடற்கரைக்கு வந்தபின்னும்
போகமாட்டேன் என்னும்
இந்த மண்ணு பிள்ளையாரை.....
கொஞ்சம் உள்சென்று
விட்டு விட்டு வரவும் துணிவில்லை
நாலணாவிற்கு நச்சரிக்கும் சிறுவரிடம்
தூக்கி கொடுக்கவும் விருப்பமில்லை
காலருகில் வைத்துவிடுவதும் சரியில்லை
ப்யூர் வெஜிடேரியனை
மீன்களுடன் சேர்ப்பதும் முறையில்லை
என்னதான் செய்வது...?
கடற்கரைக்கு வந்தபின்னும்
போகமாட்டேன் என்னும்
இந்த மண்ணு பிள்ளையாரை.....
மேற்கு சுனாமி
மேற்கு சுனாமி
இரு சக்கர வாகனத்தில்
இருவர் மூவராய். .
நாராச கூச்சலிட்டு
நகரெங்கும் சுற்றி. . .
நள்ளிரவில்
நடுத்தெருவில்
நட்சத்திர ஓட்டலில்
நளினங்களற்ற
நடனங்கள் ஆடி. . .
காரணமேயின்றி
காரிருளில்
கடற்கரையில் கூடி...
பொங்கும் பீர்
போதை ஏற்றி
போக்குவரத்தை தன்
போக்குக்கு மாற்றி...
அலட்டல் அலப்பரியாய்
ஆன்மீகச் செம்மலென
ஆண்டிறுதி நாளின்
அர்த்த ராத்திரியில்
ஆலயம் நோக்கி ஓடி . . . - என
இவை எதையுமே செய்யாமல். . .
இளம் காலை விடியலில்
இதமாய் உச்சி முகர்ந்து
" புது வருஷம் டா "" என்று
கன்னம் தட்டிச் சென்ற
என் தந்தையொடு. . .
இயல்பாய் வாழ்ந்த தமிழன்
அழிந்துதான் போய் விட்டான்.
இரு சக்கர வாகனத்தில்
இருவர் மூவராய். .
நாராச கூச்சலிட்டு
நகரெங்கும் சுற்றி. . .
நள்ளிரவில்
நடுத்தெருவில்
நட்சத்திர ஓட்டலில்
நளினங்களற்ற
நடனங்கள் ஆடி. . .
காரணமேயின்றி
காரிருளில்
கடற்கரையில் கூடி...
பொங்கும் பீர்
போதை ஏற்றி
போக்குவரத்தை தன்
போக்குக்கு மாற்றி...
அலட்டல் அலப்பரியாய்
ஆன்மீகச் செம்மலென
ஆண்டிறுதி நாளின்
அர்த்த ராத்திரியில்
ஆலயம் நோக்கி ஓடி . . . - என
இவை எதையுமே செய்யாமல். . .
இளம் காலை விடியலில்
இதமாய் உச்சி முகர்ந்து
" புது வருஷம் டா "" என்று
கன்னம் தட்டிச் சென்ற
என் தந்தையொடு. . .
இயல்பாய் வாழ்ந்த தமிழன்
அழிந்துதான் போய் விட்டான்.
Sunday, March 27, 2005
பயணம்
இலைகளின் அசைவில் சோகம்
காற்றின் பயணத்தில் பெருமூச்சு
சருகின் துவளலில் உயிர்ப்பு - என
குறிப்பால் உணர்த்துகிறாய்.
சிந்தனையற்று வெறுமை பெற
உன்னிடத்தில் அமர்கையில்
பரபரப்பாய் புகை வண்டி
கூட்டம் கலைந்ததும்
மீண்டும் மௌனத்தில் நாம்
மழை தூறும் மாலைப் பொழுதில்
உனைக்காண வருகையில்
காற்றால் தழுவி
சருகால் வருடி
சாரலைப் பரிசளித்தாய்
ஆலும் அரசுமே நம் நண்பர்கள்
உன் மேல் காதலிருந்தாலும்
உனது நீண்ட நெடும் பாதையில்
உன்னுடன் இணைந்து
ஊர் எல்லை வரைதான்
நான் ஓடி வருவேன் -
பள்ளி செல்லும் பெண் பிள்ளைக்கு
ஆளில்லா ரயில் பாதையில்
தனியே என்ன வேலை என்பார்களே ?
காற்றின் பயணத்தில் பெருமூச்சு
சருகின் துவளலில் உயிர்ப்பு - என
குறிப்பால் உணர்த்துகிறாய்.
சிந்தனையற்று வெறுமை பெற
உன்னிடத்தில் அமர்கையில்
பரபரப்பாய் புகை வண்டி
கூட்டம் கலைந்ததும்
மீண்டும் மௌனத்தில் நாம்
மழை தூறும் மாலைப் பொழுதில்
உனைக்காண வருகையில்
காற்றால் தழுவி
சருகால் வருடி
சாரலைப் பரிசளித்தாய்
ஆலும் அரசுமே நம் நண்பர்கள்
உன் மேல் காதலிருந்தாலும்
உனது நீண்ட நெடும் பாதையில்
உன்னுடன் இணைந்து
ஊர் எல்லை வரைதான்
நான் ஓடி வருவேன் -
பள்ளி செல்லும் பெண் பிள்ளைக்கு
ஆளில்லா ரயில் பாதையில்
தனியே என்ன வேலை என்பார்களே ?
கடிதம்
கவிஞன் என்றாய்
" கவிதைகள் ஐம்பது " என வெளியிட்டாய்
இரண்டு கிடைத்தது. மற்றவை?
புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும்
புரட்சி தலைப்பிட்டிருந்தாய்
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய்.
உணர்ச்சி பூர்வமானவன் கவிஞன் என
உருவேறியிருந்த எங்களுக்கு - நீ ஒரு
மின்சார தாக்குதல்.
சண்டையிடும் சகாக்கள் இருவரை
சலனமின்றி கடந்து
" சமூக நீதி " கவிதையை
சமூகத்திற்கு அர்பணித்தாய்.
முறுகக் காயும் வெயிலில்
பிச்சை கேட்ட
முதியவரை விரட்டி
கார் கண்ணாடி உயர்த்தி
" கருணை மழை" கவிதையை
கண் பார்வை அற்றோருக்காக என்றாய்.
வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை - பின்பு
எப்படி கவிஞனாவாய் ?
அடிப்படையில் மனிதனாகு
அதன் பிறகு கவிஞனாகலாம்.
அச்சக உரிமையாளரான நீ
கவிதை தொகுப்பென ஒன்று
தாராளமாய் வெளியிடலாம்
யாராலும் தடுக்க இயலாது - ஆனால்
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல்
1. அட்டையின் மேல் " அபாயம் " என்றும்
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் " உபயம் " என்றும்
அச்சிட வேண்டும்.
" கவிதைகள் ஐம்பது " என வெளியிட்டாய்
இரண்டு கிடைத்தது. மற்றவை?
புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும்
புரட்சி தலைப்பிட்டிருந்தாய்
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய்.
உணர்ச்சி பூர்வமானவன் கவிஞன் என
உருவேறியிருந்த எங்களுக்கு - நீ ஒரு
மின்சார தாக்குதல்.
சண்டையிடும் சகாக்கள் இருவரை
சலனமின்றி கடந்து
" சமூக நீதி " கவிதையை
சமூகத்திற்கு அர்பணித்தாய்.
முறுகக் காயும் வெயிலில்
பிச்சை கேட்ட
முதியவரை விரட்டி
கார் கண்ணாடி உயர்த்தி
" கருணை மழை" கவிதையை
கண் பார்வை அற்றோருக்காக என்றாய்.
வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை - பின்பு
எப்படி கவிஞனாவாய் ?
அடிப்படையில் மனிதனாகு
அதன் பிறகு கவிஞனாகலாம்.
அச்சக உரிமையாளரான நீ
கவிதை தொகுப்பென ஒன்று
தாராளமாய் வெளியிடலாம்
யாராலும் தடுக்க இயலாது - ஆனால்
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல்
1. அட்டையின் மேல் " அபாயம் " என்றும்
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் " உபயம் " என்றும்
அச்சிட வேண்டும்.
என் விருந்தாளி
சீராய் பெருக்கிய முற்றத்தில் - மீண்டும்
சின்னஞ்சிறு சிறகுகள்
இது அவற்றின் வேலை தான்.
முடிந்தவரை ஓரிரு சிறகுகள் - என்
முற்றத்து எல்லைக்குள் விழும்படி
கவனமாய் கோதி காற்றினில் அனுப்பும்
கூடத்து கண்ணாடியில் முகம் பார்த்து திரும்பும்.
சீவி சிங்காரிக்க என் வீடுதான் கிடைத்ததா ?
கோதுமை நிறத்தில் ஒன்று - மனைவி
அடர் நிறத்தில் ஒன்று - கணவன்
தம்பதியர் தங்க தடை ஏதுமில்லை என் வீட்டில்.
ஆனாலும் வேறு நல்ல வீடாய் பார்த்து கூடு கட்டி
அடிக்கடி வந்து போகும் என் முற்றம் தாண்டி.
என்றைக்கேனும் சில மணி அரிசிகளைச் சிதறுவேன்
சிறு அலகால் கொத்துவதை அருகிருந்து பார்ப்பேன்
ஆனால் இனி . . . கட்டாயம் பிடி அரிசி
தினம் தினம் சிதற வேண்டும் - ஏன் எனில்
கட்டுரையில் கரைந்திருந்தது இன்டியன் எக்ஸ்ப்ரஸ்
" "சிட்டுக் குருவி இனம் 80 விழுக்காடு அழிந்து விட்டது
மீதமுள்ளதோ வெறும் 20 விழுக்காடு மட்டுமே ""
கண்ணீர் உப்பிட்டு கைப்பிடி அரிசியை வைத்தேன் - ஏனோ
காணவில்லை இதுவரை என் சிட்டுக்களை.
சின்னஞ்சிறு சிறகுகள்
இது அவற்றின் வேலை தான்.
முடிந்தவரை ஓரிரு சிறகுகள் - என்
முற்றத்து எல்லைக்குள் விழும்படி
கவனமாய் கோதி காற்றினில் அனுப்பும்
கூடத்து கண்ணாடியில் முகம் பார்த்து திரும்பும்.
சீவி சிங்காரிக்க என் வீடுதான் கிடைத்ததா ?
கோதுமை நிறத்தில் ஒன்று - மனைவி
அடர் நிறத்தில் ஒன்று - கணவன்
தம்பதியர் தங்க தடை ஏதுமில்லை என் வீட்டில்.
ஆனாலும் வேறு நல்ல வீடாய் பார்த்து கூடு கட்டி
அடிக்கடி வந்து போகும் என் முற்றம் தாண்டி.
என்றைக்கேனும் சில மணி அரிசிகளைச் சிதறுவேன்
சிறு அலகால் கொத்துவதை அருகிருந்து பார்ப்பேன்
ஆனால் இனி . . . கட்டாயம் பிடி அரிசி
தினம் தினம் சிதற வேண்டும் - ஏன் எனில்
கட்டுரையில் கரைந்திருந்தது இன்டியன் எக்ஸ்ப்ரஸ்
" "சிட்டுக் குருவி இனம் 80 விழுக்காடு அழிந்து விட்டது
மீதமுள்ளதோ வெறும் 20 விழுக்காடு மட்டுமே ""
கண்ணீர் உப்பிட்டு கைப்பிடி அரிசியை வைத்தேன் - ஏனோ
காணவில்லை இதுவரை என் சிட்டுக்களை.
Subscribe to:
Posts (Atom)